(படத்தில் டைரக்டர் மற்றும் அந்தரா மாலி)
ராம்கோபால் வர்மாவின் ட்ரீட்மெண்ட் இப்போது கொஞ்சம் முதிர்ச்சியாக இருக்கிறது. ரங்கீலா படத்தைப் போல இதற்கும் சினிமாத் துறை தான் களம். ஆனால் அதில் உள்ள ட்ராமா இதில் கிடையாது. பாத்திரங்கள் அழுத்தமானவர்கள். (ஒரே ஒரு இடத்தை தவிர) அதிகம் பேசாமல், வெறுப்பானாலும், கோபமானாலும், காத்லானாலும், திமிரானாலும் அடர்த்தியான செறிவான மெளனத்தில் ( தாங்க்ஸ் ஆசிப்பு :-) ) காட்டி விடுகிறார்கள்.
சிறுகதையை நாவலாக்கினால் என்ன கொடுமை நடக்குமோ, அதை விட கொடுமை இந்தப் படத்துக்கு நடந்திருக்கிறது. சங்கரமடத்தின் புனிதம் போல மகா வீக்கான, நோஞ்சலான ஸ்டோரி லைன். நடிகர்களின் நடிப்பில் சின்ன சுவாமிஜியின் அழுத்தம். அங்கிருக்கும் பணத்தைப் போல க்தாநாயகியின் கவர்ச்சி. விஷயம் வெளியே வந்த வேகத்தைப் போல மகா ஸ்லோவான திரைக்கதை.
அபிஷேக் பச்சன் அருமையாக நடித்திருக்கிறார். அவர் ஆகிருதிக்கும், உயரத்துக்கும், ஸ்கூல் பையன் மாதிரி மாலியின் முன் I love you..I love you என்று சொல்லிச் சொல்லி அவர் அவமானப்படுத்தப் படுகையில் நமக்கே ஐயோ பாவமே என்றிருக்கிறது. நெய், பச்சை கற்பூரம் போட்டு அல்வா சாப்பிட என்றே பிறந்த மாதிரி ஒர் மூஞ்சோடு சஜித் தேஷ்முக். அந்த்ரா மாலி..?!!! - நான் காலி. சில க்ளோஸ் அப்புகளில் எங்கள் தெருவில் இட்லி வியாபாரம் செய்த ஜானகி அம்மாள் போல வயதான களை. பாலுமகேந்திராவின் கதாநாயகிகள் எல்லாம் கொஞ்சம் கிராமத்து லட்சணமாக இருப்பது போல, ராமின் கதாநாயகிகள் எல்லாம் "கோவா" களையாக இருக்கிறார்கள். சர்...ர்ரியான கட்டை. கூடப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி "உரித்த கோழி மாதிரி இருக்கிறாள்" என்றார்.
சிக்கனமான ரிப்பன் உடைகள். அதைவிட சிக்கனமான சிரிப்பும், இடையும். ஆனால் உடம்புக்கும், முஞ்சிக்கும், படத்தில் அவர் கேரக்டருக்கும் சம்பந்தமே இல்லை. சரியான தலைகனம் பிடிச்ச டீச்சரம்மா...!! இசை அருமையாக இருக்கிறது . யாரென்று தெரியவில்லை. காமிராவும் அருமை.
படம் ஸ்லோவாக இருப்பது ஒரு குறையில்லை எனில் தாராளமாக முயற்சிக்கலாம்.
தலைவா! நம்ம வலைப்பூவுலயும் நாச்சுக்கு ஒரு விமர்சனம் எழுதியிருக்கனே. பாத்துட்டு சொல்லுங்க தலைவா!
ReplyDeleteஅன்புடன்
ஆசாத்