Friday, August 06, 2004

வாழும் முறை - கற்றுக் கொடுக்கப் படும் விஷயமா..??
=================================================

SriSri

"The Art of Living " என்ற வகுப்பு இப்போது அமெரிக்காவில் மிகப் பிரபலமாகிக் கொண்டு இருக்கிறது. சுதர்ஸன க்ரியா என்று அழைக்கப்படும் அந்த வகுப்புகளை மகரிஷி ரவிஷங்கரின் சீடர்கள் உலகமெங்கும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்தும், பரபரப்புகளிலிருந்தும் விலக்கி, வாழும் முறையை போதிப்பதாய் சொல்லும் இந்த வகுப்பை இளைஞர்கள் பெரிதும் நாடி செல்கிறார்கள். சுதர்ஷன் என்ற என் ஐயங்கார் நண்பனொருவன் இதைப் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தான். கொஞ்ச நேரம்
கேட்டுக் கொண்டிருந்து வீட்டு , "சுதா...நீ கடைசியாக எப்போது 'சந்தியாவந்தனம் செய்தாய் என்றேன். ஆள் அம்பேல். கிரிதர் டாட்டிபிகாரி என்ற என் நண்பனின் சகோதரன், இந்த வகுப்பு/தியானப்பயிற்சி ஆரம்பித்த மூன்று நாட்கள் கழித்து திடீரென்று அழ ஆரம்பித்தவன் தொடர்ந்து ஆறு மணி நேரம் அழுது கொண்டிருந்திருக்கிறான். " வாழ்க்கையில் அதுவரை அவன் சேமித்து/புதைத்து வைத்திருந்த துயரங்களையெல்லாம் அவன் கரைத்திருக்கிறான்" என்றான் கிரி பயபக்தியுடன்.

எனக்கு வகுப்பு வேண்டாம் என்று சொல்ல அது ஒன்றே காரணமாகி விட்டது .

அறுபது மணி நேரம் அழ யாருக்கு தெம்பு இருக்கிறது...??



No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...