Wednesday, February 25, 2004

ரசவாதம்

========

பாடும்போது குரல்
உங்க மாதிரியே

விரலைப் பாரு
நீள நீளமா..
உங்க மாதிரியே

கீழ்க்கண்ணால பார்க்கிறான்
உங்க மாதிரியே

வாய் ஓயாம பேசுது
உங்க மாதிரியே

சொல்லும் பெண்ணையும்
சொன்னவளின் பிள்ளையையும்
மலங்க மலங்க பார்க்கிறான்
அப்பன்..

வாழ்வின்
பிற்பகலில்
வயதும் வீரயமும்
தலைக்கேறி
பிள்ளை அடையாளம்
துறக்கையில்
இவள் இதையே சொல்வாளா

என்று காலம் சிரித்திருக்கிறது.


பி.கு:

மகனாய் நான் தாண்டி வந்திருக்கும் நேரங்களை, தகப்பனாய் அறுவடை செய்ய நேர்வதை யோசித்தபோது ஜனித்தது.
மனக்கொல்லைக்கு எரு..???

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...