சன் டீவி சிட்டிபாபு கூட இதைப் போல முயற்சிக்கலாம். கொஞ்ச நாளில் கட்டாயம் நடக்க வாய்ப்பிருக்கிறது.
அமெரிக்க ரேடியோ நிகழ்ச்சி ஒன்றின் ஜாக்கி ஒருவருக்கு நேயர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. அழைத்த பெண் நேயர், தன் கணவனின் சமீபகால நடவடிக்கையைப் பற்றி புகார் செய்கிறார். தன் கணவர் சமீபகாலமாகவே வெகு அமெரிக்கராக நடந்து கொள்வதாகவும், தங்களிடையே கொஞ்ச நாட்களாகவே இணக்கமான உறவு இல்லாததாகவும் சொல்கிறார். தன் கணவர் எங்கேயாவது "கன்னம்" வைக்கிறாரா என்று சந்தேகமாக இருப்பதாகவும், அந்த ரேடியோ ஜாக்கி அதை துப்பறிந்து சொல்லவுமாக வேண்டுகொள் வைக்கிறார். சம்பந்தப்பட்ட கணவனும் மனைவியும் இந்தியர்கள்.
மிகுதியை இங்கே கேளுங்கள்.
உண்மையாகவே நடந்ததோ, செட்டப்போ, விஷயம் அது அல்ல.. இதில் மறைந்து கிடைக்கின்றன ஏராளமான விஷயங்கள்.
இப்போது சொல்லுங்கள். இது போல இந்தியாவில் நடக்குமா..?? நம்ம மக்கள் அவ்வளவு இலகுவாக ஏமாறக்கூடியவர்களா..??
Wednesday, February 28, 2007
Thursday, February 15, 2007
இறக்கும் இதயம்
நடுத்தர வர்க்கக் கனவுகளை நனவாக்க
திரைகடலோடினாய்
உவகை கொண்டோம்
பழகுவோர் போற்றும்
கனிவு மிகக் கொண்டாய்
கருணையே மனித உருவெடுத்ததாய்
கடவுளுக்கு நன்றி சொன்னோம்
கண்டே இராதோர் கூட வியக்கும்
கல்யாணகுணம் உனக்கென்று
களிப்பு மிகவடைந்தோம்
செய்யும் சாதனைகளால் அடையாளம்
காட்டப்பட வேண்டுமென்று
திரைமறைவில் இயங்கிவந்தாய்
யாருக்கும் எதிர்ப்பு இல்லை என்பதனை
இறுதி மூச்சுவரை வாழ்ந்துவிட்டு
உறங்கியே மீளாஉறக்கம் கொண்டாய்
இறப்பிற்கு பின்னும் உன்னை
அவன் என்றே அழைத்து எழுதிய
நாங்கள் .......
கார்கோ டெலிவரியி(னா)ல்
அவன் வருவதில் தாமதம்
என்றெழுதும் போது கதறினோம்
சமுத்திரத்தை சதுரப்பெட்டிக்குள்
அடைக்கப் போகிறார்களாம்....
தானாய் வந்து இறங்கியவனை
பெட்டிக்குள் வைத்து
தள்ளிவரப் போகிறார்களாம்...
வரும்தோறும் பெட்டி திறந்து
எங்களுக்கெல்லாம்அள்ளித் தந்தவனை
பெட்டி திறந்து
கொள்ளி வைக்கப் போகிறார்களாம்
கடல் கடந்து உடல் வருவதாய்
சேதி வந்திருக்கிறது
உன் புனைபெயரின் மெல்லினம்
வல்லினமாகி உன் முடிவை
அறைகூவி இருக்கின்றது
ஒக்க மடிந்ததடி ஊடுருவ வெந்ததடி
கற்கோட்டை எல்லாம் கரிக்கோட்டை ஆச்சுதடி
என்பனவெல்லாம்
மாளும் உடல்களுக்கு மட்டுமல்ல
உனைப் பிரிந்து வாழும்
உள்ளங்களுக்கும்தான் .........
திரைகடலோடினாய்
உவகை கொண்டோம்
பழகுவோர் போற்றும்
கனிவு மிகக் கொண்டாய்
கருணையே மனித உருவெடுத்ததாய்
கடவுளுக்கு நன்றி சொன்னோம்
கண்டே இராதோர் கூட வியக்கும்
கல்யாணகுணம் உனக்கென்று
களிப்பு மிகவடைந்தோம்
செய்யும் சாதனைகளால் அடையாளம்
காட்டப்பட வேண்டுமென்று
திரைமறைவில் இயங்கிவந்தாய்
யாருக்கும் எதிர்ப்பு இல்லை என்பதனை
இறுதி மூச்சுவரை வாழ்ந்துவிட்டு
உறங்கியே மீளாஉறக்கம் கொண்டாய்
இறப்பிற்கு பின்னும் உன்னை
அவன் என்றே அழைத்து எழுதிய
நாங்கள் .......
கார்கோ டெலிவரியி(னா)ல்
அவன் வருவதில் தாமதம்
என்றெழுதும் போது கதறினோம்
சமுத்திரத்தை சதுரப்பெட்டிக்குள்
அடைக்கப் போகிறார்களாம்....
தானாய் வந்து இறங்கியவனை
பெட்டிக்குள் வைத்து
தள்ளிவரப் போகிறார்களாம்...
வரும்தோறும் பெட்டி திறந்து
எங்களுக்கெல்லாம்அள்ளித் தந்தவனை
பெட்டி திறந்து
கொள்ளி வைக்கப் போகிறார்களாம்
கடல் கடந்து உடல் வருவதாய்
சேதி வந்திருக்கிறது
உன் புனைபெயரின் மெல்லினம்
வல்லினமாகி உன் முடிவை
அறைகூவி இருக்கின்றது
ஒக்க மடிந்ததடி ஊடுருவ வெந்ததடி
கற்கோட்டை எல்லாம் கரிக்கோட்டை ஆச்சுதடி
என்பனவெல்லாம்
மாளும் உடல்களுக்கு மட்டுமல்ல
உனைப் பிரிந்து வாழும்
உள்ளங்களுக்கும்தான் .........
Saturday, February 10, 2007
Eternal Sunshine of the Spotless Mind

ரொம்ப நாட்களாகவே பார்க்க வேண்டும் என்று நினைத்து வைத்திருந்த படம்
ஜிம் கேரியும், கேட் வின்ஸ்லெட்டும் நடித்த படம்.
அலுவலக வேலைப்பளுவால் ஒரு வாரமாக அலமாரியில் தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு முறை பார்க்க ஆரம்பித்து, டைட்டில் ஓடுவதற்குள்ளேயே தூங்கிப் போய் விட்டேன். திருப்பித் தரவேண்டிய நாள் வரவும், அவசர அவசரமாக முதல் நாள் இரவு பார்த்தேன்.
ஒரு சாதாரண கதைக்கு, கொஞ்சம் சயின்ஸ் ஃபிக்ஷன் மசாலா தூவி, அதை மிக வித்தியாசமான முறையில் பரிமாறி இருக்கிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி Pause பண்ணிவிட்டு, இது நான் நினைப்பதுதானா என்று வீட்டு அம்மணியிடம் ருசுப்படுத்தி விட்டு பார்க்க வேண்டி இருந்தது மொத்தப் படமும்.
பீச் பார்ட்டியில் ஒரு பெண்ணை சந்திக்கிறார் ஹீரோ. காதலாகி சேர்ந்து கொஞ்ச நாள் ஊர் சுற்றுகிறார்கள். பிறகு சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து போகிற அந்தப் பெண் சும்மா இருக்காமல், டாக்டரிடம் போய் தன் மூளையில் ஹீரோவை பற்றிய ஞாபகமே இல்லாமல் போகும்படியான சிகிச்சை செய்து கொள்கிறாள். அடுத்த நாள காலை, தன்னைப் பார்க்க வரும் ஹீரோவை அவள் "நீ யார்..? " என்று கேட்க ஸாருக்கு அதிர்ச்சி. கொஞ்ச நாள் பின்னாலேயே மடிநாய் மாதிரி சுற்றிக் கொண்டிருந்துவிட்டு கழிவிரக்கம் தாங்காமல் தானும் அந்த சிகிச்சை மேற்கொள்ள அதே டாக்டரிடம் செல்ல,
சிகிச்சை நடபெறும்போதே அவள் மேல் உள்ள காதலால் அடிமனது அந்த சிகிச்சைக்கு எதிராக ஆகிவிட, சிகிச்சையை ஏகப்பட்ட கஷ்டத்தோடு முடிக்கிறார்கள் டாக்டர் குழுவினர்.
இதற்கிடையே டாக்டர் கிளினிக்கில் வேலை பார்க்கும் ஒருவன், இவர்களுக்கு இடையேயான நேயத்தை புரிந்து கொண்டு, ஹீரோ கொண்டுவந்திருக்கிற அந்தப் பெண் சம்பந்தப்பட்ட கடிதங்கள்/ பரிசுப் பொருட்கள் துணையுடன் அந்தப் பெண்ணை அடைய முயற்சிக்கிறான். டாக்டரே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணை உபயோகித்து விட்டு அவளையும் அதே சிகிச்சையின் மூலம் "அலம்பி" விடுகிற டைப்தான். விஷயம் தெரிகிற அந்தப் பெண் தாம் இத்தனை நாள் டாகடரின் செயல்களுக்கு உடைந்தையாக இருந்த பாவத்தைக் கழுவ, சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன் எல்லா நோயாளிகளிடமும் பேசி பதிவு செய்யப்பட்ட பழைய வாழ்வு பற்றிய ஒளி நாடாக்களை எல்லோருக்கும் சப்ஜாடாக அனுப்பி விடுகிறது
சிகிச்சை முடிந்து வந்த ஹீரோ ஹீரோயின், விட்ட குறை தொட்ட குறையாக மனசுள் ஊறிப்போயிருக்கும் உறவின் மிச்சங்களால் மறுபடி ட்ரெயினில் அகஸ்மாத்தாக சந்தித்து, மறுபடி காதலாக மாறக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ள உறவு நிலையில் பழகிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அந்த டாக்டர் பெண் அனுப்பி வைக்கும் ஒலி நாடா வருகிறது.
மிகுதி வெள்ளித்திரையில்.........
மேற்சொன்ன கதையச் சொலவதற்கு நாம் எடுக்கும் பிரயத்தினங்கள், புரிந்து கொள்ள மெனக்கெடும் முயற்சிகளுக்காகவது படத்தை சிலாகிக்க வேண்டி இருக்கிறது. பக்கம் பக்கமாக சிக்கல் கதை எழுதி, சுக்கல் சுக்கலாக கிழித்து விட்டு அதை யாரிடமோ வரிசைப் படுத்தி படிக்கச் சொல்லியது போல் இருக்கிறது படம். பன்னெண்டாவது படிக்கும் போது என் கணக்கு வத்தியார் பி.எம்.சங்கரன் வகுப்பில் கணக்கு ஃபார்முலா கேட்பார்.
மறந்து போய் சொல்லா விட்டால், அவரே நினைவு படுத்தி விட்டு, இனிமே மறப்பியா தம்பி..?? என்பார். நாம் " மறக்க மாட்டேன் சார்" என்று பரிதாபமாக தலையாட்டினால், சிரித்துக் கொண்டே "இல்ல தம்பி ..மறந்துரு. பரிட்சை எழுதி முடிச்சிட்டு மறந்துரு. மறதி இல்லாட்டி உலகத்துல ரொம்ப கஷ்டம்
தம்பி" என்பார். சத்தியமான உண்மை.
இந்தப் படத்தினை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் எஸ்.ஜே சூர்யாவின் "அ..ஆ " என்று சொன்ன நண்பரை தேடு தேடு என்று தேடிக் கொண்டிருக்கிறேன் - உதைக்க
ஜிம் கேரியும், கேட் வின்ஸ்லெட்டும் நடித்த படம்.
அலுவலக வேலைப்பளுவால் ஒரு வாரமாக அலமாரியில் தூங்கிக் கொண்டிருந்தது. ஒரு முறை பார்க்க ஆரம்பித்து, டைட்டில் ஓடுவதற்குள்ளேயே தூங்கிப் போய் விட்டேன். திருப்பித் தரவேண்டிய நாள் வரவும், அவசர அவசரமாக முதல் நாள் இரவு பார்த்தேன்.
ஒரு சாதாரண கதைக்கு, கொஞ்சம் சயின்ஸ் ஃபிக்ஷன் மசாலா தூவி, அதை மிக வித்தியாசமான முறையில் பரிமாறி இருக்கிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி Pause பண்ணிவிட்டு, இது நான் நினைப்பதுதானா என்று வீட்டு அம்மணியிடம் ருசுப்படுத்தி விட்டு பார்க்க வேண்டி இருந்தது மொத்தப் படமும்.
பீச் பார்ட்டியில் ஒரு பெண்ணை சந்திக்கிறார் ஹீரோ. காதலாகி சேர்ந்து கொஞ்ச நாள் ஊர் சுற்றுகிறார்கள். பிறகு சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து போகிற அந்தப் பெண் சும்மா இருக்காமல், டாக்டரிடம் போய் தன் மூளையில் ஹீரோவை பற்றிய ஞாபகமே இல்லாமல் போகும்படியான சிகிச்சை செய்து கொள்கிறாள். அடுத்த நாள காலை, தன்னைப் பார்க்க வரும் ஹீரோவை அவள் "நீ யார்..? " என்று கேட்க ஸாருக்கு அதிர்ச்சி. கொஞ்ச நாள் பின்னாலேயே மடிநாய் மாதிரி சுற்றிக் கொண்டிருந்துவிட்டு கழிவிரக்கம் தாங்காமல் தானும் அந்த சிகிச்சை மேற்கொள்ள அதே டாக்டரிடம் செல்ல,
சிகிச்சை நடபெறும்போதே அவள் மேல் உள்ள காதலால் அடிமனது அந்த சிகிச்சைக்கு எதிராக ஆகிவிட, சிகிச்சையை ஏகப்பட்ட கஷ்டத்தோடு முடிக்கிறார்கள் டாக்டர் குழுவினர்.
இதற்கிடையே டாக்டர் கிளினிக்கில் வேலை பார்க்கும் ஒருவன், இவர்களுக்கு இடையேயான நேயத்தை புரிந்து கொண்டு, ஹீரோ கொண்டுவந்திருக்கிற அந்தப் பெண் சம்பந்தப்பட்ட கடிதங்கள்/ பரிசுப் பொருட்கள் துணையுடன் அந்தப் பெண்ணை அடைய முயற்சிக்கிறான். டாக்டரே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணை உபயோகித்து விட்டு அவளையும் அதே சிகிச்சையின் மூலம் "அலம்பி" விடுகிற டைப்தான். விஷயம் தெரிகிற அந்தப் பெண் தாம் இத்தனை நாள் டாகடரின் செயல்களுக்கு உடைந்தையாக இருந்த பாவத்தைக் கழுவ, சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு முன் எல்லா நோயாளிகளிடமும் பேசி பதிவு செய்யப்பட்ட பழைய வாழ்வு பற்றிய ஒளி நாடாக்களை எல்லோருக்கும் சப்ஜாடாக அனுப்பி விடுகிறது
சிகிச்சை முடிந்து வந்த ஹீரோ ஹீரோயின், விட்ட குறை தொட்ட குறையாக மனசுள் ஊறிப்போயிருக்கும் உறவின் மிச்சங்களால் மறுபடி ட்ரெயினில் அகஸ்மாத்தாக சந்தித்து, மறுபடி காதலாக மாறக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ள உறவு நிலையில் பழகிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அந்த டாக்டர் பெண் அனுப்பி வைக்கும் ஒலி நாடா வருகிறது.
மிகுதி வெள்ளித்திரையில்.........
மேற்சொன்ன கதையச் சொலவதற்கு நாம் எடுக்கும் பிரயத்தினங்கள், புரிந்து கொள்ள மெனக்கெடும் முயற்சிகளுக்காகவது படத்தை சிலாகிக்க வேண்டி இருக்கிறது. பக்கம் பக்கமாக சிக்கல் கதை எழுதி, சுக்கல் சுக்கலாக கிழித்து விட்டு அதை யாரிடமோ வரிசைப் படுத்தி படிக்கச் சொல்லியது போல் இருக்கிறது படம். பன்னெண்டாவது படிக்கும் போது என் கணக்கு வத்தியார் பி.எம்.சங்கரன் வகுப்பில் கணக்கு ஃபார்முலா கேட்பார்.
மறந்து போய் சொல்லா விட்டால், அவரே நினைவு படுத்தி விட்டு, இனிமே மறப்பியா தம்பி..?? என்பார். நாம் " மறக்க மாட்டேன் சார்" என்று பரிதாபமாக தலையாட்டினால், சிரித்துக் கொண்டே "இல்ல தம்பி ..மறந்துரு. பரிட்சை எழுதி முடிச்சிட்டு மறந்துரு. மறதி இல்லாட்டி உலகத்துல ரொம்ப கஷ்டம்
தம்பி" என்பார். சத்தியமான உண்மை.
இந்தப் படத்தினை தழுவி எடுக்கப்பட்ட படம்தான் எஸ்.ஜே சூர்யாவின் "அ..ஆ " என்று சொன்ன நண்பரை தேடு தேடு என்று தேடிக் கொண்டிருக்கிறேன் - உதைக்க
Wednesday, January 10, 2007
நிஜ ரோஜா ரதிதேவி
கலைஞர் டீ.ஆர்.பாலு மூலமாக பேசுகிறாராம்...
வை.கோ சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மூலமாக பேசுகிறாராம்.
சிவராஜ் பாட்டீல் அஸ்ஸாம் காவல்துறையுடன் பேசுகிறாராம்.

ஆச்சு. பதினெட்டு நாள். சிவகாசி கரிசல்குளம் கணேசன் குடும்பம் அல்லாடிக் கொண்டு இருக்கிறது. குடியரசுத் தலைவர் அண்ணனுக்கு மனு கொடுக்க (?!!!)ராமேஸ்வரம் போகிறார்கள். குழந்தைகளுக்கு பதில் சொல்லி மாளவில்லை. செல்போனில் பேசும் தீவிரவாதிகளுக்கு பேசவும், அந்த தகவலை கணேசனின் உயரதிகாரிகளுக்கு தரவும் நேரம் சரியாக இருக்கிறது. பிணைத்தொகை மூணு கோடி. என் சகோதரியின் கணவர் சந்திரஹாசன் கணேசனின் உயரதிகாரிகளுல் ஒருவர். கடந்த பதினைந்து நாட்களாக அவர்கள் யூனிட்டே அல்லோலகலோலப் பட்டுக் கொண்டிருக்கிறதாம்.

எல்லா எழவும் போகட்டும். என்ன சித்தாந்தத்துக்காவது அந்த தீவிரவாதிகள் போராடிக் கொள்ளட்டும். அதுக்கு ஒரு அப்பாவி சிவில் இஞ்சினியர்தான் தான் கிடைத்தானா..?? பணம் வேணுன்னா பாங்க்கை கொள்ளையடி. ஏதாவது பெரிய அரசாங்க பதவியில் இருக்கிற அரசியல்வாதியைக் கடத்து. அவனுக்கு இருக்கிற பவர் கொஞ்சம் மீடியா வெளிச்சமாவது கொண்டுதரும். ஒரு கருமமும் இல்லாம ஒரு செமி ராணுவ ஆசாமியை பிடிச்சு வச்சுகிட்டு, கோடி கோடியா கேட்டா எங்க போறது. அரச இயந்திரத்தோட ஒரு கடைகோடி பல்சக்கரம் மாட்டிக்கிச்சுன்னு எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணப் போறாங்க. ரோஜா மாதிரி ஒரு படம் நல்லா ஓடிச்சுன்னா நாமல்லாம் நல்லா கை தட்டிப் பாக்கலாம். வேற ஏதாச்சும் முடியுமோ..??
விடை தெரியாத கேள்விகள்...
வை.கோ சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மூலமாக பேசுகிறாராம்.
சிவராஜ் பாட்டீல் அஸ்ஸாம் காவல்துறையுடன் பேசுகிறாராம்.
ஆச்சு. பதினெட்டு நாள். சிவகாசி கரிசல்குளம் கணேசன் குடும்பம் அல்லாடிக் கொண்டு இருக்கிறது. குடியரசுத் தலைவர் அண்ணனுக்கு மனு கொடுக்க (?!!!)ராமேஸ்வரம் போகிறார்கள். குழந்தைகளுக்கு பதில் சொல்லி மாளவில்லை. செல்போனில் பேசும் தீவிரவாதிகளுக்கு பேசவும், அந்த தகவலை கணேசனின் உயரதிகாரிகளுக்கு தரவும் நேரம் சரியாக இருக்கிறது. பிணைத்தொகை மூணு கோடி. என் சகோதரியின் கணவர் சந்திரஹாசன் கணேசனின் உயரதிகாரிகளுல் ஒருவர். கடந்த பதினைந்து நாட்களாக அவர்கள் யூனிட்டே அல்லோலகலோலப் பட்டுக் கொண்டிருக்கிறதாம்.
எல்லா எழவும் போகட்டும். என்ன சித்தாந்தத்துக்காவது அந்த தீவிரவாதிகள் போராடிக் கொள்ளட்டும். அதுக்கு ஒரு அப்பாவி சிவில் இஞ்சினியர்தான் தான் கிடைத்தானா..?? பணம் வேணுன்னா பாங்க்கை கொள்ளையடி. ஏதாவது பெரிய அரசாங்க பதவியில் இருக்கிற அரசியல்வாதியைக் கடத்து. அவனுக்கு இருக்கிற பவர் கொஞ்சம் மீடியா வெளிச்சமாவது கொண்டுதரும். ஒரு கருமமும் இல்லாம ஒரு செமி ராணுவ ஆசாமியை பிடிச்சு வச்சுகிட்டு, கோடி கோடியா கேட்டா எங்க போறது. அரச இயந்திரத்தோட ஒரு கடைகோடி பல்சக்கரம் மாட்டிக்கிச்சுன்னு எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணப் போறாங்க. ரோஜா மாதிரி ஒரு படம் நல்லா ஓடிச்சுன்னா நாமல்லாம் நல்லா கை தட்டிப் பாக்கலாம். வேற ஏதாச்சும் முடியுமோ..??
விடை தெரியாத கேள்விகள்...
Tuesday, January 09, 2007
டிசம்பர் தர்பார்
வலைப்பதிவுகளில் சிறுகதைகள் படிக்கிறீர்களா? என்று தசாவதாரம் ஷூட்டிங் நடுவே கமல் கேட்டதும் எனக்கு வியப்புத்தான் வந்தது. "கதை இருக்கவேண்டும், சின்னதா இருக்கவேண்டும்" என்று ழான் நாய்கோவ் (இத்தாலி - 1936-75) சொன்னதைப்பற்றி ஒரு வாரம் முன்னேதான் வசந்தபாலனிடம் பேசிக்கொண்டிருந்ததைச் சொன்னேன்.
வலைப்பதிவைப்பற்றிக்கேட்டதும் "எண்ட்லெஸ் ஈகோ ட்ரிப்" என்ற என் செல்லச் சித்தாந்தத்தை அவரிடம் சொன்னேன். மையமாகச் சிரித்தார்.
எந்த ஒரு கதைக்கும் ஆரம்பம், நடு, முடிவு என்று மூன்று பகுதிகள் வேண்டும். இதை ட்ரிமெண்டாரின் என்று சீன மொழியில் சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில் கதை ஆரம்பிக்கவேண்டும் என்று அவசியமில்லை, நடுப்பகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதகமில்லை. முடிவை நாம் சொல்வதை விட வாசகனே புரிந்துகொள்ளவேண்டும். அறிவுரைகள் கூடாது.
இந்த சித்தாந்தம் பெரும்பாலான மேற்கத்திய ஆசிரியர்களின் கதைகளில் இருப்பதை "The Best Stories of 1921" என்ற பழைய புத்தகம் ஜப்பானிலிருந்து என் மகன் அனுப்பிவைத்திருந்ததில் கவனித்தேன்.
வலைப்பதிவில் வரும் எந்தச் சிறுகதையுமே இந்த அளவுகோலில் தப்பாது.
இரண்டாவது பைப்பாஸுக்குப் பிறகு வலைப்பதிவுகளைப் படிப்பதை நிறுத்தியதில் கொஞ்சம் ரத்த அழுத்தம் சீராக ஆகியிருக்கிறது.
சுஜாதாவின் நேம் ட்ராப்பிங்ஸை கிண்டலடித்து அவரது ஸ்டைலில் "பெனாத்திருயிப்பது" மேலுள்ளது. இதே போல இங்கே அமெரிக்காவில் ஒரு நண்பர் இருக்கிறார். அவருடன் பேசும்போதும், இப்படி ஏகப்பட்ட பெயர்கள் வந்து விழும். மீனா, சுஹாஸினி, கமல், ரஜினி, மணி(ரத்னம்) எல்லாம் மானாவரியாக வந்து விழும்போது எதை நம்புவது அல்லது கூடாது என்று ஒரே குழப்பமாக இருக்கும். ராயர் காலங்களில் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தவர் வலைப்பதியத் துவங்கியதும் அவ்வளவு பேசுவது இல்லை. ஆயினும் போன முறை பேசியபோது "டிசம்பர் தர்பார் " என்று ஒரு விகடன் பிரசுரத்திற்காக புத்தகம் எழுதுவதாக சொன்னார். சரி...என்று நினைத்துக் கொண்டேன். அந்தப் புத்தகத்தை பற்றி சயின்ஸ் தாத்தா இந்த வார விகடன் க.பெ வில் எழுதியிருக்கிறார். கர்நாடக சங்கீத சீசன் பின்னணியில் விகடன் பிரசுரமாக வந்திருக்கிறதாம். அதே புத்தகத்தைப் பற்றி காமேஸ்வரி அய்யர் எனப்படும் அனுராதா ரமணனும் "சீசன் சிப்ஸ்" பகுதியில் அம்சமாக எழுதி இருக்கிறார்.
வாலிப சுந்தரத்துக்கும், மாமா சிவசுவுக்கும் வாழ்த்துக்கள்.
*******
அதே கற்றதும் பெற்றதுமில் கணவன் மனைவி பிரச்சினையைப் பற்றி குறும்பாக எழுதி இருந்தார். படிக்க சுவாரசியமாய் இருந்தது. கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு முன் விளக்குத் தூண் விளக்குத்தூணாக கால் தூக்கிக் கொண்டிருந்த ஆசாமிகள் எல்லாம் ஓவர் நைட்டில் சாமியார்களாகி வெறுத்து விடுகிறார்கள். " We are friends since we are able to tolerate each other " என்பதை "we remain married since we are able to tolerate " என்று மாற்றி வாசிக்கும் அளவுக்குத்தான் ஏகப்பட்ட திருமணங்கள். மேற்கின் தாக்கத்தில், அந்த சகிப்புத்தன்மை கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு விவாகரத்துகள் பெருகுவதை பார்க்கும் போது கொஞ்சம் கவலையாக இருக்கிறது.
என்றாலும், இன்னோரு புறம் ஸோ வாட்..?? என்றும் தோன்றுகிறது. திருமணம் என்ற அமைப்பு மற்ற எல்லா ஏற்பாடுகளை விட ஓட்டைகள் குறைவாக உள்ளதால் அதை ஏற்றுக்கொண்டு, அதே சமயம் பொருத்தமில்லா மனநிலைகளால் அதை abuse பண்ணி கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. Forkம் பாயாசமும் என்று உருப்படியாக வந்த கட்டுரையை சமீபத்தில் வாசித்தபோது எழுந்த எண்ணங்களின் தொடர்ச்சி, தாத்தாவின் கட்டுரையைப் படித்ததும் சர சர வென பற்றிக் கொண்டு விட்டது. கல்யாணம் என்ற அமைப்பு உடைந்தால்தான் அதில் உள்ள செளகரியங்கள் தெரியும் என்றால், அதை உடைத்துப் பார்ப்பதும் கூட தவறில்லை.
ஆண் ஒரு காலத்தில் நிழல் தருகிறவனாக இருந்தான். இப்போது சகபயணியோடு இளைப்பாறுகிறவனாகவும் இருக்கிறான். மரங்களுக்கா பஞ்சம்..??
வலைப்பதிவைப்பற்றிக்கேட்டதும் "எண்ட்லெஸ் ஈகோ ட்ரிப்" என்ற என் செல்லச் சித்தாந்தத்தை அவரிடம் சொன்னேன். மையமாகச் சிரித்தார்.
எந்த ஒரு கதைக்கும் ஆரம்பம், நடு, முடிவு என்று மூன்று பகுதிகள் வேண்டும். இதை ட்ரிமெண்டாரின் என்று சீன மொழியில் சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில் கதை ஆரம்பிக்கவேண்டும் என்று அவசியமில்லை, நடுப்பகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதகமில்லை. முடிவை நாம் சொல்வதை விட வாசகனே புரிந்துகொள்ளவேண்டும். அறிவுரைகள் கூடாது.
இந்த சித்தாந்தம் பெரும்பாலான மேற்கத்திய ஆசிரியர்களின் கதைகளில் இருப்பதை "The Best Stories of 1921" என்ற பழைய புத்தகம் ஜப்பானிலிருந்து என் மகன் அனுப்பிவைத்திருந்ததில் கவனித்தேன்.
வலைப்பதிவில் வரும் எந்தச் சிறுகதையுமே இந்த அளவுகோலில் தப்பாது.
இரண்டாவது பைப்பாஸுக்குப் பிறகு வலைப்பதிவுகளைப் படிப்பதை நிறுத்தியதில் கொஞ்சம் ரத்த அழுத்தம் சீராக ஆகியிருக்கிறது.
சுஜாதாவின் நேம் ட்ராப்பிங்ஸை கிண்டலடித்து அவரது ஸ்டைலில் "பெனாத்திருயிப்பது" மேலுள்ளது. இதே போல இங்கே அமெரிக்காவில் ஒரு நண்பர் இருக்கிறார். அவருடன் பேசும்போதும், இப்படி ஏகப்பட்ட பெயர்கள் வந்து விழும். மீனா, சுஹாஸினி, கமல், ரஜினி, மணி(ரத்னம்) எல்லாம் மானாவரியாக வந்து விழும்போது எதை நம்புவது அல்லது கூடாது என்று ஒரே குழப்பமாக இருக்கும். ராயர் காலங்களில் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தவர் வலைப்பதியத் துவங்கியதும் அவ்வளவு பேசுவது இல்லை. ஆயினும் போன முறை பேசியபோது "டிசம்பர் தர்பார் " என்று ஒரு விகடன் பிரசுரத்திற்காக புத்தகம் எழுதுவதாக சொன்னார். சரி...என்று நினைத்துக் கொண்டேன். அந்தப் புத்தகத்தை பற்றி சயின்ஸ் தாத்தா இந்த வார விகடன் க.பெ வில் எழுதியிருக்கிறார். கர்நாடக சங்கீத சீசன் பின்னணியில் விகடன் பிரசுரமாக வந்திருக்கிறதாம். அதே புத்தகத்தைப் பற்றி காமேஸ்வரி அய்யர் எனப்படும் அனுராதா ரமணனும் "சீசன் சிப்ஸ்" பகுதியில் அம்சமாக எழுதி இருக்கிறார்.
வாலிப சுந்தரத்துக்கும், மாமா சிவசுவுக்கும் வாழ்த்துக்கள்.
*******
அதே கற்றதும் பெற்றதுமில் கணவன் மனைவி பிரச்சினையைப் பற்றி குறும்பாக எழுதி இருந்தார். படிக்க சுவாரசியமாய் இருந்தது. கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு முன் விளக்குத் தூண் விளக்குத்தூணாக கால் தூக்கிக் கொண்டிருந்த ஆசாமிகள் எல்லாம் ஓவர் நைட்டில் சாமியார்களாகி வெறுத்து விடுகிறார்கள். " We are friends since we are able to tolerate each other " என்பதை "we remain married since we are able to tolerate " என்று மாற்றி வாசிக்கும் அளவுக்குத்தான் ஏகப்பட்ட திருமணங்கள். மேற்கின் தாக்கத்தில், அந்த சகிப்புத்தன்மை கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு விவாகரத்துகள் பெருகுவதை பார்க்கும் போது கொஞ்சம் கவலையாக இருக்கிறது.
என்றாலும், இன்னோரு புறம் ஸோ வாட்..?? என்றும் தோன்றுகிறது. திருமணம் என்ற அமைப்பு மற்ற எல்லா ஏற்பாடுகளை விட ஓட்டைகள் குறைவாக உள்ளதால் அதை ஏற்றுக்கொண்டு, அதே சமயம் பொருத்தமில்லா மனநிலைகளால் அதை abuse பண்ணி கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. Forkம் பாயாசமும் என்று உருப்படியாக வந்த கட்டுரையை சமீபத்தில் வாசித்தபோது எழுந்த எண்ணங்களின் தொடர்ச்சி, தாத்தாவின் கட்டுரையைப் படித்ததும் சர சர வென பற்றிக் கொண்டு விட்டது. கல்யாணம் என்ற அமைப்பு உடைந்தால்தான் அதில் உள்ள செளகரியங்கள் தெரியும் என்றால், அதை உடைத்துப் பார்ப்பதும் கூட தவறில்லை.
ஆண் ஒரு காலத்தில் நிழல் தருகிறவனாக இருந்தான். இப்போது சகபயணியோடு இளைப்பாறுகிறவனாகவும் இருக்கிறான். மரங்களுக்கா பஞ்சம்..??
Sunday, December 31, 2006
வசந்தபாலன் பேட்டி
குமுதம் வெப் டீவி ( web Tv) எனக்கு டாலர் தேசம் புகழ் பா.ராகவன் பேட்டி மூலம் அறிமுகமாகியது ( உபயம் : கில்லி) . பிறகுதான் கொஞ்சம் ரெகுலராக பார்க்க ஆரம்பித்தேன். விகடன்.காம் தன் ராட்சஸ கரங்களால் நாளொரு பத்திரிக்கையும், பொழுதொரு வசதியுமாக இணைய ரேஸில் முந்திக் கொண்டுவிட விகடனின் ஆதிகால போட்டியான குமுதம் இப்போதுதான் தட்டுத் தடுமாறி காலூன்ற ஆரம்பித்திருக்கிறது. இப்போதைக்கு சேவைக்கட்டணம் ஏதும் இல்லை என்றாலும், கூடிய விரைவிலேயே ஆக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. ரபி பெர்னார்ட் பேட்டிகள், சினிமா சமாச்சாரங்கள் என்று வெப் டீவியில் குமுதம் குழும இதழ்களை விட சுவாரஸ்யம் அதிகம்.
விஷயத்துக்கு வருகிறேன். "வெயில்" படத்தைப் பற்றி இனி நான் புதுசாக சொல்ல ஏதுமில்லை. சமீப காலங்களில் மண் மணத்தோடு, வந்திருக்கக்கூடிய உருப்படியான படம். ஷங்கர் என்ற டைரக்டரைப் பற்றி பவித்ரன்/ எஸ்.ஏ.சி அஸிஸ்டெண்ட் என்ற வகையிலேயே எனக்கு அறிமுகம் இருக்கிறதே ஒழிய பெரிய கலாபூர்வமான மனிதர் என்ற அபிப்ராயமெல்லாம் கிடையாது. செல்லுலாய்டில் ரிப்போர்ட்டிங் செய்யும் ஜர்னலிஸ்ட் என்று வேண்டுமானல் ஒப்புக் கொள்ளலாம்.
ஆனால் சினிமாவில் தான் பண்ணிய பணத்தை, தன் அஸிஸ்டெண்டுகளின் "நல்ல படமெடுக்க வேண்டும்" என்ற ஆசைக்காக, ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்போது உண்மையிலேயே பாராட்டத் தோன்றுகிறது. மிச்ச சொச்சத்தை வெயில் இயக்குநர் வசந்தபாலன் பேட்டியில் பாருங்கள். குமுதம்.காம் பயனராக இருந்தால் இந்த சுட்டியில் பாருங்கள். http://www.kumudam.com/streaming.php?id=6
வ.பாலன் ரொம்ப சின்சியராக தெரிகிறார்.
விஷயத்துக்கு வருகிறேன். "வெயில்" படத்தைப் பற்றி இனி நான் புதுசாக சொல்ல ஏதுமில்லை. சமீப காலங்களில் மண் மணத்தோடு, வந்திருக்கக்கூடிய உருப்படியான படம். ஷங்கர் என்ற டைரக்டரைப் பற்றி பவித்ரன்/ எஸ்.ஏ.சி அஸிஸ்டெண்ட் என்ற வகையிலேயே எனக்கு அறிமுகம் இருக்கிறதே ஒழிய பெரிய கலாபூர்வமான மனிதர் என்ற அபிப்ராயமெல்லாம் கிடையாது. செல்லுலாய்டில் ரிப்போர்ட்டிங் செய்யும் ஜர்னலிஸ்ட் என்று வேண்டுமானல் ஒப்புக் கொள்ளலாம்.
ஆனால் சினிமாவில் தான் பண்ணிய பணத்தை, தன் அஸிஸ்டெண்டுகளின் "நல்ல படமெடுக்க வேண்டும்" என்ற ஆசைக்காக, ஒருவர் பின் ஒருவராக அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும்போது உண்மையிலேயே பாராட்டத் தோன்றுகிறது. மிச்ச சொச்சத்தை வெயில் இயக்குநர் வசந்தபாலன் பேட்டியில் பாருங்கள். குமுதம்.காம் பயனராக இருந்தால் இந்த சுட்டியில் பாருங்கள். http://www.kumudam.com/streaming.php?id=6
வ.பாலன் ரொம்ப சின்சியராக தெரிகிறார்.
Friday, December 29, 2006
சைக்கோ அனாலிலிஸ்

சமீபகாலங்களில் படித்த மிகச்சிறந்த கட்டுரை.
நன்றி : ஞாநி
மீடியா டிலைட்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது, செய்திகள் டல்லாக இருக்கக்கூடிய சூழலில்கூட, இவர்களின் பங்கேற்பு கலகலப்பை ஏற்படுத்திவிடும். அப்படிப் பட்ட மிகச் சிலரில் வைகோ என்று தன் பெயரைச் சுருக்கிக் கொண்ட வை.கோபால்சாமியும் ஒருவர்!
தமிழ்நாட்டில், கடந்த முப்பது வருடங்களில் அரசியல் மேடையில் சிறந்த பேச்சாளர் என்று பட்டியல் போட்டால், இரண்டே பேர்தான் தேறுவார்கள். ஒருவர் கருணாநிதி, இன்னொருவர் வைகோ.
இருவரும் ஒருவர் இன்னொருவரை அவுட் ஆக்க முயற்சிக்கும் அரசியல் விளையாட்டில் அடுத்த ரவுண்ட்தான் இப்போது நடந்து வருகிறது. சேம் சைட் கோல் போடக் கூடிய இரண்டு பேரை (எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன்) தன் அணியில் வைத்திருப்பதுதான் வைகோவின் பலவீனம்; கருணாநிதியின் பலம்!
வைகோ ஒரு சிறந்த உற்சவமூர்த்தி என்பதை கருணாநிதி முதல் செஞ்சியார் வரை, பிரபாகரன் முதல் நெடுமாறன் வரை எல்லாரும் அறிவார்கள். ஆனால், எப்போதுமே கோயில்களில் உற்சவமூர்த்தி வேறு; மூலவர் வேறு. மூலவர்களுக்குத்தான் பாலபிஷேகம் முதல் உண்டியல் வசூல் வரை எல்லாமே! உற்சவர்கள் கற்பூர ஆரத்திகளுடன் திருப்தி அடைய வேண்டியதுதான்!
வைகோவை மூலவராக் கிப் பார்க்கத் திட்டமிட்ட வர்களில் ஒரு பிரிவினர்தான், இப்போது அவரால் வசூல் நடக்காது என்ற நிலையில் ‘சீச்சி, இந்தச் சாமிக்கு சக்தி இல்லை’ என்று வேறு கோயி லில் பூசாரி வேலைக்கு மனு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
அரசியலில் ஏன் இன்னும் வைகோவால் மூலவராக முடியவில்லை? காரணம் மிக எளிது. பக்தன்தான் உணர்ச்சி வசப்படலாமே தவிர, சாமியே உணர்ச்சிவசப்பட்டால் கோயில் தாங்காது. அவருடைய உணர்ச்சிப் பிரவாகத்தை மேடைகளில் பலர் பார்த்திருக்கலாம். தனியே நான் ஒரு முறை தரிசித் தேன்.
வி.பி.சிங், 1987&ல் ராஜீவிடமிருந்து விலகியது முதல் 1990&ல் அவர் மண்டல் கமிஷன் நிறைவேற் றத்துக்காக பி.ஜே.பி&யால் பிரதமர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டது வரை, அவரைத் தீவிரமாக ஆதரித்து நான் செயல்பட்டு வந்தேன். ராஜீவ் எதிர்ப்புப் பிரசாரத்துக் கென்றே தொடங்கிய முரசொலியின் வார இணைப்பான ‘புதையல்’ இணைப்பின் தொகுப்பாசிரியனாக ஓராண்டு வேலை பார்த்தேன்.
வி.பி.சிங், தி.மு.க&வுடன் இணைந்து தேசிய முன்னணியை உருவாக்கியபோதும், தி.மு.க&வுக்காகத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசியபோதும், பல மேடைகளில் நான் அவரு டைய பேச்சை மொழிபெயர்த்து வந்தேன்.
பிரதமர் பதவியில் அமர்ந்த வி.பி.சிங் மண்டல் கமிஷனால் பதவி இழந்ததும், தமிழ் நாட்டில் ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணத்தை தி.மு.க. ஏற்பாடு செய்தது. தன்னை முதல்முறை மத்திய அமைச்சராக்கிய வி.பி.சிங்குக்கு, தான் செலுத்தும் நன்றிக்கடனாக அவரது உரையை தானே மொழிபெயர்க்க விரும்பினார் மாறன். அவரை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நான் பார்த்தது அந்த ஒரு முறைதான்.
வி.பி.சிங்குக்கு, அந்தச் சுற்றுப்பயணத்தில் சென்ற இடமெல்லாம் எழுச்சியான வரவேற்பு. மதுரை வரை எல்லாக் கூட்டங்களிலும் முரசொலி மாறனே மொழிபெயர்த்தார். மற்ற தென் மாவட்டங்களில், தான் மொழி பெயர்க்க வேண்டுமென்று வைகோ விரும்பி னார். ஆனால், மாறன் மொழிபெயர்ப்பே தொடர்ந்தது. தன் சொந்தச் சீமையான நெல்லையிலாவது தனக்கு வாய்ப்பு தரப்படு மென்று வைகோ எதிர்பார்த்தார். அங்கேயும் அதற்கான வாய்ப்பு அமையாமல் போனது. அங்கிருந்து அடுத்த ஊருக்கு வைகோவுடன் நான் ஒரே காரில் போக நேர்ந்தது. அடுத்த அரை மணி நேரம் அவர் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். தி.மு.க&விலிருந்து தன்னை ஓரங்கட்டுவது தொடங்கிவிட்டது என்று கடும் கோபமும் வேதனையும் கொந்தளித்தது அவர் பேச்சில். Ôதனக்கு யார் நிஜமான தலைவன்Õ என்று ஒரு குமுறல் குமுறினார்! அவரை அப்போது சமாதானப்படுத்துவது மிகக் கடினமாக இருந்தது.
வைகோவின் உணர்ச்சிவசப்படும் இந்த இயல்புதான் தி.மு.க&விலிருந்து பின்னர் அவர் வெளியேற்றப்பட்டபோது, அவருக்குப் பல மாகவும் இருந்தது; பலவீனமாகவும் இருந்தது. அவரோடு தி.மு.க&விலிருந்து வெளியேறிய தலைவர்களுக்கும் அவருக்கும் இருந்த ஒரே கொள்கை ஒற்றுமை, கருணாநிதி மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு மட்டும்தான்.
உண்மையில், வைகோவை தி.மு.க&விலிருந்து கருணாநிதி வெளியேற்றாமல் இருந்திருந் தால், இப்போது பத்தோடு பதினொன்றாக இன்னுமொரு மாநில அமைச்சராக இருந்து கொண்டு, தயாநிதி மாறனின் சிறப்பியல்புகளை உணர்ச்சி பொங்கத் தமிழக மக்களுக்கு அவர் எடுத்துச் சொல்லிக் கொண்டு இருக்கக்கூடும்.
வைகோவின் உணர்ச்சிகரமான அரசியலில் அவருடைய உழைப்பும் அதிகம்; பட்ட துயரங்களும் அதிகம். அடைந்த லாபங்கள் மிக மிகக் குறைவு. தி.மு.க&விலிருந்து வெளியேறி ம.தி.முக&வை ஒரு கட்சியாக நிலைநிறுத்த பல தொண்டர் கள் செய்த தியாகத்தையும், தன் சுயமரியாதையையும் ஒதுக்கிவிட்டு, மீண்டும் தி.மு.க. அணியில் சேர்ந்தபோதே அவருடைய அரசியல் நம்ப கத்தன்மை அடிவாங்கிவிட் டது. அதிலிருந்து மீண்டு வரும் வேளையில் ஜெயலலிதா வுடன் திரும்பவும் கூட்டணி சேர்ந்தது மீண்டும் அவருடைய நம்பகத்தன்மையைக் குலைத்தது. பொடா சிறைவாசம், பாத யாத்திரை கள் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான்!
ஆனால், தற்போது தி.மு.க&வை எதிர்ப்பதைத் தவிர, வைகோவுக்குச் செய்வதற்கு வேறு அரசியல் ஏதும் இல்லை என்பதுதான் இத்தனைக் குழப்பத்துக்கும் காரணம். கருணா நிதிக்குப் பிறகு தி.மு.க. உடைந்தோ உடையாமலோ தன் வசம் வந்துவிடும் என்று அவர் போட்ட கணக்குகள், தயாநிதி மாறனின் வருகைக்குப் பிறகு தவிடுபொடியாகிவிட்டன.
தி.மு.க&வும் அ.தி.மு.க&வும் ஒன்றுக் கொன்று மாற்றாக தங்களை அறி வித்து வருகிற வரையில், மற்றவர்கள் இதில் ஏதேனும் ஓரணியுடன் இணைந்து சிங்கம் சாப்பிட்டது போகச் சிதறியதைச் சாப்பிடும் நரி களாக மட்டுமே இருப்பார்கள். இரு கழகங்களுக்கும் தானே மாற்று என்று தன்னை மூன்றாவது சக்தியாக அறி வித்துக்கொண்டு, அதற்கான தலைமை யாகத் தன்னைக் காட்டிக்கொண்ட வரையில் வைகோவுக்கு நம்பகத் தன்மை இருந்தது. இரண்டில் ஒன்று டன் சேரத் தொடங்கியதும் அவர் கட்சியின் நிலை இடதுசாரிகளின் நிலைக்குச் சமமாகிவிட்டது.
அதனால்தான், வைகோவுக்கு நிகரான பேச்சாற்றலோ, நாடாளு மன்றத் திறமையோ, கட்சி நடத்தும் முன் அனுபவமோ எதுவும் இல்லாத விஜயகாந்த்துக்கு எட்டு சதவிகித ஓட்டுகள் விழுந்தன. வைகோவின் ம.தி.மு.க&வுக்கு அதை நெருங்கும் வாய்ப்புக்கூட இல்லை.
தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடம் ஒன்றே ஒன்றுதான். தி.மு.க&வுக்கு மாற்று அ.தி.மு.க; அதற்கு மாற்று தி.மு.க. இரண்டுக் கும் மாற்று யார்?
இதை நிரப்பும் அரசியல் பார்வை, இதற்கான வியூகம் அமைக்கும் ஆற்றல் அனைத்திந்தியக் கட்சி களான காங்கிரஸ§க்கும் இல்லை, பி.ஜே.பி&க்கும் இல்லை. யாருக்கு உள்ளது என்ற கேள்வியுடன் சுமார் 15 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார் கள் மக்கள். வைகோ, ராமதாஸ், விஜய காந்த் என்று வரிசையாக வந்து செல்லும் ஒவ்வொரு தலைமையும் இன்னும் தடுமாறிக்கொண்டேதான் இருக்கிறது.
இந்தத் தடுமாற்றத்தில் முதலிடம் வைகோவுக்கு! ‘எமோஷனல் பாலிட் டிக்ஸ் என்பது மேடைக்கு மட்டுமே சரி’ என்பதைத் தன் முன்னாள் தலைவரிடம் அவர் கற்கவே இல்லை!
*------*--------*-------------*------------------*
நண்பர்களுக்கு அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Subscribe to:
Posts (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
என்ன ஸார்..செளக்கியமா..?? என்ன ...எதும் புதுசா எழுதறதில்லையா.?? ஏதாச்சும் கிளு கிளு ன்னு படம் போட்டு, கச்சடாவா ஏதும் எழுதுவ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
" புத்தகம் எதுக்குப் படிக்கணும் சுந்தர்ராஜன். நம்மளோட யோசனைக்கு மிஞ்சின எதை புஸ்தகத்துல புதுசா எழுதிடப் போறாங்க " என்று கேட்ட கல்ல...