Monday, March 15, 2004

உஷார்..... உஷார்
=====================

மாட்ரிட் நகரில் நடந்த 3/11 கோரச்சம்பவம் அல்-கொய்தா
வின் வேலை என்று ஆளுக்கு ஆள் சொல்ல ஆரம்பித்து
உள்ளார்கள். CNN ல் நேற்று அது சம்பந்தமாக ஒரு
செய்திப்படம் பார்க்க நேர்ந்த போது குலை நடுங்கியது.
வெடித்த நாலு குண்டுக்கே இந்தக் கதி என்றால் ,
வெடிக்காமல் போன மற்ற குண்டுகளும் சேர்ந்து வெடித்து
இருந்தால், எத்தனை பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

madrid




எத்தனை படையெடுப்புகள் என்ன, எத்தனை புதிய
கருவிகள் என்ன, எத்தனை புது Homeland security department
மற்றும் சட்டங்கள் வந்து என்ன...?? இந்த சிக்கல்களை
விடுவிக்க தேவையான பொறுமை, அன்பு, இணக்கம்
இல்லாவிடில், இந்த ஒரு பின் லேடனைப் பிடித்தாலும்
இன்னமும் ஆயிரம் பேர் வந்து கொண்டுதான் இருப்பார்கள்.

இதனுடன் சேர்ந்த இன்னோர் கவலை, சந்தேகத்தின் பேரில்
பிடிக்கப்பட்ட குற்றவாளிகளில் மூன்று பேர் இந்திய
பாஸ்போர்ட் வைத்திருந்தார்களாம். 9/11 சம்பவத்துக்குப் பிறகு
ஏற்கனவே அமெரிக்கர்கள், ப்ரவுன் தோலர்களை எல்லாம்
தீவிரவாதி ரேஞ்சுக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனுடன்
இந்தப் புது செய்தியும் சேர்த்து என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லை.

எதற்கும் இந்தியர்கள் ஏர்போர்ட் போகும்போது , ஊரில் ஆசை ஆசையாக
அம்மா போட்டு விட்ட வெள்ளி/ தங்க அரைஞாண்களை அவிழ்த்து வீட்டிலேயே
வைத்து விட்டு போவது நல்லது.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...