Saturday, October 01, 2022

பொன்னியின் செல்வன்  - 1 



 நம் தோட்டத்தில் செடி வளர்ப்போம். நமக்குத்  தெரிந்த அளவில் அதை பாதுகாத்து,  அதற்கு உரம் போட்டு, தண்ணீர் ஊற்றி, நிழல் பார்த்து வளர்த்த காய்களை வீட்டில் சமைத்து, சாப்பபிடும்போது - அந்த ருசியில் அல்ல - அந்த செயலில் ஒரு நிறைவு வருமே - அப்படி ஒரு நிறைவு பொன்னியின் செல்வன் பார்த்ததில். புத்தமங்கலத்து புண்ணியவான் கனவில் நிர்மாணித்த பொன்னுலகம் வெள்ளித்திரையில் நனவாகி இருக்கிறது. வாழ்த்துகள். 

  • த்ரிஷா, கார்த்தி, ஜெயராம் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பும், உடல் மொழியும், பார்வையும், அர்த்தமுள்ள மெளனங்களும் அருமை.  என்னளவில்,  இவர்கள் தனக்கு கொடுத்த வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார்கள்.
  • பிரகாஷ் ராஜ், சரத்குமார் , விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு - ஒகே. விக்ரம் சில பல படங்களின் சாயல் வர நடித்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு உடல் ஒத்துழைத்த அளவுக்கு குரல் மற்றும் கண்கள் ஒத்துழைகவில்லை. 
  • பூங்குழலியை கதையில் பார்த்தவர்கள் திரையில் பார்த்தால் ஏமாற்றமே வரும்  கத்தரிக்கு தப்பிய காட்சிகளில் அவள் குண விசேஷம் வெளிப்படவே இல்லை 
  • பார்த்திபன், ரகுமான், அஷ்வின் , மோகன் ராமன், நிழல்கள் ரவி போன்றோர் அய்யோ பாவம் ரகம். மோகன் ராமனுக்கு  அநிருத்தரின் தலைப்பாகையும் இல்லை. மிடுக்கும் மிஸ்ஸிங். 
  • வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானுக்கும் கதையில் ஒரு சிநேகபாவமான உறவு இருக்கும். படத்தில் வந்தியன், திருமலையை கொஞ்சம் முரட்டுத்தனமாக நடத்துவது போல் இருந்தது. ஒரு வேளை தமிழ்நாட்டில் ரசிகர்களுக்கு இது பிடிக்கும் என்று மணி நினைத்தாரோ? ;-) போலவே, இலங்கை அரசர்கள் எல்லாம் ஜேப்படித் திருடர் களையோடு இருக்கிறார்கள். 
  • பல நடிகர்களை கண்டு கொள்வதே பெரிய பாடாக இருந்தது. தாடிக்குள் தோண்டி எடுத்து பார்த்ததில் கிஷோர் மட்டும் புலனானது. ரியாஸ் கான், லால், மற்றும் பலரை அகழ்ந்து எடுத்தால் சொல்லுங்கள். 
  • சாய் பல்லவி, நயனதாரா, அஞ்சலி, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், பசுபதி, சமுத்திரக்கனி, விஜய் சேதுபதி, சத்யராஜ், மாதவன், பிரசன்னா, அர்விந்த் சாமி, சித்தார்த் போன்றோர்கள் பாத்திர வடிவமைப்பின் போது மணியின் நினைவில் வந்தார்களா என்று தெரியவில்லை. 
  • வசன உச்சரிப்பு பல பாத்திரங்களுக்கு, பல இடங்களில் ததிங்கிணதோம். ஆனால் நவயுக தமிழனுக்கு அது பெரிய குறையாக தெரிய வாய்ப்பில்லை. அதே போலவெ கதையை படித்த தலைமுறைக்கு இந்த படம் நெஞ்சில் ஒட்டுவது போல, படிக்காதவர்களுக்கு புரியுமா/ பிடிக்குமா என்று விளங்கவில்லை. வசூலானால் சரி. அத்தனை செலவு செய்யாததால் லைகா will like it. ;-) 
  • ஏ ஆர் ரஹ்மான் படத்தினை “ரோமாபுரி பாண்டியன்”  என்று நினத்தாரோ என்னவோ, பொன்னியன் செல்வன் பிஜிஎம் மில் நிறைய அன்னிய வாடை. இளையராஜா செய்திருந்தால், இசையின்  தாக்கம் படத்துக்கு வேறு உயரத்தினை  அளித்திருக்கும். 
  • ஜெயமோகன் பேனா பல இடங்களில் அமரர் கல்கியின் ஒரிஜினல் வசனங்களை எடுத்தாண்டிருக்கிறது. வணிக சினிமாவுக்கு, வணிக எழுத்தாளர் வசனம்தான் ஒத்து வரும் என்று ஆசான் கண்டுணர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். :-) 
  • குமரவேல், மணி மற்றும் ஆசானின் திட்டமிடலை மீறியும் பல இடங்களில் கதையோட்டத்தில் தொய்வு இருந்தது. 
  • படத்தின் ஆகப்பெரிய பலம் மணிரத்னம். ஒரு வாசக மனநிலையில் இருந்து, இந்தக் கதையை தான் பார்த்த,  தான் புரிந்து கொண்ட விதத்தில் , தன் திரைமொழியுடன் படத்தில் கொடுத்திருக்கிறார். அந்த தைரியத்துக்கு என் தலைவணக்கம்.  
  • கல்கியின் தாக்கம் தலைமுறை கடந்தும் வீரியம் பெரிதும் இழக்காமல் திரையில் மலர்ந்திருக்கிறது 
பொன்னியன் செல்வன் இரண்டாம் பகுதிக்கும்,  பிறகு சிவகாமியின் சபதத்திற்கும் காத்திருகிறேன். :-) 


Sunday, June 26, 2022

 அவர்கள் 


கலவர முடிவில் 

ராமனுக்கு கோவில் 

கட்டும்போதும் 

காஷ்மிரை சிறைக்குள்

தள்ளிய போதும் 

சமூகநீதிக்கு சததமில்லாமல் 

சங்கூதிய போதும் 

சாவர்க்கருக்கும்

கோட்சேவுக்கும்

பரிந்த போதும்  

எமக்கு பதறவில்லை 

தத்தித் தத்தி

திருக்குறள் ஓதும்போதும் 

இசுலாமிய பட்டியலின ஆட்களை

 கட்சியிலும் ஆட்சியிலும் 

தேடித்தேடி 

சேர்க்கும் போதும் 

எமக்கு கலவரம் வருகிறது. 


விராட பருவத்தில் விலை போன

விபீஷணி 

துரியோதனின் துடையேறி அமர்ந்த 

பாஞ்சாலி 

துரோகத்திற்கு துணைபோகும் 

தூண்டிற்புழு  

பட்டியலின மலைவாழ் 

மக்களுக்காய் உறும மறந்த 

திரெளபதி முர்மு. 

விநோதமான பெயர் என்கிறார்கள் 

ராம்நாத் கோவிந்தையும் 

எல் முருகனையும் 

கிருஷ்ணசாமியையும் 

அர்ஜுன் சம்பத்தையும் 

நினைத்துக்கொள்ளுங்க:ள் 

பெயரில் என்ன இருக்கிறது. 

வடதேச வியாபாரிகளுக்கு 

இவர்கள் வெறும் 

தொழிற்படு பொருட்கள்.  


Saturday, June 11, 2022


 விக்ரம் கமலின் நெடுநாளைய மெகா-வசூல் கனவை நனவாக்கி இருக்கிறது. வாழ்த்துக்கள்.   ஆனால் கமல் ரசிகனாக எனக்கு இது  மனசுக்கு உகந்த படமில்லை. வசூலுக்காக  எத்தனை நிறைய சமரசங்கள் ??!! - முதல் பாதி அவர் இல்லவே இல்லை. கமல் ஊமையோ  என்று கூட நினைத்தேன். இரண்டாம் பாதியில் கொஞ்சம்  ஈடு கட்டி  விட்டார். 

ஆனாலும் கூட ரொம்ப conscious ஆக  underplay செய்வது போல் ஒரு பரிதாபம். சிவாஜிக்கு கடைசி காலத்தில் நிகழ்ந்தது - ஒரு ரூவா குடுத்தா நால் ரூவாக்கு நடிக்கிறாருப்பா - தனக்கும் நிகழ்ந்து விடக் கூடாது என்கிற அதீத எச்சரிக்கையுடன் நடந்து கொண்டது போல ஒரு தோணல்.  

de-ageing டெக்னாலஜி உபயோகித்து இருப்பதாக சொன்னார்களே ? யாருக்கு?  

பழைய சகாக்களை கொண்டே வரணும் போல ஒரே அழிச்சாட்டியமா.. அதுவும் பேர் கூட  உப்பிலி.  ( ராமன்,  முகுந்தன்  எல்லாம் எங்கப்பா? ;-) ) 

நடிப்பில் மட்டும் அல்ல- படத்தின் ஆக்கத்திலும் விலகி - ஒரு தயாரிப்பாளர் நிற்கக்கூடிய தூரத்திலேயே -  இதில்  நின்றிருக்கிறார். அய்யோ பாவம். திரைக்கதையில் கமல் கை வைத்திருந்தால் விஸ்வரூபம்-1 ல் நிகழ்ந்தது போல ஒரு அற்புதம் நிகழ்ந்திருக்கும். இப்போது போல கொஞ்சம்  “பஜ்” ஜென்று இருந்திருக்காது. 

பஹத் பாசிலுக்கு நல்ல ரோல்தான். ஆனால் எல்லோரும் தூக்கி வைத்து கொண்டாடுவது போல அத்தனை பெரிய அப்பாடக்கர் இல்லை. கொஞ்சம் உடம்பை தேத்தி இருக்கனுமோ? ஏதோ மிஸ்ஸிங் . சில இடங்களில் அந்த அகோர இளிப்பு மட்டும் அற்புதம். 

”மெகா சைஸ்” விஜய் சேதுபதியும் கொஞ்சம் ஏமாற்றம்தான்.  வில்லன் ரோல்களும் வரவர போர் அடிக்கிறது . மாத்தி யோசி மசெ. 

ஸ்வாதிஷ்டா  களை. உடம்பை குறைத்தால்  நன்றாக இருக்கும் என்கிறான் தோழன். எனக்கு என்னவோ அப்படி தோன்றவில்லை. ஃபகத்துக்கு ஜோடியாக காயத்ரியை எங்கே பிடித்தார்களோ. லக்கி

ஏஜெண்ட்  டீணா எதிர்பார்த்த சீன் தான். எனவே புஸ்வரூபம். 

காளிதாஸ் ஜெயராமும் இந்தப் படத்தில் இருக்கிறார். அவர் ”நடித்த”  போர்ஷன்கள் கத்திக்கு இரையாகிவிட்டது போல. 

நரேன்-  ரொம்ப பாவம். 

எல்லோரும்ம் சொல்வதை போல ரோலக்ஸ் ரோலுக்கு  ரஜினி வந்திருந்தால் நம் மண்டைக்கு ரத்தம் பாய்ந்திருக்கும். கமல் கருணாநிதி மாதிரி. யோசித்து தான்  செய்திருப்பார் ;-)  அட்லீஸ்ட் சத்ய்ராஜ் வந்திருக்கலாம். 

அநிருத் பேபிக்கு இது காலம்.  அடித்து ஆடுகிறது அந்த ஊசிப்பட்டாசு. போற போக்கைப் பாத்தால்  கீர்த்தி சுரேஷை லாவிக்கொண்டு போய்விடும் போல  இந்த நட்டுவைத்த நட்ராஜ் பென்சில்

படம் நன்றாக ஓடுவதால், இந்த படம் எல்லோருக்கும் புரிந்து விட்டது என்று நான் நம்பவில்லை. அவரவர்க்கு வசதியான channelல் , அவரவர் மலர்நீட்ட  உயரத்தில் கண்டு  களிக்குமாறு டைரக்டர் வெங்காய வேலை பார்த்திருக்கிறார். That is Brilliant 

இதன் விளைவாக : 

மருதநாயகம் தூசி தட்டப்பட்டால் மகிழ்ச்சி 

மக்கள் நீதி  மையம் கொஞ்சம் அமைதியானால் மகிழ்ச்சி 

புதிய திறமையாளர்களுக்கு இந்த வெற்றியின் விளைவால்,  ராஜ்கமல் வாய்ப்பு வழங்கினால் சந்தோஷம். 

இந்த LCU மூலம் சினிமாவே சீரியல் ஆகி தொழில் தழைத்தால் உன்னதம். 

விக்ரோம்... தட்ரோம் .. தூக்ரோம். 

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...