Thursday, June 03, 2004

இக்கரைக்கு அக்கரை பச்சை
=========================

bl_060304


பிரில்லியண்ட் டுடோரியல்ஸ்/அகர்வால் என்ற பெயர்களை கேட்ட மாத்திரத்தில் சென்னை மாணவர்களுக்கு தலையில் பல்பு பளீரென்று எரியும். தமிழ்நாட்டில் எஞ்சினியரிங் நுழைவுத்தேர்வு எழுத, எந்தப் பயிற்சியும் அவசியம் இல்லை. ஆனால் IIT யில் சேர, IIT JEE என்ற தேர்வை எழுதி பாஸ் பண்ணினால் மட்டுமே தரவரிசையின் அடிப்படையில்,இந்தியாவில் உள்ள எட்டு ஐ.ஐ.டி களில் ஒன்றில் இடம் கிட்டும்.தமிழ்நாட்டு ஸ்டேட் போர்டு மாணவர்களுக்கு இந்த தேர்வு எட்டாக் கனி. செந்த்ரல் போர்டும், மெட்ரிகுலேஷன் படிக்கும் மாணவர்களுக்கே இந்த தேர்வு மிகக் கடினம். (12 ஆவது படிக்கும்போதே நானும் இதை ட்ரை பண்ணிவீட்டு பேய்முழி முழித்திருக்கிறேன்). அப்போதெல்லாம், " என்னடா இது ...ஸ்டேட் போர்ட் படித்ததனால், இந்த மாதிரி எக்ஸாம்களில் தேற முடியவில்லையே" என்று வருத்தப்படுவது வழக்கம். இந்த கல்விமுறை வெறும் மனப்பாடம் செய்யும் இயந்திரங்களைத் தான் உருவாக்குகிறது. மார்க் எடுக்கும் திறமையை வைத்துக் கொண்டு எதிர்காலத்தில் என்னதான் செய்யப் போகிறோம் என்று சலித்துக் கொண்டதுண்டு. 10 ஆவதுக்கும் 12 ஆவதுக்கும் மட்டும் வெவ்வேறு சப்ஜெக்டுகளுக்கு ட்யூஷன் போய், படித்ததை எல்லாம் பரீட்சை பேப்பரில் வாந்தி எடுத்து, MPC இல் 95% எடுத்து எஞினியரிங் சேர்ந்தாகி விட்டது. அதற்குப் பிறகு படிப்பு என்னெ ரேஞ்சுக்கு போனது என்பது தனிக்கதை. அது வேறு ஒரு சமயம்
.

ஆனால், என் சூர்யா ஸ்கூலுக்கு போய் விட்டு வருவதைப் பார்க்கும்போது, அமெரிக்காவில் இளையர்கள் ஹைஸ்கூல் ட்ராப் அவுட்டுகளாக, மெக்டீயில் பர்கர் ஃபிலிப்புவதை பார்க்கும்போது, பரிட்சை பேப்பர் திருத்தும் என் மனைவி சிக்ஸ்த க்ரேட் மாணவர்களின் அறிவு "விஸ்தீரணங்களை" பற்றி சொல்லும்போது,சொல்லிக் கொடுக்கும் போது சரிவர கவனிக்காமல் சூர்யா அலைபாயும்போது, என் இந்திய கல்விமுறை சரிதானோ என்ற எண்ணம் எழுகிறது. அதற்குத் தகுந்தாற்போல், வளர்ந்த பிள்ளைகளை வைத்திருக்கும் இந்திய பெற்றோர்களும் இந்தியா செல்லும்போது இந்திய பாட புத்த்கங்களை வாங்கி வந்து இங்கே சொல்லித் தருகிறார்கள். கிட்டத்தட்ட இந்திய கல்விமுறை கடைப்பிடிக்கப்படுகிறது என்பதால், குடாப்பகுதியில் சேலஞ்சர் எனப்படும் பள்ளிகளில், அதிக செலவு செய்து தன் குழந்தைகளை சேர்க்கிறார்கள். கணக்கிலும் அறிவியலிலும் மிக மோசமான திறமை உள்ள அமெரிக்க குழந்தைகள் நம் குழந்தைகளை விட இங்கே பின் தங்கி இருக்கிறார்கள். இங்கு படிக்கும் இந்திய குழந்தைகள் இந்தியா திரும்பி போனால் ஸ்கூல் பரீட்சைகளில் ஃபெயில் ஆகிறார்கள் என்று சொல்வதை எல்லாம் கேட்டால் வயிறு கலங்குகிறது. நம் பாடமுறை மனப்பாடம் செய்ய பயிற்றுவித்தாலும், மார்க் எடுக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்தாலும், படிக்கும் மாணவர்களுக்கு அதைப் பற்றிய ஒரு சீரியஸ்னெஸ்ஸை உருவாக்குகிறது என்று நினைக்கிறேன்.அது முக்கியம் எனவும் நினைக்கிறேன். அமெரிக்க இளைய சமுதாயமே இந்த சீரியஸ்னெஸ் இல்லாமல்தான், கல்லுரி போகும்போது, சடாரென்று உயரும் பாடத்தின் கனத்தினாலும், அழுத்தத்தினாலும் நிலைகுலைந்து போகிறது.


எனவே ஸ்கூல் பருவத்தை இந்தியாவில் கழித்து, பட்டபடிப்புக்கோ, பட்ட மேற்படிப்புக்கோ அமெரிக்கா வருவதுதான் சரி என எனக்குத் தோன்றுகிறது.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்...?

பின்னூட்டம் தருவதை விட உங்கள் எண்ணங்களை விரிவாக உங்கள் வலைப்பதிவில் எழுதினால மகிழ்ச்சி. பாடத்திட்டம் பற்றியும், கல்வி பற்றியும் ஏற்கனவே அநாமிகாவும், வெங்கட்டும் தொடங்கி வைத்தார்கள்
.

அப்போதிலிருந்தே எழுத வேண்டுமென நினைத்துக் கொண்டிருதேன்.

இன்றுதான் வேளை வந்தது.

(பதிவுக்கும், போடும் பொம்மைக்கும் சம்பந்தம் இருக்க வேண்டுமா என்ன..?? ஹி..ஹி...)

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...