Monday, July 27, 2009

அச்சமுண்டு அச்சமுண்டு


நான் பொதுவாக த்ரில்லர் படங்களை விரும்புவதில்லை. காரணம் பயந்து கொண்டே, ஒரு திடுக்கிடலுடன் படம் பார்க்க என் சுபாவம் ஒத்துழைக்காது. ”நூறாவது நாள்” படம் பார்க்கும்போது பய்ந்துகொண்டு பககத்தில் இருந்த சித்தப்பா பையன் மடியில் கண்களை இறுக மூடிக்கொண்டு தலையைப் பதித்துக் கொண்டது நினைவுக்கு வருகிறது.
இத்த்னையும் மீறி நேற்று Bay Area IMC6 ல் அச்சமுண்டு அச்சமுண்டு பார்த்தேன். பரிச்சயப்பட்ட மனிதர் எடுக்கும் முதல் முழுநீளப்படம் எப்படி வந்திருக்கிரது என்ற ஆர்வம் முக்கிய காரணம். நண்பர் அருண் வைத்தியநாதன் தமிழ் வலைப்பூவின் ஆரம்ப காலத்தில் மிக பாபுலரான தமிழ் வலைப்பதிவர். http://arunviews.blogspot.com/ என்ற வலைப்பதிவு நடத்தி வந்தார்.

ப்டத்தைப் பார்த்தபின், தமிழ் சினிமாவுக்கு கொஞ்சம் வன்முறை குறைந்த, வக்ரம்/பயங்கரம் குறைந்த, யதார்த்தம் மிகுந்த இன்னொரு கெளதம் மேனன் கிடைத்துவிட்டார் என்று சொல்லும் வகையில் படம் இருந்தது. எல்லா வயதினரும் பார்க்கத் தகுந்த முறையில், புதுமையான பின்புலத்தில், யாரும் தொடாத ஒரு சப்ஜெக்டை கொடுத்திருக்கிறார். அமெரிக்காவில் வாழ்வதால் கதையோடு இந்த அளவு ஒன்ற முடிந்ததா என்று தெரியவில்லை. சென்னை/தமிழ்நாட்டில் வாழும் நண்பர்கள் கருத்துக்ளை தெருந்து கொள்ள ஆவல். முதல் பார்வைக்கு மனதில் தங்கியவை.

* பரசன்னா சூப்பர். செம ஸ்மார்ட். குரல் மாடுலேஷனும், அடங்கிய - சற்றே தலையை பின்னிழுத்துக் கொண்டு சிரிக்கிற - சிரிப்பும் அவ்வப்போது கமலஹாஸனை நினைவு படுத்துகிறது. அமெரிக்காவில் வசிக்கிற தமிழ்நாட்டுப் பையனை அழகாக பிரதிபலித்து இருக்கிறார். இதற்கு முதலில் ஸ்ரீகாந்த் தேர்வாகி இருந்ததாக நினைவு. நல்ல வேளை.. :-)

* ஸ்நேகா நன்றாக நடித்திருக்கிறார். அடிக்கடி மயங்கி விழுகிற பயந்தாங்கொள்ளி குடும்பத்தரசிகளை ம்யூசியத்திலும், இம்மாதிரி படங்களிலும்தான் பார்க்க முடிகிறது. பளபளப்பு கொஞ்சம் மிஸ்ஸிங். ஆனாலும் ஆறு வயதுக் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்டதற்கு கங்கிராட்ஸ். காரணம் பிரசன்னாவோ என்று நினைக்க வைக்கிறது அவர்களது கொஞ்சல் மற்றும் நெருக்கம். :-)

* ஜான் ஷே - படத்தின் வில்லன். ஏயப்பா. கிட்டத்தட்ட படத்தின் நாயகனே இவர்தான் என்று சொல்லுமளவுக்கு இங்க்லீஷ் சத்யராஜ். இவர் வரும் காட்சிகள் குருரம் கலந்த இவர் நடிப்பால் மிளிர்கின்றன.

* கார்த்திக்ராஜா இசை ஓக்கெ என்று சொல்லுமளவுதான் இருக்கிறது. பல காட்சிகளில் பின்னனி இசை மிஸ்ஸிங். படத்தின் தீம் சாங் ( செளம்யா) தவிர மற்றவை படு சுமார். பிரசன்னா , ஸ்நேஹா குளு குளு டூயட் ஒன்றும், ஹிட்டான ஒரு பாட்டும் படத்துக்கு கொஞ்சம் வலு சேர்த்திருக்கும்.

* ஆரம்பக் காட்சிகளில் வரும் நகைச்சுவை பிற்பாடு அறவே இல்லை. படத்தின் இறுக்கம் குறைக்க வேண்டாம் என்று இயக்குநர் நினைத்து இருக்கலாம். அலுவலக நண்பன் மற்றும் அலுவலக் இந்தியக் குதிரைப் பெண் சம்பந்தமாக ஒரு லைட் / ஜொள் காமெடி ட்ராக் வைத்திருக்கலாம்

* மிக subtle ஆன ஒரு விஷயத்தையும் படத்தில் தொட்டு இருக்கிறார். அமெரிக்கா வரும் நம்மவர்களுக்கு நம்மவர்களை விட வெள்ளைக்காரர்களை ரொம்ப பிடிக்கும். வெள்லைத்தோலுக்கு அபிமானம் உள்ள ஏகப்பட்ட நண்பர்களை எனக்குத் தெரியும். அவர்களது பின்புலம் , கலாச்சாரம், மனநிலை தெரியாமல் அவர்களை 100% நம்பும் நம் வியாதியை படம் கோடிட்டுக் காட்டுகிறது.

* படம் கையைக் கடிக்காது . அமெரிக்கத் தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டு ஏ செண்டர்களில் கண்டிப்பாக ஓடும் . படத்தின் பட்ஜெட்டுக்கு சேதமில்லை.

* அருண் த்ரில்லர் படங்கள் மட்டுமே என்று முடிவு கட்டிவிட்டாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் மற்ற கதைக்களன்களிலும், தமிழ்நாட்டு பின்புலத்திலும் படம் எடுத்தால் தமிழ்நாடு ரசிகர்களின் மனதுக்கு(ம்) நெருக்கமானவராக ஆகலாம். திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதோடு , ஓவ்வோரு தமிழனின் மனத்திரையிலும் இவர் படம் ஓடினால் கனவு நிஜமாகும். வானம் வசப்படும்

அச்சமுண்டு அச்சமுண்டு - உச்சமுண்டு உச்சமுண்டு

Sunday, July 19, 2009

ஆனந்த தாண்டவம்




அமரர் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் கதை கோலிவுட் கோதண்டபாணிகளின் புண்ணியத்தில் சிதையாமல், முடமாகாமல் படமாகி இருக்கிறது. உயிரோடு இருந்திருந்தால் வாத்தியார் கொஞ்சம் சந்தோஷப்பட்டு இருப்பார். அவருடைய பழைய கதைகளை கோலிவுட் தோய்த்து காயப்போட்டது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்


முதல் பார்வைக்கு மனதில் தங்கியவை:


1. ஹீரோ வேஸ்ட். புது பையன். ரகு கேரக்டருக்கு உயிர் கொடுக்க தவறிவிட்டார். தனுஷை முயன்றிருக்கலாம்.


2. ஹீரோ அப்பா கிட்டி வேஸ்ட். கதையில் முக்கிய கேரக்டர் இது. பூர்ணமோ அல்லது நாசரோ பின்னி பெடல் எடுத்திருப்பார்கள். கிட்டி இயந்திரம் போல நடித்திருக்கிறார்.


3. தமன்னா .. ஹி..ஹீ . ஓகே. மதுமிதாவின் வெகுளித்தனமும், குழப்பமும், பின்னாளைய சோகமும் அவ்வளவு ரியலிஸ்டிக்காக வராவிட்டாலும் நிஜ கேரக்டருக்கு கொஞ்சம் அருகில் வரக்கூடிய நடிப்பு அவருடையதே. இந்த ஸ்டேட்மெண்டுக்கும் எனக்கு கல்லூரிக்கு அப்புறம் பர்சன்லாக தமன்னாவை பர்சனலாக பிடித்திருப்பதற்கும் சம்பந்தமில்லை.மீரா ஜாஸ்மின் இன்னமும் பெட்டராக செய்திருப்பார்.


4. தமன்னாவின் அமெரிக்க கணவனாக வரும் கேரக்டர் ஓகே. மில்லியன் தனம்/குரூரம்/மானிபுலேஷன் மூளை கொஞ்சம் மிஸ்ஸிங். யாங்கி பாஷை பேசுகிறேன் என்று செளகார்பேட் பாஷை பேசி இருக்கிறர்.கதையில் அந்தக் கெரக்டர் உச்சந்தலை சொட்டையை மறைத்திருப்பதாக வரும். படத்தில் இதற்காகவே சைட் டிஷ் தட்டு அளவுக்கு பின் மண்டையில் செயற்கையாக சிரைத்திருக்கிறார்கள் . அமெரிக்கா வந்த இந்திய மண்டையில் சொட்டை இப்படி இருக்காது. ;-)


5. ரத்னா கேடக்டர் அம்சம். அவள் ரகுவை கொஞ்சம் கொஞ்சமாக கரைப்பதை அழகாக எடுத்து இருக்கிறார்கள். அவள் வீடும், தமிழ்ச்சங்க விழாவும், நாட்டியமும் படு யதார்த்தம்.


6. ஜெயந்தி கேரக்டருக்கு சன் டிவியில் சைட் போஸில் காம்பியர் செய்யும் அம்மு. ஈஸ்வரி ராவ் / ராஜஸ்ரீ அசத்தி இருப்பார்.


7. இஞ்சினியர் கோபிநாத் அசல். அவரை ஏன் படத்தில் ”பறைய” விட்டார்கள் என்று தெரியவில்லை. கதையில் அவர் மலையாளி இல்லை. நடிப்பு பாந்தம்


மற்றபடி திரைக்கதை அமைப்பு தேவலை. லொகேஷன் சூப்பர். ரகுவுக்கும் மதுமிதாவுக்கும் இடையில் ஏற்படும் உடல் ரீதியான அட்ராக்‌ஷன் அவர்கள் காதல் ஏற்படும் ஆரம்ப கட்டங்களில் கதையில் ஊடுபாவாக பின்னி இருக்கும். திரையில் அதற்கான காட்சி அமைப்புகளை பாலுமகேந்திரா அழகாக பின்னி இருக்கலாம். - அது ஒரு கனாக்காலத்தில் செய்ததைப் போல். மேலும் கதையின் இரண்டு பாகங்களை ஒரே படத்துக்குள் சுருக்கியதால் கொஞ்சம் விரிவாக எடுக்க/ சொல்ல முடியாமல் போனது அதிகம். ட்ரீட்மெண்ட் பிசகி விட்டது.


இந்தக் கதையையே படித்திராத, சுஜாதவை தெரியவே தெரியாத எங்கள் குடும்ப நண்பர் படத்தினை பார்த்து விட்டு சொன்னார் - என்னயா படம் இது. அந்தப் பொண்ணு லூசு மாதிரி நடந்துக்குது” என்று


சிரித்துக் கொண்டேன்.







 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...