Tuesday, March 30, 2004

அட தேவுடா ...தேர்தல்டா..
==========================

தேர்தல் மேடையில் திடீரென்று முதல்வர் ஜெயலலிதா 'மம்முத ராசா'
பாட்டுக்கு டான்ஸ் ஆடினார். சுற்றியிருந்த மக்கள் எல்லாம் ' அம்மா ஆட்டத்தை
பாத்து எவ்வளவு நாளாச்சு ' என்று மெய்மறந்தனர் - தினமலர் செய்தி 30-03-2004.

மேலே கூறியது போல சீக்கிரமே ஏதாவது நடந்தாலும் ஆச்சரியப்படாதீர்கள்.
தேர்தல் நேரம் எது வேணுமானாலும் நடக்கலாம்.போனவாரம் ஓசூர் பகுதி கிராமத்தில்
நடந்தது போல. தேர்தல் செய்திகள் கவர் செய்யும் விகடன், கூட்டத்தில் கலைஞர்
தெலுங்கில் மாட்லாடினார் என்று புளகாங்கிதப்பட்டுப் போயிருக்கிறது.

karunanithi-history1

தமிழ், தமிழ் என்று முழங்கும் இனமானக் காவலர், சங்கத்தமிழ், குறளோவியம்
தொல்காப்பியப் பூங்கா , உரோமாபுரிப்பாண்டியன் போன்ற தமிழ் படைப்புகளின்
சொந்தக்காரர், தன்னுடன் மாறுபாடு கொண்டவர்களை மொழியின் பேராலும்,
இனத்தின் பேராலும் ( மலையாளி எம்.ஜி.ஆர், மலையாளி ஜெயமோகன், கன்னட
ஜெயலலிதா, புதுடில்லி வடவர்...... ) வம்புக்கிழுத்து பகடி செய்யும் கலைஞர்
தேர்தலுக்காக இன்னமும் என்னவெல்லாம் 'பாண்டி' ஆடப்போகிறாரோ
என்று வேடிக்கை பார்ப்பது விநோதம்தான். அதுமட்டுமல்ல, 'பலபாஷை பேசுவது
சிலருக்கு ( அவர்கள் 'தொழிலுக்கு') வசதியாய் இருந்திருக்கலாம்' என்று சிலகாலம்
முன்பு ஜெயலலிதாவைப் பார்த்து மட்டமாக கமெண்ட் வேறு அடித்து இருக்கிறார்.

தேசிய நீரோட்டமும், ஜெயிக்க வேண்டுமென்ற வெறியும் இந்த வயசிலும்
இவரை என்ன பாடு படுத்துகிறது பாருங்கள்...



No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...