Tuesday, November 20, 2007

கவிதை முயற்சிகள்



தீபாவளி - பழையமுது

தினம் ஒரு கவிதை குழுமம :
சுத்ந்திரம் - என் மூக்கு
அகச்சிவப்பு - என் மூக்கு
காதல் - என் மூக்கு
இழப்பு - என் மூக்கு
அமெரிக்கா - என் மூக்கு

தாகம் - திண்ணை
மத்யமர் - திண்ணை
அழகி - திண்ணை
இறப்பு - திண்ணை
பிறவி - திண்ணை
வெளி - திண்ணை
மாற்றம் - திண்ணை
நெறி - திண்ணை
மகாபலி - திண்ணை
நீயே - திண்ணை
உனக்கு - திண்ணை
நேற்று - திண்ணை

கடந்தவை - செந்தமிழ்
ரசவாதம் - என் மூக்கு
நேரம் - என் மூக்கு
மாயம் - என் மூக்கு
மீளார் - என் மூக்கு
அமெரிக்கா -என் மூக்கு
ஆதங்கம்- என் மூக்கு
தனியே - என் மூக்கு
முகங்கள் - என் மூக்கு
கலாம் - என் மூக்கு
இல்லையேல் - என் மூக்கு
வழியனுப்பல் - என் மூக்கு
பிள்ளைக்கு - என் மூக்கு
கவிதை - என் மூக்கு
அம்ம்...ம்மா - என் மூக்கு
இடைவெளி - என் மூக்கு
பாலம் - என் மூக்கு
அலாரம் - என் மூக்கு
காதல் - என் மூக்கு
புருஷன் - என் மூக்கு
இனி என் முறை- என் மூக்கு
பாவக்கறை - என் மூக்கு
கரந்தவர்கள் - என் மூக்கு
விட்டகுறை - என் மூக்கு
இதயம் - என் மூக்கு
ஏக்கம் - என் மூக்கு
நட்பு? - என் மூக்கு
சங்கிலி - என் மூக்கு
தொழில் - என் மூக்கு
வீட்டுமிருகம் - என் மூக்கு
திருப்தி - என் மூக்கு
சொல்ல மறந்த - என் மூக்கு
கேவல்கள் - என் மூக்கு
எந்திரன்  மீண்டும் ஜீனோ
சரிநிகர் - கனிகிரி
முகவர் - கருவின் கவிதை
பரிகாரம் - பரிகாரம்
காயம் - காயம்
லலிதா- தேஜஸ்வினி
ஃபெட்னா - சமத்துவம் காண
அஞ்சலி - இடமாற்றம்
அம்மா - கையளித்தல்
விடைபெறல்- வானப்ரஸ்தம்
அப்பா - கடவுள் பிறந்தார்




 

Sunday, September 30, 2007

மணம் பரப்பும் மல்லிகை மகள்

படிக்கும்போது பெருமிதமாகவும் ஆனந்தமாகவும் இருந்தது.


நண்பர் ம.கா.சிவஞானத்தைப் பற்றி என் வலைப்பதிவுகளில் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். என் கல்லூரி சீனியர். விகடன் மாணவப்பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்திலும் சீனியர். சென்னைக்கு காலடி எடுத்து வைத்து நான் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் 51, அழகர் பெருமாள கோயில் தெரு, வடபழனியில் தன் அறையில் இடம் கொடுத்த சென்னைவாசத்திலும் சீனியர். இப்போது தன் கனவுப்பூவை மலரவிட்டு "மல்லிகை மகள்" ஆக்கி இருக்கிற இமாலய தன்னம்பிக்கையிலும் சீனியர்.



சல்யூட் தலைவா......!!





இனியர் ம.கா.சி இத்தனை வருடங்களாக விகடன் குழும பத்திரிக்கையான
"அவள் விகடன்" பொறுப்பாசிரியராக இருந்தவர். சொற்பங்களில் இருந்த பத்திரிக்கையை தன் முயற்சிகளின், புதுப்புது எண்ணங்கள் மூலம் லட்சங்களில் உயர்த்தி பத்திரிக்கையுலக ஜாம்பவான்களை திரும்பிப் பார்க்க வைத்தவர். இப்போது "மல்லிகை மகள்" என்ற பெண்கள் பத்திரிக்கையை நண்பர்களின் துணையுடன் துவங்கி இருக்கிறார்.



முதல் இரண்டு இதழ்களை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. மிக ஸ்நேகமான ஒரு உணர்வைத் தந்த முயற்சி. மிக பாசிட்டிவான எழுத்துக்கள். வித்தியாசமான தலைப்புகள் என்றாலும் " அவள் விகடன்" போல இருக்கிறதே என்ற உணர்வும் வந்தது. உருவத்தில் மூத்தவளைப் போல இளையவளும் இருப்பது பெற்ற தாயின் கையிலா இருக்கிறது..?? ஆனால் வேறு விதமாக வளர்க்கலாம்.


நண்பருக்கு அது தெரியும்.


மல்லிகை மகள் உங்கள் படைப்புகளுக்காக காத்திருக்கிறாள். அனுப்பி வையுங்கள். அச்சு உலகில் "நச்" என்று முத்திரை பதியுங்கள்



இப்போது மல்லிகை மகளுக்காக ஒரு வலைப்பூ துவங்கி இருக்கிறார். ஆனால் முழுமையான இணையத்தளத்தில் மல்லிகை மகள் மணம் வீசி நடை பழகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. உங்கள் எண்ணங்களை அவருக்கு எழுதுங்கள்.

Tuesday, September 25, 2007

அட...!!!


சேது சமுத்திரத் திட்டம் பற்றிய விவாதங்கள் இன்று இந்தியா முழுதும் பற்றியெறிந்து கொண்டிருக்கும் நிலையில், வேதமேதை அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரிடம், ராமர் பாலம் பற்றிய சர்ச்சைகளுக்கு விளக்கம் கேட்டோம்.

101 வயதைத் தொட்ட நிலையிலும் நிமிர்ந்து உட்கார்ந்து விளக்கம் அளிக்க ஆரம்பித்தார் தாத்தாச்சாரியார்

‘‘ராமர் பாலம் விஷயத்தை ஒரு பிரச்னையாக ஆக்கியது, நமது அரசியல்வாதிகள்தான். உண்மையில் ராமர் பாலம் என்ற பதமே தவறு. அதனை ‘ராமர் அணை’ என்று வேண்டுமானால் கூறலாம். ஏனென்றால், அந்த மணல் திட்டுகள் பால வடிவில் இல்லை. அதை வேத மந்திரங்களை சொல்லி கட்டியிருந்தால் அதற்கு ‘லோகாகிதம்’ உண்டு. அதாவது அழியாத்தன்மை உண்டு. ஆனால், ராமாயண காலத்துக்குப் பிறகு ராமர் அணை பற்றிய பிரஸ்தாபம் எதுவும் இல்லை. ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்த கதை. நாம் இப்போது கலியுகத்தில் இருக்கிறோம். இடையே பல்லாயிரம் ஆண்டுகள் ஓடிப்போய்விட்டன. அது உண்மையான பாலமாக இருந்திருந்தால், ராமாயண காலத்துக்குப் பிறகு மக்கள் அதைப் பயன்படுத்தியிருக்க வேண் டுமே... எனவே, இப்போது ‘பாலம்... பாலம்...’ என்று பிதற்றுவதில் அர்த்தமில்லை.
ராமர் அணை என்று சொன்னேன் அல்லவா? இப்போது பலரும் அதை சேது என்கிறார்கள். சேது என்றால் என்ன? சாம வேதத்தில் ‘சேது முஸ்த்ர துஸ்தாராம்... தானேத அதானாம் குரோதேன அக் ரோதம் சத்யேன அந்ருதம்...’ என ஒரு சொற்றொடர் வருகிறது. அதாவது, ‘துன்பங்களை நீ கடந்து செல்ல வேண்டுமானால் தானத்தைப் பெருக்கு. கோபத்தை ஒழி. உண்மையைப் பேசு’ இங்கே சேது என்ற பதத்துக்கு கடந்து செல்லுதல் என பொருள்.

இந்த வகையில் ராமர் கடலைக் கடந்து இலங்கைக்குச் சென்ற நிகழ்வுதான்
சேது. இது ஒரு வினைச்சொல்... பெயர்ச்சொல் அல்ல. அவ்வாறு கடப்பதற்காகக் கடல் பரப்பின் இடையே மணல் மற்றும் கற்களைப் போட்டு அணை போன்ற தடுப்புகளை ஏற்படுத்தி, அதில் ஒவ்வொரு தடுப்பாக வானர சேனை தாண்டித் தாண்டி இலங்கைக்குச் சென்றதாக வால்மீகி ராமாயணத்தில் சொல்லியிருப்பதைத்தான் ‘சேதுபாலம்’ என கட்டி எழுப்பிவிட்டார்கள் சிலர்.

ராமர் தெய்வமா இல்லையா என்ற கேள்வியும் இப்போது சூடாக எழுந்துள்ளது.

இதற்கு நாம் ஏன் தலையை பிய்த்துக்கொள்ள வேண்டும்? ராமரே சொல்லிவிட்டார். ராவண வதம் முடிந்த பிறகு தேவர்கள் எல்லாம் ராமரை ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள். அப்போது அவர்களிடம் ராமர் சொல்கிறார். ‘ஆத்மானாம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்...’ அதாவது ‘நான் தெய்வமெல்லாம் கிடையாது. நான் தசரதன் என்னும் அப்பாவுக்குப் பிறந்த மனிதன்தான். என்னைப் போற்றாதீர்கள்’ என ராமர் தன் வாயால் சொல்வதாக வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது.

இன்னும் கொஞ்சம் உள்ளேபோய்ப் பார்த்தால்... ராமர் இன்னொரு நாட்டுக்குப் போவதற்காகத்தான் அந்தத் திட்டுகளைக் கட்டினார் அல்லவா? அப்படியென்றால், இப்போது நமது கப்பல்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதற்காகத்தானே அவற்றை அப்புறப்படுத்த வேண்டியிருக்கிறது? இந்த நோக்கமும் ராமரின் நோக்கமும் ஒன்றுதான். ராமர் அக்கரை போவதற்குதானே கட்டினார். வணங்குவதற்காகவா கட்டினார்?
இன்னொரு செய்தி... போர் முடிந்து ராமர் திரும்பு கையில், அவர் கட்டிய அணையைப் பயன்படுத்தவில்லை. அவற்றை அழித்துவிட்டதாகவும் வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. தனது தனுசுவால் (வில்லால்) ராமர் அழித்த அணைப்பகுதிதான் தனுஷ்கோடி என அழைக்கப்படுவதாகவும் குறிப்பு உண்டு. திரும்பும்போது விபீஷணனுடன் புஷ்பக விமானத்தில் திரும்பினாராம். ஒருவேளை, ராமர் இலங்கை போவதற்கு ஏதாவது விமானம் கிடைத்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. எனவே ராமரே அழிக்க முடிவு பண்ணியதை நாம் வீண் நம்பிக்கையால் போற்றி நமது தேசத்தின் பொருளாதாரத்தை அழிக்கவேண்டுமா?’’ என்று தெளிவாக விளக்கங்களை அடுக்கினார் தாத்தாச் சாரியார்.
நன்றி : விகடன்

நட்பு..?

நேரம் ஓடுகிறது
கோப்பைகள் காலியாகின்றன
மதுவின் போதை ஏற ஏற
மாதுவின் முகதரிசனம்
கலவரம் கூட்டி
உடல் மிரட்டி
விழி உருட்டுகிறது
பாசிக்குளப் படிக்கட்டில்
கால்வைக்கும் கவனமும்
கைக்குழந்தையின் கண்களில்
தூசு நீக்கும் லாவகமும்
கத்திமுனையில் நிருத்யம் பயிலும்
கலாவேசமுமாக
மனசு கிடந்து அலமலக்கிறது
பேசுகிறோம். பேசுகிறோம். பேசுகிறோம்....
சிரிக்கிறாய் சிரிக்கிறேன்
பரிமாறுகிறேன் புசிக்கிறாய்.
கால் நீட்டி சொடக்கெடுக்கிறாய்.
கை உயர்த்தி முறிக்கிறாய்
கண்கொட்டா ஆச்சரியம்
உறக்கத்தினால் ஒட்டுகிறது
கொண்ட நட்புக்கு
பங்கம் வராமல்
நடுநிசி வரை
பேசிப் பிரிகிறோம்.
காற்றுப் போல திரிய
யெளவனம் தடையென்று
முதுமையை வரமாய் பெற்ற
ஒளவை பாவம்...
உடல் தாண்டும் வேட்கை கொண்ட
ஸ்நேகமும் உண்டென்றரிய
வாய்க்கவில்லை அவளுக்கு

Saturday, September 22, 2007

மாடர்ன் மரத்தடிகள்

இணையவெளி ஏற்படுத்தியிருக்கும் சாத்தியங்களின் சமீப சாட்சி. எனக்கே இது பலவகையில் உபயோகமாக இருக்கிறது. நண்பர்களின் நண்பர்களின் நண்பர்களின் தொடுப்புகளால் ஆன மாபெரும் மனித சங்கிலி.

இணையத்தை இப்படியெல்லாம் கூட உபயோகப்படுத்தலாம் என்று கண்டுபிடிக்கிற புண்ணியாத்மாக்களுக்கு ஜே.

பார்க்க : க்ளிக்க : ஒரு அருமையான யூ-குழாய் பகிர்வு :-) :-)

Thursday, August 02, 2007

ஆனந்த அருண் வைத்யநாதன்



ஒரு காலத்தில் வலைப்பதிவுலகில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த அருண் வைத்யநாதனின் பேட்டி ஆனந்தவிகடனில்...


************************************


‘‘குறும்படங்கள் மூன்று நிமிட உலகம். ஒரு கதை, அதில் பின்னப்படும் உணர்வுகள், இறுதியாக ஒரு செய்தி இவற்றை மூன்றே நிமிடங்களில் தருகிற குறும்படத்தின் சவால் திரைப்படங்களில்கூட இல்லை. இப்போது, அமெரிக்காவில் குறும்படங்கள் பார்க்கிற கலாசாரம் பெருகி வருகிறது. மக்களிடம் வரவேற்பை பெறும் குறும்-படங்கள், பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப் பட்டு வெற்றி பெறுகின்றன. இந்தப் போக்கு இந்தியா-விலும் சீக்கிரம் வரவேண்டும். அப்படி வரும்பட்சத்தில் இன்னும் ஆரோக்கிய-மான, தீர்மானமாக வெற்றி பெறக்கூடிய சினிமாக்-கள் வர ஆரம்பிக்-கும்!’’& நம்பிக்கையாகப் பேசு-கிறார் அருண் வைத்திய-நாதன். அமெரிக்க குறும்பட உலகில் வெற்றித் தடம் பதித்திருக்கும் தமிழர்.



‘கிs ஹ்ஷீu ஷ்வீsலீ’, ‘ஙிக்ஷீ(ணீ)வீறீறீவீணீஸீt’, ‘ஷிtவீஸீளீவீஸீரீ நீவீரீணீக்ஷீ’ என அருண் முதன்முதலாக எடுத்த மூன்று குறும்படங்களில், முதல் இரண்டு படங்களும் நியூயார்க், லண்டனில் நடந்த குறும்படங்களுக்கான திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளன. தவிர, அருண் எடுத்த ‘ஜீஷீஷ்மீக்ஷீ நீut’, ‘திஷீக்ஷீரீவீஸ்மீஸீ’, ‘ழிஷீஷீsமீ’ ஆகிய குறும்படங்-களும் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஒளி-பரப்பாகி, வரவேற்பைப் பெற்றன. இவர் எடுத்த ‘ஷிமீணீஸீநீமீ’ என்கிற திகில் குறும்படம் 2006&ம் ஆண்டில் மட்டும் பத்து திரைப்பட விழாக்களில் விருது-களைக் குவித்திருக்கிறது.


‘‘குறும்படங்கள் என்றாலே ரொம்ப-வும் சீரியஸாக ஏதோ ஒரு சமூகப் பிரச்னையைப் பற்றி மட்டும் சொல்வது என்கிற நினைப்பு தான் நம்மில் பலருக்கும் இருக்கிறது. குறும்-படங்கள் சினிமாவின் குழந்தை. காமெடி, த்ரில்லிங், ரொமான்ஸ், திகில் என குறும்படங்களையே பலவிதங்களில் எடுக்க முடியும்’’ என்கிற அருண், இப்போது தமிழில் தன் முதல் திரைப்படத்தை இயக்க வருகிறார்.


‘‘அமெரிக்காவி-லேயே நடக்கிற மாதிரியான கதை. பொதுவா, அமெரிக்காவில் இருக்கிற தமிழர்கள்னா பெரிய பணக்-காரங்களா, கலாசாரத்தை மதிக்கத் தெரியாத-வங்களா, சுகவாசியா இருப்பாங்-கன்னுதான் நம்ம மக்கள் நினைச்சுட்டு இருக்காங்க. அமெரிக்காவில் வந்து எதிர்பாராத சிக்கல்ல மாட்டுற ஒரு தமிழ்க் குடும்பம் பத்தி ஒரு கதை தோணுச்சு. ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி எஸ்.பி.பி.சர-ணுக்கு மெயில்ல அனுப்பினேன். அதுவரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் அறிமுகமே கிடையாது.


அவருக்கு என் கதை பிடிச்சிருக்கவே, ‘நாம நிச்சயம் இந்தப் படம் பண்றோம்’னு சொல்லியிருக்கார். படத்துல மிக முக்கியமான வெளிநாட்டு கேரக்டர் ஒண்ணு உண்டு. அதுக்காக ஸ்பைடர் மேன் வில்லன் வில்லியம் டெஃபோ-கிட்ட பேசியிருக்-கேன். ‘என் கேரக்டர் ரொம்ப நல்லா இருக்குது. டைம் இருந்தா நிச்சயம் பண்-றேன்’னு சொல்லியிருக்கார். சீக்கிரமே படம் பத்தி அறிவிப்பு வரும்.


படத்தோட தலைப்பு... ‘‘அச்ச-முண்டு அச்சமுண்டு!’’


**************************


படம் சூப்பர் ஹிட் ஆகட்டும். தூள் கெளப்பு மாமே...!! ஏன்னா, உன் எழுத்துத் திறமையை விட உன் குறும்படங்களால் கவரப்பட்டவர்கள் அதிகம்...


 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...