Sunday, December 12, 2004

இங்க ஒரு போஸ் ....

C:\DSC00492

போஸ் குடுத்த புள்ளாண்டான், சோஃபாவுல கொஞ்சம் சரியா உக்காரக் கூடாதா..??

என்னமோ போங்க..!!

Saturday, December 11, 2004

இசைக்குயில் பறந்தது....

C:\Documents and Settings\Sundar\My Documents\My Pictures\2004021500060302

சங்கீத மேதை டாக்டர் எம்.எஸ் மறைந்தார்கள் என்ற செய்தி கேட்டு தமிழ்நாட்டில் எத்தனை உள்ளங்கள் துடிதுடிக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. எண்ணிலடங்கா பட்டங்களும், ஏகப்பட்ட ரசிகர்களையும் பெற்றிருந்த அவர், தனக்கு இசை மூலமாக வந்த எல்லா செல்வத்தையும் அறக்கட்டளைக்கும் அனாதை இல்லங்களுக்குமே கடைசி வரை அளித்து வந்தவர். மதுரை ஷண்முகவடிவு சுப்புலட்சுமி என அழைக்கப்பட்ட அவர், கல்கி பத்திரிக்கையின் ஸ்தாபகர் திரு. சதாசிவம் அவர்களை மணந்து, அவருடைய மனமொத்த சகியாக இருந்து, ஐ.நா சபை வரை சென்று பாடும் பெரிய பேறு பெற்றிருந்தார்.

ஒரு சாயலில் இந்தக் கால ஐஸ்வர்யா ராய் போல இருக்கும் எம்.எஸ் அவர்களை ஸ்ரீ ரங்கபுர விஹாரா என்ற பாடல் மூலம் முதன் முறையாக அறிந்து கொண்டேன். என் தகப்பனார் இவருடைய சங்கீதத்தின் பரம் விசிறி. எம்.எல்.வசந்தகுமாரி, என்.சி.வசந்தகோகிலம், போன்றவர்களின் பாடல்களும் அவருக்கு பிடிக்கும் என்றாலும், எம்.எஸ் கச்சேரி கேட்கும்போது தன்னை மறந்து விடுவார். கச்சேரிகளின் போது, ஏகப்பட்ட அங்க சேஷ்டைகள், அலட்டல்கள், முகபாவ மாற்றங்கள் எல்லாம் செய்யும் இசைக்கலைஞர்கள் மத்தியில் எம்.எஸ் அம்மாவின் கச்சேரியை ஒளிப்பேழையில் பார்த்தாலும் அவ்வள்வு அருமையாக் இருக்கும். கண்களை மூடி, லயிப்புடன், பாடகி ராதாவுடன் அவர் சேர்ந்து பாடுவது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. காஞ்சி மகாப்பெரியவர் எழுதிய பாடல்கள் சிலவற்றை அவர் பாடியிருப்பதாக அறிகிறேன்.

பாவயாமி ரகுராமம், ஸ்ரீரங்கபுர விஹாரா, காற்றினிலே வரும் கீதம் போன்ற உருக வைக்கும் பாடல்கள் இருக்கும் வரையில் எம்.எஸ் அம்மாவின் ஸ்தூல சரீரம் போனாலும், அவர் இசையுருவம் எங்கள் நெஞ்சங்களில் நின்றாடும்.

அந்த இசைமேதைக்கு என் அஞ்சலி...!!

அலாரம் அடிக்கும் நகரம்

நகரம்


தனியே இருத்தி
தென்னோலை அடைத்து
உலக்கை உருட்டி
ஊருக்கும் உறவுக்கும்
சொல்லி
சல்லடைத் தட்டு வழியே
மஞ்சள் நீரூற்றி
பூச்சூடி
பட்டுடுத்தி
புட்டு சுற்றி
நலங்கு வைத்து
திருஷ்டி கழித்து
"படம்" காட்டும்
தமிழ் சினிமா
மலைப்பாய்த் தான்
இருக்கிறது
பள்ளி நேர அவசரத்தில்
விழுந்தடித்து ஓடி
ஒன்பது மணிநேர
கசக்கலிலும்
நெரிசலிலும்
மூச்சுத்திணறி வியர்வை வழிய
மாநகர போக்குவரத்துக் கழக
23-C பேருந்தில்
பூத்த
என் செல்லத்துக்கு....


அலாரம்

அதிகாலைக் குளிர்
எழுந்து அணைத்து
விட்டுத்
தூங்கினேன்.
அரை மணி கழித்து
பையன்...

Friday, December 10, 2004

வாங்க..மக்கா...வாங்க !!!

images

பிச்சைப்பாத்திரத்தைப்
பார்த்து
வாந்தி எடுத்த மாதிரி
இருக்கிறது என்று
சாத்தான்குளத்திலிருந்து வேதம்
ஓதுகிறார்கள்
ஒலிக்கும் கணங்களை
உணராத பேதைகள்

என்ன நவீன கவிதை மாதிரி இருக்கா..?? ஹி..ஹி

திசைகள் நம்பி, ஸ்வஸ்திக் ஆட்ஸ்காரர், லொள்ளு பாய் மற்றும் கொல்கத்தா டீச்சரம்மாவுக்கு வரவேற்பு.

இரண்டு நாட்கள்....

கடந்த இரண்டு நாட்களாக அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு. Calpers ல் சேர்ந்து இரண்டு மாதங்களான பிறகு, புதிதாக சேர்ந்தவர்களுக்கான பயிற்சி வகுப்பு போவதென்பது - அதுவும் இங்கேயே மூன்று வருடங்களாக கன்சல்டந்த் ஆக பணி புரிந்த எனக்கு வித்தியாசமான அனுபவம்.

மற்ற பிரிவிலிருந்தும், மற்ற கிளைகளிலிருந்தும் வந்திருந்த புது மனிதர்களோடு பழகுவது வித்தியாசமாக இருந்தது. வந்திருந்தவர்களை குழு குழுவாக பிரித்து இருந்தார்கள். ஒவ்வொன்றிலும் ஆறு பேர். எங்கள் குழுவில் ஒருவர் இந்தியர். ஒருவர் ஆப்பிரிக்க அமெரிக்கர். ஒருவர் பிலிப்பினோ-ஸ்பானிஷ். ஒருவர் வியட்னமிஸ். ஒருவர் சீனர். ஒருவர் ஐரிஷ் அமெரிக்கர். கிட்டத்தட்ட எல்லா குழுக்களிலும் இதுமாதிரி கலவைதான் . ஒவ்வொரு குழு உறுப்பினர்களும் கூடி உட்கார்ந்து பேசும்போது, இத்தனை கலவையான சமூகத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அதிலும் நம்மாட்களை தவிர பெரும்பாலான இனத்தவர்கள், எந்தக் கூச்சமும் இல்லாமல் வெளிப்படையாக பழகக் கூடியவர்கள். ரொம்ப ஜோவியனான ஆசாமிகள்.

பயிற்சியில் ஒரு நள் Trade Room என அழைக்கப்படும் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். calpers ன் சொத்து மதிப்பு 160 பிலியன் டாலர்கள். அவற்றை சரியான இடங்களில், சர்வதேச ஸ்டாக் மார்க்கெட்டுகளில் முதலீடு செய்யும் முடிவுகளையும், செயற்படுத்தலும் நடக்கும் இடம் இந்த அறை. வெவ்வேறு தேச நேரங்களைக் காட்டிக் கொண்டு ஏகப்பட்ட கடிகாரங்களும், ஸ்டாக் மார்க்கெட்டில் காணப்படும் பேனல் போர்டுகளைப் போல மார்க்கெட் நிலவரம் சொல்லும் பேனல்களும், முக்கியமான செய்தி செனல்களின் டீவி ஒளிபரப்பும், எகப்பட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களும், ராய்டர்ஸ் மற்றும் ப்ளூம்பர்க்கில் இருந்து செய்தியை தொடர்ந்து துப்பிக் கொண்டிருக்கும் டெலி பிரிண்டர்களும், ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் நான்கு மானிட்டர்கள் மற்றும் அவற்றில் தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும் க்ராஃப்களும்...

பணமும் அது சார்ந்த முதலீடும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எத்தனை முக்கியம் என்பதை 5 நிமிடத்துக்குள் அற்புதமாக புரிய வைத்த அனுபவம். "பணம் சேக்கறது முக்கியம் இல்லை. சேத்த பணத்தை காக்கிறதும் இன்னமும் வளர்க்கிறதும் தான் முக்கியம்" என்று சின்ன வயசில் அப்பா சொன்னது மனதில் நிழலாடியது.

இரண்டு நாள் பயிற்சியில் ரொம்பவே கவர்ந்த பகுதி இது.

அட....

C:\Documents and Settings\spasupat\My Documents\My Pictures\ada

சிம்புவின் பேட்டி இந்த வார விகடனில் சூப்பர். தனுஷ் கல்யானத்தை பற்றியும், தன் பழைய நட்பைப் பற்றியும் மிக அருமையாக பேசி இருக்கிறார்.
தன்னுடைய நட்பை, காதலை வெறும் புலம்பலாகவும், துவேஷமாகவும், கவிதைகளாகவும், தாடியாகவும், சுயபச்சாதாபமாகவும் பயிர் செய்யும் மக்களிடமிருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டு இருக்கிறது இவர் அணுகுமுறை

இந்த இளைஞனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது - ரோஸா வஸந்த் மனது வைத்தால் ....(ஹி..ஹி)

Wednesday, December 08, 2004

இன்னைக்கி லீவ்

காலைலேர்ந்து ஆஃபிஸ்ல ஒரே பிஸி. ட்ரெய்னிங் ஒண்ணு போக வேண்டி இருந்தது. நடுவுல நண்பர் அருணுக்கு மட்டும் அவர் பொட்டிக்குள்ள பதில் போட்டேன்.

சாயங்காலம் தான் வந்து சில விஷயங்களை படிச்சேன். வாய் விட்டுச் சிரிச்சேன். தகவலுக்கு என்று நேற்று சில விஷயங்களை இங்கே நான் எழுதி இருந்தாலும், வழக்கம்போல அவ்விடம் "தாவல்" தான் நடந்திருக்கு.

இருக்கட்டும்...

இதுவரை, தினம் தினம், அவருடைய "தாவல்களை" வைத்து என் வலைப்பதிவில் "பிழைப்பு" நடத்தியது போதும். இனிமேலாவது சொந்தமா ஏதாச்சும் எழுதறதுக்கு முயற்சி பண்ணுவம்.

அவருடைய காலட்சேப சங்கீதம் கனஜோரா நடக்கட்டும். உடுப்புகளை கிழிச்சிகிட்டு புலம்பற லெவல் வரைக்கும் போகாம இருந்தா சரிதான்.

பாவம்..!!!

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...