Saturday, March 14, 2015

காயம்

அரவணைக்க எந்தைக்கு ஆளில்லை
ஆடி ஓடி தோள்கொடுக்க என் தாய்க்கும் உறவில்லை
வறுமையிலும் வலிகளிலும் வளர்ந்தோம்
உழைப்பையும் உறுதியையும் நாவன்மையும்
அன்றி தோள் கொடுக்க யாரும் இல்லை. ...
சத்தமில்லாமல் யுத்தம் செய்தோம் நித்தம் நித்தம்

எங்களுக்கும் விடிந்தது இறைஅருளால்
எம் மகவும் சீர் பெற்றது அவன் பெருங்கருணையால்
உற்றாரும் உரியோரும் விதந்தோந்த
எம்மை பெற்றவர் மகிழ்ந்திருந்தார்
பேருவகையில்
முட்டி மோதி பெற்றெடுத்த
நிம்மதியை...அகமகிழ்வை.. பெருமிதத்தை
கைவிட்டு நிற்கிறோம்
நெட்ட நெடுமரமாய்..
எங்கு சொல்ல..யாரிடம் சொல்ல
எதைச் சொல்ல... எப்படிச் சொல்ல...
மிஞ்சி இருக்கும் வாழ்க்கை முழுதும்
உனை இழந்த துக்கம்தனை
விஞ்சாது எதுவும் எம்மை.....

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...