Tuesday, September 07, 2004

நன்றி

பெற்ற தாய்க்கும்
தமிழூட்டிய அப்பனுக்கும்
அறிவூட்டிய
ஆசிரியருக்கும்
நம்பிக்கை தரும்
அபிராமிக்கும்
தைரியம் தந்த
புத்தகங்களுக்கும்
மென்மையூட்டிய
கவிதைகளுக்கும்
அங்கீகாரம் தந்த
விகடன் தாத்தா
மற்றும்
ராயர் மாமாவுக்கும்
அலை பட்டு உருவம் மாறும்
கரையைப்போல
அடித்துத் திருத்தி
அணைத்துக் களித்து
புத்தி சொல்லும்
நேசர்களுக்கும்
துரோகத்தின்
வலியுணர்த்தியவர்க்கும்
இலவசமாக இணையத்தில்
இடம் தந்த
ப்ளாக்ஸ்பாட்டுக்கும்
இதயத்தில் இடம் தந்த
இனிய ஸஹ்ருதயர்க்கும்

என் நன்றிகள்.


இது என் இருநூறாவது பதிவு.


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...