Tuesday, August 31, 2004

மரத்தடி மண்டகப்படி - 5

on demand கவிதை எழுதி எனக்கு பழக்கம் இல்லை. கவிதை எழுத ஏதாவது கோபமோ, யோக்கியமானநேர்மையான, உணர்ச்சியோ இருக்க வேண்டும் என்பார் சுஜா(தாத்)தா. முதலாவது அர்த்தமில்லாமல் அதிகம் வந்தாலும், அயோக்கியத்தனம் அதிகமாகிக் கொண்டிருப்பதால் இரண்டாவது அதிகமாக வருவதில்லை. கவிதைஏன் எழுதவில்லை என்று என் நண்பன் ஒரு முறை கேட்டபோது " ரொம்பத் தளும்பலை. அதனால எழுதலை" என்று மகாகவி காளிதாசன் போல பதில் சொன்னேன்.

அது உண்மைதான்.

சரியான பயிற்சிகள் இல்லாமல்,முறையான இசை அறிவு இல்லாமல், பழந்தமிழ் இலக்கியம் பயிலாமல், வெறும் உணர்வு அடிப்படையில் வரி ஒடிக்கும்போது, அந்த உணர்வும் உண்மையாக இல்லாமல் கவிதை எழுதுவது தற்கொலைக்கு சமம். மீனாக்ஸ்,புகாரி, சேவியர், கற்பகம் போன்றவர்கள் இத்தனை கவிதை எழுதுகிறார்கள் என்றால், அத்தனை "தளும்புகிறது" என்றுதான் அர்த்தம்.

எனக்குப் பிடித்த சு.ரா வின் கவிதை ஒன்றை இங்கே தர விருப்பம்:


வாழ்க்கை
========

பாம்பைக் கண்டதும்
கல்லெடுத்தாய்
நான் கல்லானேன்.

வாளைக் கண்டதும்
வில்லை வளைத்தாய்
வாளுறை யானேன்

மதயானை வந்ததும்
அலறி யடித்தாய்
வாலிலூசல் பயின்றேன்

பின்னொரு நாள்
முச்சந்தியில்சறுக்கி விழுந்து
செத்தேன் நான்

செத்து செத்து
பிழைத்தாய் நீ
வாழ்ந்து வாழ்ந்து
அழிந்தேன் நான்.


ரத்தம் 'ஜூடா" இருக்கும்போது எழுதினது போல.

எனக்கு ரொம்ப பிடிச்சது.


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...