Tuesday, August 31, 2004

மரத்தடி மண்டகப்படி - 7

நாளை காலை என் புது வீட்டில் கணபதி ஹோமம். நேற்றிரவு ஆபிசில் இரவு ஒரு மணி வரை திடீர் வேலை. சாயங்காலம் புதிதாக சேரப் போகும் கிடார் வகுப்பு. பிள்ளை சூர்யாவுக்கு ஏகக் காய்ச்சல், மற்றும் அதனாலான மன உளைச்சல்.

இத்த்னைக்கும் நடுவில் இங்கு எழுத, கலந்து கொள்ள முக்கியக் காரணம் மதியக்கா.

போன வருடமே கலந்து கொண்டு எழுதச் சொல்லி தாக்கீது வந்தது. ஏதோ காரணத்தால் கலந்து கொள்ள இயலவில்லை. வலைப்பூவை பொத்தி, பாதுகாத்து, பாலூட்டி, சீராட்டி வரும் அவர், வலைப்பூ ஆசிரியராக இருக்கச் சொல்லி, இரண்டு/ மூன்று முறை தாக்கீது அனுப்பினார். நன்றாக செய்ய வேண்டும் என்று நினைப்பதை, நேர நெருக்கடியில் செய்தால் குவாலிட்டி பாதிக்கப்படுமோ என்ற எண்ணத்தில், அதையும் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். எனவே இதை எப்படியாவது எழுதிவிட வேண்டும் என்ற உந்துதலில் செய்த விஷயம்.

நன்றாகவந்திருக்கிறதா என்பது தெரியவில்லை. குழுவில் நிலவும் மயான அமைதியைப் பார்த்தால், சற்றே பயமாகக் கூட இருக்கிறது.

இனி என்ன..??

கிளி என் கையை விட்டு பறந்து விட்டது. அதை தோளில் வைத்து கொஞ்சுகிறீர்களோ, குழம்பில் போட்டுகுமுக்குகிறீர்களோ, உங்கள் இஷ்டம்.

போன வாரம் கலந்து கொண்ட சாக்ரமண்டோ தமிழ் மன்றம் பிக்னிக் பற்றியும், என் இசைத் துரத்தல்களைப்பற்றியும், தென் தமிழ்நாட்டில் நான் போக நினைத்திருக்கும் ஊர்கள் பற்றியும், 1992 ல் கல்லூரி மேகஸினில் வெளிவந்த என் கதையை மறு பிரசுரம் செய்யலாமென்றும், ஏன் காதலிக்க வேண்டும் என்பதைப் பற்றியும்,இணையத்தில் தமிழ் எழுதுபவர்களின் அபார ஆர்வத்தையும், உழைப்பையும், ஐநூறு பேர் உள்ள மரத்தடியில்இன்னும் எத்த்னை பேரை வலைப்பூ உலகுக்கு இழுக்கலாம் என்று நினைத்ததையும் சொல்லலாம் என்றுதான் நினைத்தேன்.

ஒற்றை விரலால் குத்திக் குத்தி இந்த மடல்களை எழுதுவதெற்கே "உன்னைப் பிடி; என்னைப் பிடி; என்றாகிவிட்டது.

என்னுடைய கோணங்கித்தனங்களை பொறுத்த்க் கொண்டு வாயைத் திறக்காமல் மெளனம் காக்கும் உங்கள் அனைவருக்கும் ஏசுநாதரை விட சகிப்புத் தன்மை ஜாஸ்தியாகி இருக்கிரது என்கிற எண்ணத் துணிபுடன்,
சூரியனுக்கு டார்ச் அடிக்க அடுத்த மடலில் வருகிறேன் எனச் சொல்லிக் கொண்டு...

ஜூட்........


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...