Friday, December 17, 2004

காலம் தாண்டும் நடப்புகள்



ச்..ச்ச்...என்ன கண்றாவிப்பா இது...பாக்கவே கஷ்டமா இருக்கே..

இவர் பேரு சுப்ரமணியன். முன்னாடி ஜெயேந்திரர் ஜெயேந்திரர்னு இவரை கூப்பிடுவாங்க. ஆனா, இவருக்கு முந்தையவரை கூப்பிட்ட மாதிரி காஞ்சிப்பெரியவர்னோ, சங்கராச்சாரியார்னோ கூப்பிடறது ரொம்ப அபூர்வம்.

சரி..சரி..விஷயத்துக்கு வா..இவர் என்ன பண்ணினார்னு சிலுவை..ஸாரி..சூலம் சுமக்க வைக்கிறாங்க. கீழ்ஜாதி மக்களை கோயிலுக்கு வாங்கன்னு கூப்பிட்டாரா..??

இல்லையே...அவங்களுக்கு தனி கோயில் கட்டிக்கலாம்னு அறிவுரை சொன்னாரு.

அவங்க மடம் நடத்தற நிறுவனங்கள்ள எல்லாரையும் சமமா நடத்தினார்னு சொல்லி, மேல்ஜாதி சக்திகள் மாட்டி விட்டுடுச்சா..??

அப்படி ஒண்ணும் தெரியலையே..

பெண்களுக்கு மதிப்பு தரணும். அவங்கதான் குடும்பத்தோட வேர்ங்கிறதால, அவங்களை சமமா நடத்தணும்னு சொல்லி, அதனால ஆணாதிக்க கும்பல் இப்படி பண்ணிடுச்சா..??

அதுவும் இல்லை. பெண்கள் வேலைக்கு போறதயும், சுயசார்போட இருக்கறதையும் அவர் ஆதரிச்ச மாதிரி தெரியலை - தனக்கு வேண்டபட்ட பொண்குழந்தைகளுக்கு விவாகரத்து பஞ்சாயத்து பண்ணி வச்சதை தவிர. அது கூட வதந்திதான்.கூடவே எழுத்தாளர் அம்மா ஒண்ணும் கன்னா பின்னான்னு பேசுது. அதை இவங்க பைத்தியம்கிறாங்க. மோசமான பொம்பளைங்கிறாங்க. இதெல்லாம் தெரிஞ்சே அவங்களை மடத்தோட பத்திரிக்கைக்கு ஆசிரியரா கூப்பிட்டு இருக்காங்க...எதுக்கு..??

தமிழுக்காக ஏதாச்சும்..??

அட நீங்க வேற...தமிழ்ல மந்திரம் சொன்னா ஆண்டவனுக்கு தீட்டுன்னு சொன்ன சாமியார் இவரு..

அட கெரகமே.. பிற மதத்து மக்களுக்கு..??

அயோத்தி பிரச்சினையிலே சமரசம் பண்றேன்னு இறங்கினவர் வேற என்னமோ பண்ண ட்ரை பண்ணி இருக்கார். அதையும் தவிர , யாரும் மதம் மாறக்கூடாதுன்னு, ஆட்சியில் அப்ப இருந்த இன்ஃப்ளூயன்ஸை வச்சி சட்டமே போட வெச்சார்.

சரி..மத்தத விட்டுத் தள்ளு..மடத்தில் ஏதாவது..??

அங்கதான் பிரச்சினையே...மடத்தில் நடந்ததா சொல்லப்படற கண்றாவிகள்ள, பத்திரிக்கை சூட்டைக் கிளப்பறதுன்னே சொன்னாலும், அதில பத்து பர்சன்டேஜ்
உண்மையா இருந்தா கூட, அது மடமாவே இருந்ததில்லை போலிருக்கு. அடியாள்கள், சுவாமிகளின் நெருங்கிய உறவினர்கள், அரசியல் தொடர்புகள் மற்றும் பாலியல் குற்றங்களுக்கான முகாந்திரங்கள்னு மர்மப்படம் மாதிரி இருக்கு..

அடக் கருமமே..அப்புறம் எதுக்கு இந்த சிலை..?? எந்த மக்களுக்காக அவர் பாவங்களை இவர் சுமக்கிறார்..??

ஹுஸைனி அப்புவையும், ரவி சுப்ரமனியத்தையும், ரகுவையும் தவிர தமிழ்நாட்டுல வேற யாரும் பாவப்பட்ட மக்கள இல்லைன்னு நினைச்சிட்டார் போலருக்கு..!!

அது யாருப்பா ஹுஸைனி..??

அவர் ஒரு முஸ்லிம் ஃபிகர். ஸோ, ஒரு முஸ்லிம் ஃபிகர், ஏசு சிலுவை சுமக்கிற ஸ்டைல்ல, ஒரு இந்து சாமியாரை சூலம் சுமக்க வைக்கிறது எவ்ளோ பரபரப்பான, மயிர் சிலிர்க்க வைக்கிற நியூஸ்..??

ஆமாம்..ஆமாம். அவர் பேரை ஃப்ரமோட பண்ணிக்கிறதுக்கு மார்க்கெட்டிங் மாதிரி ஆச்சு. மூக்கனுக்கும், மாயவரத்தானுக்கும் ஒரு நாள் பொழைப்பாச்சு. ஹிந்துத்துவ சக்திகளுக்கு இன்னம் கொஞ்ச காலம் கழிச்சு ஆரத்தி காட்ற சிலைக்கு வழியாச்சு. ஏன்னா ஜெயேந்திரர் கடவுள் ஆய்டுவாறே..

அப்ப ஹுஸைனி..??

அவர் துலுக்க நாயன்மார் ஆயிடுவார். மதுரை அழகர் கோயில்ல துலுக்க நாச்சியார் கதை கேள்விப்பட்டதில்லை. அது மாதிரி. மத நல்லிணக்கத்துக்கு நம்மால் ஆன ஒரு தொண்டு.

அட..அட..அட.. புல்லரிக்குதுபா..கடைசில நீயே புரிஞ்சுகிட்டியே . அப்ப, நீயும் என்ன கடவுளை செருப்பால அடிக்கற ஆளா..??

இல்லப்பா.. I beleive in God. Not in Godmen. யாருக்கும் கெட்டது பண்ணாம இருக்கறதையும், யாரையும் இழிக்கவும் பழிக்கவும் செய்யக்கூடாதுங்கிறதையும் மனசாட்சிதான் கடவுள்னு சொல்றதையும் நம்பறவன். பெரிய புரட்சிக்காரனும் இல்ல. ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல. எல்லாவிதமான சலனங்களும் சபலங்களும் ஆசாபாசங்களும் உள்ள சராசரி மனிதன். அம்புடுதேன்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...