Wednesday, July 28, 2004

கவசம்

======

mask

முகமூடி கிழித்து
முகமது பார்த்தால்
முகமே தேவலை
என்று தோன்றுமோ
இருப்பினும்
எந்த வதனம் எதிர்வந்தாலும்
முகத்திரை மெலிதாய் அசைவதேன்..?
உடனே கிழித்து எறிந்திட
கைகளும் பரபரப்பதேன்..?

விடு.
முகமூடியில்லா முகம் என்பது'
குழந்தையின் வசமின்றி எங்குமில்லை
எவரும் என்றும் அணிந்தே உள்ளனர்
அவரவர்க்கு ஏற்ற கவசம்
வெவ்வேறு நிறத்தில் கவசம்
நீயும் நானும் விலக்கல்ல

ஆனால் கவசம் கழற்றிக் களைப்பாற
ஒரு உயிராவது உடன் வேண்டும்
மூடியற்ற முகம் பார்த்தும்
நேயமுற்றிடும் துணை வேண்டும்

நன்றி : கவிஞர் சிவசுந்தரிபோஸ், தினம் ஒரு கவிதை

சீனிஅபு, சரவணபவன், சுமா உப்பிலி, சா.கணேசன், பரமசிவம்பிள்ளை, அபிராமிபட்டர், குட்டி ஹமாம், ஆப்பு, இட்லிவடை, காயாம்பூ, கவிதா மாரிமுத்து, டைனோ பாய், திராவிட், இணையக் குசும்பன் முதலாக நாட்டாமை வரைக்கும் அத்த்...த்த்னை முகமூடிகளுக்கும் சமர்ப்பணம்.

கவிதை இன்னும் கொஞ்சம் உள்ளேயும் போகிறது....

உங்களுக்கு புரிகிறதா..??

Tuesday, July 27, 2004

இரண்டு படங்கள் -  ஒரு அபத்த விமர்சனம்
=========================================

  வார இறுதியில் இரண்டு படங்கள் பார்த்தேன். அது அப்புறம். ஏனெனில் பழைய படத்துக்கு பலநாள் கழித்து எழுதப்படும் விமரிசனம் வெஓநிகே எனபது என் எண்ணம்.

     குமுதம் தீராநதியில் ஆய்தஎழுத்துக்கு ஒரு விமரிசனம் வந்திருக்கிறது. இந்தப் படத்துக்கு இப்படியெல்லாம் கூட விமரிசனம் எழுதவேண்டுமா..?? என்று யோசிக்க வைத்த விமரிசனம் அது.  இருவர் படத்தையும், ஆய்தஎழுத்தையும் ஒப்பிட்டு, இரண்டு படங்களுமே திராவிட ஆட்சியை எதிர்த்து, பிராமணியத்தை மறூயிர்ப்பு செய்ய வந்த படங்களாக சொல்கிறார் விமரிசனம் செய்த ( யார்..??) பிரகஸ்பதி. என்ன அபத்தம் இது..??  அதோடு , இந்த இரண்டு படங்களையும் வாசகன் சரியாக "பார்க்க"வில்லை என்றும் சொல்கிறார். அதாவது, தோண்டித் துருவி, குடைந்து பார்த்ததால் தனக்கு புலப்பட்ட அந்த "உண்மை" தமிழ்நாட்டில் பாக்கி இருக்கும் அத்தனை சனத்துக்கும் தெரியாது போயிற்றாம்.

aaytha         

  கதை எளிய கதை.  நிகழ்காலத்திலிருந்து உருவி, அதை தன் ஸ்டீரியோடைப் காட்சி அமைப்புகளோடும், வசனங்களோடும் ( இருநூறு மில்லி சாராயத்துகாக முழு சாராயக்கடையை வாங்குவானா என்ற அந்த இன்பாவின் வசனத்தை அந்தக் கால வசந்த் " ஒரு கேக் சாப்பிட பேக்கரியையே வாங்குவேனா பாஸ் " என்பான் கணேஷிடம்), மணிரத்ன டிபிகல் ஹீரோயின்கள் முதுகு/மார் காட்டி கொஞ்சிப்பேச, தன் கல்லாப்பெட்டி ரொப்பிக்கொள்ள மணி அரசியலை களமாக்கியிருக்கிறார். ஷங்கர் எடுக்கும் அரசியல் படங்களில் இருக்கும் சூடும் சுவையும் இதில் ரொம்பவே மிஸ்ஸிங்.  அதைப் போய் விபரீத உள்ளர்த்தம் எடுத்துக் கொண்டு, இந்த டப்பா படத்துக்கு  ஏகப்பட்ட விளம்பரம் கொடுத்திருக்கிறார் தீராநதிக்காரர். சுஜாதா வேறு இதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஸ்பானிஷ் படத்தை உல்டாவாக்கி இருக்கிறார்கள் என்று நம்மாட்கள் ஏற்கனவே நாஸ்தி பண்ணின ஆய்தஎழுத்து பிறந்த கதையை புதுசாக கற்பனை செய்து கொடி கட்டி இருக்கிறார்.  நமக்கு அல்வா கொடுப்பதில் எல்லோரும் இந்தப் போட்டா போட்டி, காட்டா குஸ்தி போடுகிறார்கள்.

breeze         

       இதைப் போலவே எல்லா இடங்களிலும் ஏறுமாறாக விளாசப்பட்ட "தென்றல்" படமும் பார்த்தேன். பறை தான் தமிழனின் கலாச்சாரம் என்பது தொட்டு, இன்னம் பல பிரச்சார நெடி அடிக்கும் வாசகங்களும் அடங்கிய படத்தில் ஜீவன் இருந்ததால், மற்ற குறைகள் மறந்துபோய் கொஞ்சம் ஒன்ற முடிந்தது. டைரக்டர் மூடுக்கு வித்யாசாகரும் மாறி, BGM மே பல இடங்களில் பறைதான் என்று வலிந்து உட்புகுத்தி, இளையராஜா இல்லாத குறையை வெளிச்சம் போட்டு காட்டினார். விலைமாதுக்களுடன் சல்லாபம் செய்யும் எழுத்தாளர் பாத்திரம் ஒரு காட்சியில் அதற்கான நியாயங்களை ஒத்துக்கொள்கிற மாதிரி சொல்வதை சிலாகித்தாலும், மலையாள விலைப்பெண் எழுத்தாளருடன் இருக்கும் காட்சிகளிளும், இருவரும் கூடி மதுவருந்துவதை காண்பிக்கும் காட்சியிலும் இருந்த நாடகத்தனமை, இந்த மாதிரி காட்சிகளில் கையாளப்பட்ட கே.பாலசந்தரின் நாசுக்கையும் நினைவுக்கு கொண்டுவந்தது. படத்தின் எல்லா குறைகளையும் பட்டியல் இட்டாலும், ஜீவன் குறையாமல், யதார்த்தத்தோடு அழகியலயும் சரிபாதியாக கலந்து கொடுத்ததில் தங்கர் பச்சான் ஜெயித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

   தங்கருக்கு யாராவது ரெகுலராக பான்பராக் சப்ளை செய்தால் தேவலை...மெல்லுவதற்கு ஏதோ ஒன்று வாயிலிருக்கும் பட்சத்தில்  ஏதாவது உளறாமல் இருப்பார் என்று தோன்றுகிறது. அவர் பேசாமல் இருந்தால் அவர் படம் இன்னமும் பேசும்.

 

Monday, July 26, 2004

பிரசவக்காட்சி
============

   அமெரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்கள் கொடுத்து வைத்தவர்கள். நம்மூர் போல அல்லாமல், இங்கே லேபர் ரூம் உள்ளே கணவனுக்கும் அனுமதி உண்டு. மனைவியின் பிரசவத்தின் போது கூட இருந்து, பிரசவ அனுபவத்தில் அவளுக்கு உதவி செய்யவும், அவளுடைய வலியை பகிர்ந்து கொள்ளவும், உணர்வு ரீதியாக ஒத்தாசை செய்வதும் தான் இதன் குறிக்கோள். என்னுடைய பல நண்பர்கள் தங்கள் குழந்தை பிறந்தவுடன் மூன்று நாளைக்கு பேயறைந்தது போல கிடப்பதை பார்த்திருக்கிறேன்.

ammaa         

   என்னளவில் இது அநியாயம். தேவையற்ற வீண்வேலை. என்னுடைய தமக்கைகளின் பிரசவத்தின்போது,  பிரசவ வார்டுக்கு வெளியே நின்று அவர்களின் குரல்களைக் கேட்பதற்கே அடி வயிறு கலங்கிப் போனது. அதற்குப் பிறகு அம் மாதிரி விஷப்பரீட்சைகளில் இறங்குவதில்லை என முடிவெடுத்து விட்டேன். என் சூர்யா பிறந்தபோது நான் இந்தியாவிலேயே இல்லை.

    நான் சொலவதை கேட்பதற்கு ரொம்ப பிற்போக்குத்தனமாகவும், அரக்கத்தனமாகவும் தான் தோன்றும். ஆனால், ஒரு ஆணின் மனநிலையையும், பெண்ணின் மனநிலையையும் ஒப்பிட்டால், பெண்கள் பன்மடங்கு திடசித்தம் கொண்டவர்கள். இது தெரிந்துதான்  இயற்கை அவர்களுக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை தந்திருக்கிறது. தவிரவும் குடும்பத்தில் ஆணின் கடமைகள் என்றும், பெண்ணின் கடமைகள் என்றும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறைகள் இன்னமும் அந்தளவு மாறிவிடாத பட்சத்தில், பெண்ணின் பிரசவ அனுபவத்தையும் ஆண் பக்கத்தில் இருந்து பார்க்க வேண்டும் என்று கூறுவது, கொஞ்சம் அதிக பட்சம்தான். இதை இங்கு வீடியோ காமிராவில் படம் பிடித்து பின்னால் போட்டுப் பார்த்து சந்தோஷப்படுகிறார்கள். தாய்மைக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமென்றாலும், லேபர் வார்டின் ரத்தச் சொத சொதப்பை வீடியோ காமிராவில் படம் பிடித்துத் தான் மதிப்பு கொடுக்க வேண்டுமோ..??. இன்னமும் ஒன்று, குழந்தை வயிற்றுள் இருக்க்ம்போது ஸ்கான் செய்த ஃபோட்டொவை அமெரிக்க நண்பர் தன் க்யூபிக்களில் மாட்டி வைத்திருந்தார். வெல்லக் குழம்பினுள், சப்பாத்தி மாவு உருண்டையை  போட்டது மாதிரி இருந்த அந்த படத்தில் தன் "குழந்தையை" எப்படி பார்த்தாரோ..??

"It was a Great Experience" என்று இதையே அரைக் கண்ணோடு சிலாகித்துச் சொன்ன நண்பர்களையும் நான் கண்டிருக்கிறேன். என்ன எஞ்ஜாய் செய்தார்களோ நானறியேன். மேலை நாட்டினர் செயல்களுக்கெல்லாம் ஏதெனும் அர்த்தம் இருக்கும் என்று தாங்களே நினைத்துக் கொண்டு அதைப் பாவிப்பதில் பெருமை கொண்டவர்களோ இவர்கள் என்று கூட நான் நினைப்பதுண்டு.

       இது மாதிரி பக்கத்தில் இருந்து பார்த்து சூர்யா பிறந்திருந்தால், " இந்த மாதிரி படுத்தறியேடா " என்று அவன் பிறந்தவுடன், ப்ருஷ்டத்தில் ரண்டு வைத்திருப்பேன் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மனரீதியாகக் கூட எக்கச்சக்கத்துக்கு பாதிக்கப் பட்டிருப்பேன் என்றுதான் நினைக்கிறேன்.

  


Tuesday, July 20, 2004

"மணி"யானவர்கள்
================
 
   நண்பர் சுந்தரவடிவேலின் முயற்சிகளைப் போலவே பலரும் இணையத்தில் பள்ளிகளின் பாதுகாப்பு குறித்தும்,  குடந்தை தீ விபத்துக்காகவும் பெருமளவில்
உதவி செய்யவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் விழைந்துள்ளனர்.
 
இன்று குடாப்பகுதி தமிழ்மன்றத் தலைவர்  மணி.மு.மணிவண்ணன் அவர்களிடம் இருந்து கீழேயுள்ள மடல் வந்தது.
 
உங்கள் பார்வைக்கும், பங்குக்கும் இங்கே பகிர நினைத்தேன்.
 
Dear Friends,
 
We are grateful to the generous members who have already responded to this appeal from the Tamil Manram by sending in their checks. The Collector of Thanjavur has responded to our offer of support (see http://www.bayareatamilmanram.org ).  One of the first life-members of Tamil Manram, Dr. S. S. Rajaram, is currently in Tamil Nadu and he is sending in his first-hand reports.  According to him, the burn victims are being treated by first rate hospitals like JIPMER-Pondicherry, CMC-Vellore, Apollo Hospitals of Madras, MMC-Madras in addition to Thanjavur Hospital.
 
 Right now, the medical care is quite adequate.  But Dr. Rajaram cautions that more serious care will be need once the burn injuries start healing.  The children will be needing skin grafting (Plastic surgery) and  intense physio and psycho therapy.   Each child will need to be evaluated to see what percentage of skin surface has been affected and only then the true cost will be known.
 
As communicated earlier, we are working with FeTNA (Federation of Tamil Sangams of North America), a non-profit charity and is an umbrella organization of most of the Tamil associations in America and Canada in this effort.  FeTNA has announced its plan of action and the agencies through which service will be delivered in India.
 
1.
 
What is the plan of action?
 
Short term
 
To provide all possible help for the surviving children who are burn victims - to bring them to the normal life condition as much as possible. (About 10 to 15 with 5 of the children in critical condition according to Tanjore Medical College).
 
Long term
 
Provide help to survey the rest of the schools in and around Kumbakonam as the first step for safety standards and procedures with qualified, trained and experienced paid volunteers based on funding. Utilize the obtained information along with the recommendations from Technical professionals and recommend the same to the local, state and central govt. of India to prevent future mishaps. Follow up with local NGOs or some of the Tamil Charitable organization - our counter parts in USA already involved in charitable and volunteer work in Tamil Nadu
 
2. 
 
   Through whom the funding will be spentContacts were made with local medical group (Tanjore Medical College) and Charitable organizations (Lions Club, Rotary Club) in Kumbakonam regarding this mishap and their recommendations.Further efforts will be made to contact few of the local NGOsFunding will be distributed to these organizations and plan to follow up through our fraternal charitable organization in USA, already involved in charitable and volunteer work in Tamil Nadu
 
3.
 
To whom the donations have to be addressed and sent:
 
Please make out a check for FeTNA, specify "Fire Relief - Kumbakonam" in theMemo and mail the check to:
 
Mani M. Manivannan
President,
Bay Area Tamil Manram,
38871 Jonquil DriveNewark,
CA 94560
 
Donations to the Fire Relief fund is tax deductible and you will receive an acknowledgement from FeTNA.  To speed up relief plans, please e-mail your "Pledge amount" and send your contributions ASAP. (We thank all those individuals  who have already pledged to help the victims). 
 
Send your pledge e-mails to president@bayareatamilmanram.org
 
Thanks,Regards,
 
Mani M. ManivannanPresident,
Bay Area Tamil Manram
http://www.bayareatamilmanram.org 
Serving the community since 1980
 
 

Monday, July 19, 2004

தருணங்கள்

===========

kumbax

மனைவியோடு
பயணிக்கிறபோதுதான்
பழைய காதலியை
பார்க்க நேர்கிறது

இங்கு
மாதக் கடைசியில்தான்
புத்தகக்கண்காட்சி
நடத்தப்படுகிறது

கடைசிக் காசில்
சிகரெட் பற்றவைத்துத்
திரும்பும்போதுதான்
கை நீட்டுகிறார்கள்
பிச்சைக்காரர்கள்

வெகுநேரமாகியும்
வராத பேருந்து
பழைய நண்பர்கள்
எதிர்ப்படுகிற
பொழுதிலெல்லாம்
வந்து தொலைக்கிறது

எப்பொழுதாவது
கவிதை எழுத
உட்காரும் பொழுதுதான்
எங்கிருந்தாவது
காதில் விழுகிறது
மரணச்செய்தி

கவிஞர் காற்றுத்தேவன் தி.ஒ.கவிதை யில் எழுதியது.

மரணம் பற்றியே மூன்று நாட்களில் எத்தனை கவிதை எழுதிவிட்டார்கள் நம் கவிஞர்கள்..!!!

கவிதையோடு காரியமும் தேவை என்று காசி சொன்னதை அருண் தவறாக புரிந்து கொண்டு இருப்பார் போல.

Friday, July 16, 2004

பொய்யாய் பழங்கதையாய் போன புனிதக் கணங்கள்
=================================================
 
babies
 
  பயத்தோடும் மனப்படபடப்போடும்தான் தூக்கினேன். மெத்து மெத்தென்ற கம்பளித்துணி சுற்றித்தான் கையில் தந்தார்கள்.  ' பாத்து..பாத்து' என்றார் அம்மா. மங்கலான மருத்துவமனை விளக்கொளியில் மயங்கிக் கிடக்கும் ராட்சசப் புழுப்போல அது நெளிந்தது.  சரியாகப் பிடிக்காவிட்டால் கையிலிருந்து பாதரசம் போல நழுவித் தரையில் கொட்டி சிதறிவிடும் போல இருந்தது.  எனது வலது உள்ளங்கையில் கம்பளிச் சுற்றையும் ஊடுருவி அதன் உடலின் வெப்பம் வெது வெதுத்ததை உணர முடிந்தது
 
       இமையிலும், கன்னங்களிலும் ரத்தம் ஓடுவது இளஞ்சிவப்புச் சாயம் பூசினாற்ப்போல தெரிந்தது.  உடலிலிருந்து பச்சை மண்ணிண் மணம். பனிக்குட நீரின் எச்சங்கள் இன்னுமிருந்தன போலும்.  தலையின் ரோமங்களில் இன்னமும் கூட பிசுபிசுப்பு.  உதடுகள் விரிநது கொட்டாவி விட்டது ஓர் உலக அதிசயம் போல நிகழ்ந்தது.  எங்கள் அனைவரின் வாய்களும் பிளந்து மூடின.
 
   யார் உருவாக்கினார்கள்.? நானா..? என்னால் எப்படி முடிந்திருக்கும்.? களிமண்ணைப் பிடித்து ஒழுங்காக உருண்டையாக்கத் தெரியாத நானா..?? பென்சிலால் நேராக கோடு போடத் தெரியாத நானா..??
 
   இவளா..? தலைமுடி கலைந்து சோர்ந்துபோய் எதையோ பெரிதாகச் சாதித்து விட்ட ஆணவத்தில் கட்டிலில் சாய்ந்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறாளே இவளா..? எப்படி.?இது என்ன சாம்பார் செய்வது போல ஒரு கலையா.? தனது வேலைத் தளத்தில் கொம்ப்யூட்டரில் உட்கார்ந்து வண்ணவண்ணமாக க்ராஃபிக்ஸ் வரைவாளே, அப்படி வயிற்றுக்குள் வரைந்தாளா?
 
   நாங்கள் இருவரும் சேர்ந்தா..? ஒரு காம முயக்கத்தின் விளைவாகவா இப்படி ஒரு அற்புதம்..? எந்த இரவில் , எந்தக் கணத்தில் நிகழ்ந்திருக்கும் ?ஏன் எங்களுக்கு அந்தக் கணத்தின் அருமையும் புனிதமும் புரியாமல் போனது..??
 
 - பாக்கியம் பிறந்திருக்கிறாள் சிறுகதையில் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு.
 
  குடந்தை விபத்தில் குருத்துக்களைத் தொலைத்த பெற்றோர்களுக்கு சமர்ப்பணம்.
 
babies1
 

இந்தியா ஒளிர்கிறது
==================
 
    பிள்ளைகறி கேட்டிருக்கிறார் கடவுள். வாரிக் கொடுத்துவிட்டு, மறந்துபோக மற்றொரு விபத்து. எரிந்த தீ ஜுவாலையில் எத்தனை கலாம்களோ..?? எத்தனை சிதம்பரங்களோ..??  கரிக்கட்டைகளாய் கிடக்கும் இந்தியாவின் பிஞ்சுகளை உலகம் அதிர்ச்சியோடு பார்க்கிறது. புத்தகம் வாங்கவும், இலக்கியம் படைக்கவும் முனையும் எம்மில் எத்தனை பேருக்கு ஓலைக்கூரை பள்ளிகளை காங்க்ரீட் கட்டிடமாக்க சித்தமிருக்கிறது..??
 
 முதல்வர் ஜெ பள்ளிகளுக்கெல்லாம் ஓலைக்கூரை மாற்றும் திட்டம் கொண்டுவருவாரா..அல்லது மதிய உண்வுக்கான சமையறைளை பள்ளியினின்று விலக்கி கட்டப்போகிறாரா..
 
எழுத வேறொன்றுமில்லை..உள்ளே ஓலமிடுவதைத் தவிர... 
 

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...