Thursday, August 02, 2007

ஆனந்த அருண் வைத்யநாதன்



ஒரு காலத்தில் வலைப்பதிவுலகில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த அருண் வைத்யநாதனின் பேட்டி ஆனந்தவிகடனில்...


************************************


‘‘குறும்படங்கள் மூன்று நிமிட உலகம். ஒரு கதை, அதில் பின்னப்படும் உணர்வுகள், இறுதியாக ஒரு செய்தி இவற்றை மூன்றே நிமிடங்களில் தருகிற குறும்படத்தின் சவால் திரைப்படங்களில்கூட இல்லை. இப்போது, அமெரிக்காவில் குறும்படங்கள் பார்க்கிற கலாசாரம் பெருகி வருகிறது. மக்களிடம் வரவேற்பை பெறும் குறும்-படங்கள், பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப் பட்டு வெற்றி பெறுகின்றன. இந்தப் போக்கு இந்தியா-விலும் சீக்கிரம் வரவேண்டும். அப்படி வரும்பட்சத்தில் இன்னும் ஆரோக்கிய-மான, தீர்மானமாக வெற்றி பெறக்கூடிய சினிமாக்-கள் வர ஆரம்பிக்-கும்!’’& நம்பிக்கையாகப் பேசு-கிறார் அருண் வைத்திய-நாதன். அமெரிக்க குறும்பட உலகில் வெற்றித் தடம் பதித்திருக்கும் தமிழர்.



‘கிs ஹ்ஷீu ஷ்வீsலீ’, ‘ஙிக்ஷீ(ணீ)வீறீறீவீணீஸீt’, ‘ஷிtவீஸீளீவீஸீரீ நீவீரீணீக்ஷீ’ என அருண் முதன்முதலாக எடுத்த மூன்று குறும்படங்களில், முதல் இரண்டு படங்களும் நியூயார்க், லண்டனில் நடந்த குறும்படங்களுக்கான திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளன. தவிர, அருண் எடுத்த ‘ஜீஷீஷ்மீக்ஷீ நீut’, ‘திஷீக்ஷீரீவீஸ்மீஸீ’, ‘ழிஷீஷீsமீ’ ஆகிய குறும்படங்-களும் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஒளி-பரப்பாகி, வரவேற்பைப் பெற்றன. இவர் எடுத்த ‘ஷிமீணீஸீநீமீ’ என்கிற திகில் குறும்படம் 2006&ம் ஆண்டில் மட்டும் பத்து திரைப்பட விழாக்களில் விருது-களைக் குவித்திருக்கிறது.


‘‘குறும்படங்கள் என்றாலே ரொம்ப-வும் சீரியஸாக ஏதோ ஒரு சமூகப் பிரச்னையைப் பற்றி மட்டும் சொல்வது என்கிற நினைப்பு தான் நம்மில் பலருக்கும் இருக்கிறது. குறும்-படங்கள் சினிமாவின் குழந்தை. காமெடி, த்ரில்லிங், ரொமான்ஸ், திகில் என குறும்படங்களையே பலவிதங்களில் எடுக்க முடியும்’’ என்கிற அருண், இப்போது தமிழில் தன் முதல் திரைப்படத்தை இயக்க வருகிறார்.


‘‘அமெரிக்காவி-லேயே நடக்கிற மாதிரியான கதை. பொதுவா, அமெரிக்காவில் இருக்கிற தமிழர்கள்னா பெரிய பணக்-காரங்களா, கலாசாரத்தை மதிக்கத் தெரியாத-வங்களா, சுகவாசியா இருப்பாங்-கன்னுதான் நம்ம மக்கள் நினைச்சுட்டு இருக்காங்க. அமெரிக்காவில் வந்து எதிர்பாராத சிக்கல்ல மாட்டுற ஒரு தமிழ்க் குடும்பம் பத்தி ஒரு கதை தோணுச்சு. ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி எஸ்.பி.பி.சர-ணுக்கு மெயில்ல அனுப்பினேன். அதுவரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் அறிமுகமே கிடையாது.


அவருக்கு என் கதை பிடிச்சிருக்கவே, ‘நாம நிச்சயம் இந்தப் படம் பண்றோம்’னு சொல்லியிருக்கார். படத்துல மிக முக்கியமான வெளிநாட்டு கேரக்டர் ஒண்ணு உண்டு. அதுக்காக ஸ்பைடர் மேன் வில்லன் வில்லியம் டெஃபோ-கிட்ட பேசியிருக்-கேன். ‘என் கேரக்டர் ரொம்ப நல்லா இருக்குது. டைம் இருந்தா நிச்சயம் பண்-றேன்’னு சொல்லியிருக்கார். சீக்கிரமே படம் பத்தி அறிவிப்பு வரும்.


படத்தோட தலைப்பு... ‘‘அச்ச-முண்டு அச்சமுண்டு!’’


**************************


படம் சூப்பர் ஹிட் ஆகட்டும். தூள் கெளப்பு மாமே...!! ஏன்னா, உன் எழுத்துத் திறமையை விட உன் குறும்படங்களால் கவரப்பட்டவர்கள் அதிகம்...


 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...