தமிழ்ப் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்.
பள்ளிகளுக்கருகே ஃபாஸ்ட் ஃபுட் கடைகளை மூட வேண்டும்.
......
.......
.......
தமிழ்நாட்டில் எல்லோரும் தமிழ் எண்களைத்தான் உபயோகப்படுத்த வேண்டும்
கோக், பெப்ஸிக்கு பதிலாக மாம்பழச்சாறு, கரும்புச்சாறு, இளநீர் அருந்த வேண்டும்.
விஸ்கி, பிராந்தி போன்ற மேல்நாட்டு பானங்களுக்கு பதிலாக லோக்கலாக அரசு சாராயம் அருந்த வேண்டும். மதுவிலக்கு அமலில் இருந்தால் பா.ம.க காய்ச்சித் தரும்.
மேல்ஜாதி மக்களுக்கு யாரும் ஓட்டுப் போடக்கூடாது. எங்களுக்கு ஓட்டுப் போட்டால், உங்களை வேறுயாரிடமும் கை கட்டி நிற்க விடமாட்டோம். எங்களிடம் நின்றால் போதும்.
பேண்ட், சட்டை, டை யாரும் போடக் கூடாது. வேட்டி, மஞ்சள் சட்டை, துண்டுதான். ஜட்டி வேண்டாம். கோடு போட்ட நாடா டவுசர் தான். அதுவும் வேட்டிக்கு கீழே தெரிய வேண்டும்.
பஸ் வேண்டாம். மாட்டு வண்டி போதும்.
வீட்டு ஹாலில் எல்லோரும் ஒரு மரம் வைக்க வேண்டும்.
கட்சித் தாவும் சட்டத்தை தடை செய்ய வேண்டும்.
மக்களுக்கு மறதியை அதிகரிக்கும் மருந்து கண்டுபிடிக்க, அன்புமணி மருத்துவத்துறையில் புது ஆராய்ச்சிப் பிரிவை கண்டுபிடிக்க வேண்டும்
பாண்டிச்சேரியில் பா.ம.க வைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளையும் தடை செய்து விட வேண்டும்.
திருமாவளவன் சொல்வதை எல்லா தலித் மக்களும் கேட்க வேண்டும். அவர் நான் சொல்வதைக் கேட்பார்.