தமாஷா இருக்கிறது. ஆயுசு முழுக்க தமிழ் தமிழ்னு பேசியும் எழுதியும் வந்த தாத்தா, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி தமிழகத்தைத் கலக்கி, அதன் விளைவாக ஆட்சியையே பிடித்தவர், இப்போது தமிழகத்தில் இந்தியை புகுத்துபவராய் முதல்வரால் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார். ஜெவுக்கு சுக்கிர தசை தான்.
பதிலுக்கு "அமைச்சர் பாலுவால் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்பதோடு நிறுத்தி இருக்கலாம். இதற்கு பதிலாக அவர் தந்திருக்கும் ஓரங்க நாடக பிரலாபம் சலிப்பூட்டூகிறது. ச்..சை !! பெரிசுக்கு இந்த வயசுல இதெல்லாம் தேவையா..??
மேலும், தினகரன் போன்ற திமுக சார்பு பத்திரிக்கைகளில், இந்த செய்தி வரும்போது, உபயோகப்படுத்தும் ஜெ வின் புகைப்படம், இந்த சினிமா ஸ்டில் புகைப்படம் !!! இவர்களுக்கு வேறு புகைப்படமே கிடைக்கவில்லையா..?? என்ன சொல்ல வருகிறார்கள்..?? ஆயுசுக்கும் நடிகரென்றும், மலையாளியென்றும் எம்ஜியாரை சொல்லி, அவரை இழிவுபடுத்துகிறோம் என்று இவர்கள் நினைத்துக் கொண்டதுபோல், கடைசி வரை ஜெயலலிதா ஒரு நடிகை என்பதை மக்களுக்கு ஞாபகமூட்டிக் கொண்டே இருக்கிறார்கள் போலிருக்கிறது.
ஆளாளுக்கு தேர்தல் ஞாபகம் வந்துட்டுதுடோய்...!!
பி.கு: இரண்டு நாள் கழித்து விடுத்த இந்த அறிக்கையை முதலிலேயே சொல்லி இருந்திருக்கலாம்.
No comments:
Post a Comment