Thursday, March 25, 2004

வேதனையாய் இருக்கிறது
=========================

மதி நடந்தது என்ன என்பதை தெளிவாகச்
சொல்லி விட்டார். இப்போது பாரத்தை இறக்கி வைத்த
நிம்மதியில் திருப்தியாக இருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால் , இந்த விஷயத்தை அணுகுவதில் மக்களின்
அணுகுமுறைகள் , நாகரீகம் மீறி, ஒரு எல்லையை கடந்து
கொண்டு இருப்பதைப் பார்த்து நரக வேதனையாய்
இருக்கிறது.

ஆப்பு அடிக்கிறேன் பேர்வழி என்று கிளம்பியவரின்
வலைப்பதிவில், பின்னூட்டம் தந்திருக்கும் ஆட்கள்
இரண்டு தரப்பையும் ரெப்ரசண்ட் செய்வதாய் நினைத்து
கொண்டு முகமூடி பெயர்களில் கேட்கக்கூசும் வார்த்தைகளை
உபயோகப்படுத்தி இருக்கிறார்கள்.

சண்டையோ, சச்சரவோ, மனிதர்கள் போடுவதாக இருக்கட்டும்
..எல்லை மீறாதீர்கள்.

வலைப்பதியும் நண்பர்களே, பின்னூட்டங்கள் தரம் தாழ்ந்த
முறையில் எழுதப்பட்டிருந்தால், அதை தயவு செய்து நீக்கி
விடுங்கள்.

அது உங்கள் கடமை...


No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...