Wednesday, November 10, 2004

வாங்க பாய்...

Toastmaster, எம்.ஜி.ஆர், கஸல், இந்திப்படங்கள், கானா, அமீரகவாழ்க்கை, "தினம் ஒரு கவிதை" கவிதைகள், மார்க்க சிந்தனை, திர்லக்கண்ணி, யாத்கார் பாயா, மரத்தடி, ராயர் காப்பி க்ளப், OTIS போன்றதொரு ரகளையான கலவைக்கு சொந்தக்காரர் அபுல் கலாம் ஆசாத். ரா.கா.கி யில் என்னுடைய அந்த நாள் சகா. மடலாடற்குழுக்களையும், கவிதைகளையும் தொடர்ந்து வாசிப்போருக்கு அறிமுகமான பெயர். வயதில் அனுபவத்தில் பெரியவர்களிடத்தில் அவர் காட்டும் மரியாதையை தூரத்திலிருந்து பார்ப்பவருக்கு "அது பசப்பலோ..? " என்ற் சந்தேகம் கூட சில சமயங்களில் வரும். ஆனால் கொஞ்ச நாள் பாய் சாஹேபை தொடர்ந்து கவனிப்பவர்க்கு அது அப்படி தெரியாது. பாய் எழுதிய கானாக்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது. வாத்தியார் சுஜாதாவால் சிலாகிக்கப்பட்ட கானாக்களுக்கும், வெண்பாவுக்கும் சொந்தக்காரர். எழுத்துகளில் தெரியும் மனித நேயத்துக்காகவும், பழசை மறக்காத பண்புக்காகவும், இந்தியனாக தன்னை உணரும் முஸ்லிமாக இருப்பதாலும். நாப்பது வயசு என்பதெ பிரதிபலிக்காத துள்ளல் எழுத்துக்காகவும் ஆசாத் பாயை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

இந்த நதியும் இங்கே வந்து கலந்து இருக்கிறது இப்போது.

வாங்க பாய்..வணக்கம்...


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...