Saturday, April 13, 2013

என்னவள் சொன்னது

பாட்டு கேட்டுவிட்டு
தனக்குள்ளே சிரித்ததற்கும் ,
காலணி மாற்றிப் போட்டு
தடுமாறி விழுந்ததற்கும் ,
நீளப் பின்னல் பார்த்துவிட்டு
கண்ணீர் கசிய கவிழ்ந்தததற்கும்,
புதுப்படத்து அரையிருட்டில்
கை தேடிக் கோர்த்ததற்கும்,
தலை சாய்த்து சிரித்தபோது
ஆகாயத்தில் வெறித்ததற்கும்,
"கடிதம் நன்றாய் எழுதுகிறாய் " என்றபோது
முகம் வறல தலை அசைத்ததற்கும்,
சிகை கோதி விளையாடினால்
சிலை போல் சமைந்ததற்கும் ,
அவளின் நினைவே காரணம் எனில்...
எனக்கான நினைவுக்காய்
என்ன உளது உன்னிடம்...
மனசு நுரைக்க ஸ்னேகித்து விட்டு
இன்று பிணமாய் என்னுடன்
கண்மூடி மோகிக்க..
உனக்கு இந்த வாழ்வெதற்கு.??.
என் பிரியம் உனக்கு புரிய...
நானும் உனை பிரிய வேண்டும் எனில்....
அதற்கு நான் தயாரில்லை...
இன்னொரு முறை உன் மனம் கொன்று
எனக்கந்த பிரியம் வேண்டாம்...
என் பிரியம் நிஜமெனில் ...
உனை உயிர்ப்பிக்கட்டும்...!!

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...