Saturday, April 17, 2004

பிள்ளைக்கு

===========

வாழ நினைத்த வாழ்க்கை பற்றி
நினைக்கையில்
பொங்கி வந்த துக்கம்
மறந்து
உன் சிரிப்பினில் நான்
உலகம் மறப்பினும்

தன் வயதில் தனக்கெட்டா
வசதியும் செல்வமும்
உனக்கு வேண்டும் என்று
என்ணி எண்ணி
தூக்கம் விலக்கினும்

படிக்கும் வயதில்
குடும்ப சூழலால்
தானிழந்த வேடிக்கையும்
விளையாட்டும்
நீயிழக்கலாகாதென்று
என் சுபாவம் மாற்றி
உப்போடு அப்பாய்
உணர்ந்து கலப்பினும்

கண்களை லேசாய் நீ
சிமிட்டினாலே
தூசியோ தும்போவென
பதைத்திடினும்
உனக்காக என் வாழ்க்கையயே
மாற்றி வைத்து
இழந்தவளை உன்னில்
கண்டிடினும்

பணிநேரப் பிரிவில்
உன் அன்னை
உனைப் பிரிந்து
வெளிச்செல்ல
என்னுடன்
பேசி பழகி
சிரித்து களித்து
மகிழ்ந்து நீ
ஆடித்திரிந்த அந்த
மூண்று மணி நேரமும்
என்னை
அம்மா அம்மா வென்றே
அழைத்தாயே...

நான் தாயுமானவானா..??
இல்லை
தந்தை என்ற பொறுப்பையே
இதுநாள்வரை
தட்டிக் கழித்திருந்தவனா..??

தெரிந்திதை செய்தனையோ...
அல்லது
என் மனசாட்சி விழித்ததுவோ..

சொல்லப்பா
என் ஸ்வாமிநாதா..


இன்றைய கவிதை உபயம்

என் செல்வன். ஸ்ரீமான். சூர்யா சுந்தர்ராஜன்

blog_surya

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...