Sunday, June 26, 2022

 அவர்கள் 


கலவர முடிவில் 

ராமனுக்கு கோவில் 

கட்டும்போதும் 

காஷ்மிரை சிறைக்குள்

தள்ளிய போதும் 

சமூகநீதிக்கு சததமில்லாமல் 

சங்கூதிய போதும் 

சாவர்க்கருக்கும்

கோட்சேவுக்கும்

பரிந்த போதும்  

எமக்கு பதறவில்லை 

தத்தித் தத்தி

திருக்குறள் ஓதும்போதும் 

இசுலாமிய பட்டியலின ஆட்களை

 கட்சியிலும் ஆட்சியிலும் 

தேடித்தேடி 

சேர்க்கும் போதும் 

எமக்கு கலவரம் வருகிறது. 


விராட பருவத்தில் விலை போன

விபீஷணி 

துரியோதனின் துடையேறி அமர்ந்த 

பாஞ்சாலி 

துரோகத்திற்கு துணைபோகும் 

தூண்டிற்புழு  

பட்டியலின மலைவாழ் 

மக்களுக்காய் உறும மறந்த 

திரெளபதி முர்மு. 

விநோதமான பெயர் என்கிறார்கள் 

ராம்நாத் கோவிந்தையும் 

எல் முருகனையும் 

கிருஷ்ணசாமியையும் 

அர்ஜுன் சம்பத்தையும் 

நினைத்துக்கொள்ளுங்க:ள் 

பெயரில் என்ன இருக்கிறது. 

வடதேச வியாபாரிகளுக்கு 

இவர்கள் வெறும் 

தொழிற்படு பொருட்கள்.  


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...