ஆச்சரியமாகத்தான் இருக்கிறது நடந்திருக்கும் கைது சம்பவம். அதே சமயத்தில் எந்த அளவுக்கு இது போகப்போகிறது...என்பதும் புரியவில்லை. ஹிந்து மதம் என்றால் அது சங்கரமடம் என்று நினைப்பவர்களின் நம்பிக்கையில் பெரிய அடி விழுந்திருக்கிறது. அது ஒருவகையில் நல்லதுதான். ஹிந்து மதத்திற்கும், கடவுள்களுக்கும், சுலோகங்களுக்கும், ஆசார அனுஷ்டானங்களை பேணுவதற்கும் நாங்கள்தான் அத்தாரிடி என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள்தான் ஜெயேந்திரரை போற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களைத்தான் "அவா" என்கிற பொதுபெயரில் அருண் சொன்ன வலைப்பதிவர் அழைத்திருக்கிறார் என நினைக்கிறேன். மற்றபடி,
வகுப்பு வித்தியாசம் இல்லாமல், யோசிக்கத் தெரிந்த எல்லாருமே காலம் காலமாக ஜெயேந்திரரின் நடவடிக்கைக்களை கண்டித்தே வந்திருக்கிறோம்.
திருவாளர் சோ கொடுத்திருக்கும் பேட்டியைப் பார்த்தால் சாமியாரை இந்த வழக்கில் கோர்க்க வலுவான சாட்சியங்கள் கிடைத்த பிறகே அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது என நினைக்கிறேன்.
ஹிந்து மதத்தை சாமியார்களின் பிடியிலிருந்தும், மடங்களின் பிடியிலிருந்தும் விடுவிக்க காலமும் நேரமும் கூடி வந்திருப்பது போல தோன்றுகிறது. இறை வழிபாட்டின் உண்மையான அர்த்தத்தையும், நாத்திகவாதிகளின் விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் விதமாக கடவுள் முன் அனைவரும் சமம் என்கிற கருத்தை அழுத்திச் சொல்லவும் இம்மாதிரியான நடவடிக்கைகள் உதவுமானால், குரல் உயர்த்தி உயிர் விட்ட அந்த ஏழை பிராமணனுக்கும், ஜெயலலிதாவுக்கும் நன்றிகள்.
என்ன நியாயம் கிடைக்கப் போகிறது சங்கரராமனுக்கு என்று பார்ப்போம்.
Friday, November 12, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
மாமன்னன் ----------------------------- மாரி செல்வராஜின் மாமன்னன் பார்த்தேன் உன் வயதை விட குறைந்த வயதுடைய ஒருவன் உன் தந்தையை ஒருமையில் அழை...
No comments:
Post a Comment