Wednesday, May 19, 2004

அலமாரியும் புத்தகங்களும்
=========================

வரவேற்பரையிலேயே
புத்த்க அலமாரியும் காலணி ரேக்குகளும்
நகரச்சந்தடி

அலமாரியில் இல்லாப் புத்தகம்
தந்ததொரு படிப்பினை
இரவலுக்கல்ல புத்த்கம்

தீண்டப்படாமல்
வருத்தப்பட்டு நிற்கும்
கண்காட்சியில் வாங்கிய
புத்தகங்களில் சில

சமையல் புத்தகம்
அலமாரியில் சேருமா?
மனைவிக்கும் எனக்கும் சண்டை

அலமாரியில் வைக்க முடிவதில்லை
வாசிக்க வேண்டிய மனிதர்களில்
சில மனிதர்களை



தி.ஒ.க சொக்கன் உணர்ச்சி வசப்பட்டு பாராட்டிய கவிதை. கூடவே நானும் அனுபவித்தது. பெண்மொழியை கொச்சையாக்கி ஏகடியம் பேசுகின்ற வெ.சா வையும் , உருப்படியான ஒருவரை பிரதமராக்கிய சோனியாவின் நோக்கங்களை சந்தேகித்தும், ஜெயலலிதாவின் ஈகோ பார்க்காத விட்டுக் கொடுத்தலை கேலி பேசியும் வருவோரை அலமாரியிலா வைக்க முடியும்...??

கவிதையின் நிசம் உங்களை சுடவில்லை..??

கவிஞர் இரா.சுந்தரேஸ்வரன். இளைஞர். சென்னைவாசி. ஒரு காலத்தில் CMS Computers ல் என் நண்பன் (இன்னொரு) சுந்தரேஸனோடு பணி புரிந்தார். மார்க்கெட்டிங் ஆசாமிகளிடம் இந்த மாதிரி கவிதை வருவது இனிய ஆச்சரியங்களில் ஒன்று. அவரை onlysun@yahoo.com ல் பிடிக்கலாம்.





No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...