Monday, April 26, 2004

அன்றும் ..... இன்றும் ...... murug

==================

ராயர் காப்பி கிளப்பில் மறுபடியும் இரா.மு வுக்கு அழைப்பு விடுக்கும் திரி ஓடிக்கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக நடந்த காயிதப் பரிமாற்றங்கள் அந்தக் கால நிகழ்வுகளை கொஞ்சம் கண்முன் கொண்டு வந்தன. கசிந்தது உள்ளம். உங்கள் தகவலுக்கு....

நா. கி:

இங்குள்ள மற்றவர்கள் மீதும் (உங்க¨ளையும் சேர்த்து) நல்ல அபிப்ராயங்கள் உள்ளன. பா.ரா வோ, ரெ.காவோ, இரா.கியோ. ஹரிகிருஷ்ணனோ, பிரபுராஜதுரையோ, நாகூர் ரூமியோ, வெங்கடேஷோ, வெங்கட்டோ, திருமலையோ,பத்ரியோ (விடுபட்டவர்களுமிருக்கலாம், தயை கூர்ந்து மன்னிக்கவும்), இங்கே ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் மிகச்சிறப்பாக எழுதும்போது நமது சந்தோஷத்தை ஏதோவொருவகையில் தெரியபடுத்தத்தானே வேண்டும். புதுமுகமெனக் களமிறங்கி, எல்லாவற்றையும் நேர்த்தியாக, சோர்வின்றி மடலில் வெளிப்படுத்த முனைந்த சுரேஷைக்கூட நாம் வெளிப்படையாக பாராட்டியாக வேண்டும். இது எழுத்துக்கு நாம் கொடுக்கின்ற குறைந்த பட்ஷ வெகுமதி. இந்த வெகுமதிகளுக்காக அவர்கள் கையேந்தி நிற்பதில்லை. இது மறைத்துக் கொடுப்பதற்கு கையூட்டுமல்ல, உரிய நேரத்தில் வெளிப்படையாகக் கொடுப்பது நியாயமென்றே நினைக்கிறேன்.

பிரகாஷ்

இணையத்துக்குள் நுழையுமுன்னர், என்னுடைய உலகம் மிக மிகச் சிறியது. படித்த புத்தகங்களும் கேள்விப்பட்ட படைப்பாளிகளும் மிகக் குறைவு. மத்தளராயரும், லவணராயனும் பா.ராகவனும், ராமராயரும் நடத்திவந்த ராகாகியில் இணைந்த பின் தான் பல புதிய எழுத்தாளர்கள், படைப்புகள், விமர்சனங்கள், இணைய இதழ்கள் என்று பலதும் அறிமுகமாயிற்று. எனக்கு படிக்க தோதான இடம் இதுதான் என்று புலப்பட்டது. அண்ணாநகர்காரார் ( அப்போது நங்கநல்லூர்) மரபு சொல்லிக்கொடுக்கத்துவங்கினார். ( அப்ப அப்ப டிமிக்கி கொடுத்தார் என்றாலும், இனி அவர் தப்பிக்க முடியாது. அவர் துவக்கி இருக்கும் வர்ச்சுவல் மரபிலக்கியப் பள்ளியிலே முதல் பெஞ்ச்சில் சீட்டு போட்டு வைத்திருக்கிறேன். :-)) . சேவியரின் கவிதைகள், பசுபதிராயரின் கிறுக்கல்கள், நிர்மலாவின் குழந்தைகள் பற்றிய கவிதை கட்டுரைகள், சொக்கனின் நூல்விமர்சனங்கள், எல்லே சீனியர் மற்றும் ஜூனியரின் அங்கதங்கள், மத்தளராயரின் தேதியில்லா நாட்குறிப்பு, ராகவனின் எழுத்தாளர் அறிமுகங்கள், இராம.கி அய்யாவின் மறுக்க இயலா தருக்கத்துடன் வந்த வந்த தனித்தமிழ் பற்றிய கட்டுரைகள், ஆராயரின் கவிதைகள், கானாக்கள் & பொன்னடியான் விமர்சனங்கள் , பாலாஜியின் அமெரிக்கா bases சிறுகதைகள், ரெகாவின் படைப்புக்கள், வெங்கடேஷின் விமர்சனங்கள், சடையன் சாபுசாரின் ஒன்லைன் 'பஞ்ச்'கள், ஆனந்த் ராகவ்வின் பாங்காக் நைட்லை·ப் கட்டுரைகள், தனிநபர் விமர்சனமல்லாது சித்தாந்தங்களை மட்டுமே கேள்வி கேட்ட முகமூடிகள், பின்நவீனத்துவத்தையும், ஜப்பான் கழிவறைகளையும் இணைக்கும், யாப்பும் அறிவியலும் தெரிந்த , வெங்கட்டின்மொழி நேர்த்தி, கே.ஆர்.ஐயங்காரின், நகைச்சுவைக் கட்டுரைகள், வாஞ்சிநாதனின் யாப்பு, நிறுத்தற்குறியீடுகளற்ற நீளவாக்கியங்களிலான , நகைச்சுவை என்று முன்பு நினைத்த, ஆனால் மிக ஆழமான படிமங்கள் கொண்ட ரமணிதரனின் படைப்புக்கள் என்று பலவிதமான வாசல்களை திறந்துவிட்டது. இவை அனைத்தும் எந்த எதிர்பார்ப்புமில்லாத அனைவரது ஈடுபாட்டினால் நிகழ்ந்தது.

புதியவர்களுக்கு அந்தக் குழு மடல்கள் படிக்க எகலப்பை தேவைப்படலாம். இங்கே இறக்கிக்கொண்டு, உங்களுடைய கண்ணியில் Install செய்து கொள்ளுங்கள். முடிந்தால் குழுவில் சேருங்கள். ஆரம்பத்தில் பயமாக இருக்கும். பிறகு பயம் பழகிவிடும்.

என் பயணம் அங்குதான் துவங்கியது.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...