Monday, August 30, 2004

மனசும் புத்தியும்
===============

திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது என் தகப்பனார் ஒரு முறை சொன்னார். " கலைஞர்கள் மிக மிக உணர்ச்சிவயப்படுபவர்கள்.அதனாலேயே சமூகத்தின் ஒழுக்க விதிகளை அவர்கள் கண்டுகொள்ளாமல், குடியர்களாகவும், புகைப்பிரியர்களாகவும், பூவைப்ரியர்களாகவும் இருக்கிறார்கள். குடும்பவாழ்க்கை சோபிக்காமல் அல்பாயுசிலேயே உயிர் விட்டு விடுகிறார்கள்" என்றார்.

கிட்டத்தட்ட அது உண்மையாகத் தான் தோன்றுகிறது. இந்த வாரம் என் மனசுக்குப்பிடித்த பாலுமகேந்திரா, விகடனில் வாய் திறந்திருக்கிறார். எத்தனைதான் மெளனிகாவைப் பற்றி சொன்னாலும், என்னால் முடியவில்லை.தவறிவிட்டேன் என்கிற அவர் நேர்மையான தோல்வி மனப்பான்மைதான் தெரிகிறது அந்தப் பேட்டியில்.

பாலுவின் படமும் சரி, அவர் தேர்ந்தெடுக்கும் கதாநாயகிகளும் சரி, எனக்கு மிகவும் பிடிக்கும். ஆஹா..ஓஹோவென்று பிரமாண்டம் பண்ணாமல், மனிதனுக்கு உள்ளிருக்கும் ஒரு கவிஞனை தொட்டுத் தடவுவது மாதிரி எத்தனை படங்கள்...மூன்றாம் பிறை, அழியாத கோலங்கள், மூடுபனி...எத்த்னை சொல்வது. ஷோபாவிலிருந்து, அர்ச்சனா வரை, மெளனிகா உட்பட எத்த்னை லட்சணமான கதாநாயகிகள். சிவப்பும், பளபளப்பும் கோலோச்சுகின்ற செல்லூலாய்டு உலகில் இத்த்கைய 'கருப்பு' கதாநாயகிகளை தன் படத்தில் நடிக்க வைக்க தன் ரசனையின் மேல் அவருக்கு எத்தனை நம்பிக்கை இருந்திருக்க வேண்டும்...! அந்த ரசனைதான் அவரை அகிலாம்மாவிற்கு 'துரோகம்' இழைக்க வைத்திருக்கிறது. புத்தியும் மனசும் வெவ்வேறாகப் போன கலைஞர்களுகே உண்டான பலவீனத்தின் சமீபத்தைய பலிதான் பாலு. காலம் அவரைக் காப்பாற்றி, இரண்டு பேருக்காவது (?!!) அவரை நல்ல கணவனாக வைத்திருந்து நமக்கு இன்னமும் பல மயிலிறகு படங்களை அவர் மூலமாக அறிமுகப்படுத்த வேண்டும்

கிருத்திகா, ஜீவஜோதி என்று தறிகெட்ட அண்ணாச்சியும், செரினா etc etc என்று ஓடிய நடராஜனும், ஜெயலட்சுமி பின்னால் ஒட்டுமொத்தமாக ஓடிய தென்மண்டல (கே)காவலர்களும் கலைஞர்களா என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் நான் அப்பீட்.

உள் வேறு, புறம் வேறு என இரட்டை வேடம் காட்டி கொள்கை முழக்கம் செய்வதை விட, பாலு மாதிரி பகிரங்கமாக பேச நிசமாகவே தில் வேண்டும்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...