Monday, December 27, 2004

நடுங்கும் உள்ளம்

கடல் கொந்தளிப்பு என்பதெல்லாம் நமக்கு வெறும் செய்தி. மிஞ்சிப்போனால்
இரண்டு நாள் தூக்கம் கெடும். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ, அது வாழ்நாள் முழுக்க ஆறாத காயம். செத்துப்போனவர்களை கூட்டம் கூட்டமாக புதைக்கிறார்களாம். மொத்தமாய் எரிக்க பணிக்கிறார்களாம். கஷ்டம்தான். வேறொன்றும் செய்ய இயலாது அவர்களுக்கு. ஆனால் இருப்பவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அவர்கள் சோகத்தை விட்டு வெளியே வரும் வரைக்கும், மறுபடி கடலுக்கு போய் தொழில் நடத்த தைரியம் வரும் வரைக்கும், கடலில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் வசித்துக் கொண்டு மிச்ச சொச்ச நாட்களை ஓட்ட, அவர்களுக்கு நம்பிக்கை வரும் வரைக்கும் உதவ வேண்டும். இன்று இந்த செய்தியை படித்து விட்டு எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. கண்ணில் கண்ணீர் மல்கியது. இந்தியனாக இருப்பது என்னவென்று இன்று விளங்கியது.

தமிழ் வலைப்பதிவர் சமூகத்திலிருந்து அனைவரும் பத்ரியை தொடர்பு கொள்ளுங்கள். நம் அனைவர் மூலமும் நிதி திரட்டி கருணாலயா மூலம் பாதிக்கப்ப்ட்டவர்களுக்கு சோறாவது இடுவோம். வங்கிக் கணக்கு எண் அவருக்கு கிடைத்தாலும், க்ரெடிட் கார்டு மூலமோ, பே பால் மூலமோ கொடுக்க முடிந்தால் இன்னமும் வசதி.

இது இல்லை என்றால் இனி எழுதுவதும், யோசிப்பதுமே அர்த்தமற்றது.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...