Wednesday, April 23, 2008

பசி வந்திட,,,,






பசி வந்திட பத்தும் பறந்துபோம் என்பார்கள். நானும் அதை நம்பினேன்.

ல்ஞ்சம் , லாவண்யம், வார்த்தை ஜாலம், அதிகார துஷ்பிரயோகம், ஆணவ அரசியல், கவர்ச்சி அரசியல், இலவச அரசியல், ஓட்டுப் பொறுக்கித்தனம், துதிபாடி அரசியல் உள்ளிட்ட மாசுகள் பசி வந்திட பறந்துபோகும் என நினைத்தேன். சைக்கிளேறி விண்ணையும் சாடுவார் என்று கனவு கண்டேன்.

பசி பணத்தைப் பார்த்து பறக்கிறதாம். காசி கண்ட இடத்தில் பாய்ந்து அழுக்குப் பிரவாகம் எடுக்கிறதாம் . காசி முதலீட்டுக்கு பங்கம் வராமல் பசி பதறுகிறதாம். பச்சைப் பூங்காவில் சிரஞ்சீவியுடனும் நட்பாக உலா வருகிறதாம். தமிழ்நாடு முழுக்க நேர்த்தியான நில வெட்டையாம்.


யாரையும் நம்ப முடியலைப்பா...தமிழ்நாட்டை கண்டவனும் ஆளவேணாம் ..கண்டனூரான் ஆளவேணும் என நினைத்த நினைப்பில் மண்.




Monday, April 21, 2008

போலீசு ...போலீசு...



நம்மூரில் போலீஸ்காரர் கண்டிப்பானவர் என்றால் அவர் விலை ஜாஸ்தி என்று அர்த்தம். மாமா என்றும் , குச்சான் என்றும், ட்ரேட்மார்க் தொப்பை என்றும் எல்லாராலும் ரேக்கப்படும் அந்த வர்க்கம் அமெரிக்காவில் பொது ஜனங்களுக்கு சிம்மசொப்பனம். உயரமும், அகலமும், கோபமில்லா கண்டிப்புமாக, நீலச்சீருடையில் உலாவரும் நீலக்கண் அழகர்களை வயசு வித்தியாசமில்லாமல் நம்ம ஊர் பெண்மக்கள் சைட் அடிப்பார்கள்.


Freeway ல் வேக எல்லை மறந்து அதி வேகமாக க்ரூய்ஸும்போது, அங்கிள் பர்த்துவிட்டால் போச்...அவன் நம்மை பார்ப்பதற்கு முன் நாம் அவனை பார்த்துவிடுவது உத்தமம். மாட்டினால் கருணையே கிடையாது. வழிசல், லஞ்சம் எதுவும் வெலை செய்யாது. கையில் உள்ள கருவிமூலம் உங்கள் ட்ரைவிங் ஜாதகத்தை ஆராய்ந்துவிட்டு சீட்டைக் கிழித்துக் கொடுத்துவிட்டு
போயே விடுவான். ரோட்டிலே அவன் காரின் தலையில் உள்ள லைட்டைப் போட்டு ரெண்டு முறை பிளிறினால் சகலருக்கும் Laxative இனாம்.


நேற்று மாலை திரும்பிக் கொண்டிருந்தேன். 65 ஸ்பீட் உள்ள சாலையில் எல்லோரும் கிட்டத்தட்ட 80 ல் சீறிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் ( Monday)
பெல்ட் கட்டி பேட்டரி மாற்றி ஓடவேண்டிய அவசரம். எங்கிருந்தோ வந்தான் ரங்கன்...


வந்தவன் சாலைக்கு மத்தியில் வந்து லைட்டைப் போட்டான். 80ல் சீறிய எல்லோருக்கும் நடுக்கம். எவனுக்கு லைட்டைப் போட்டான் என்று தெரியாமல் ப்ரேக்கை ஏறி அழுத்த, அங்கிள் நாலு லேன்களிலும் மார்கழி மாத கோல உருளை மாதிரி அப்படியும் இப்படியுமாக ஆத்தினான். அங்கிளுக்கு “திரவக்” குழப்பமா என்றும் யோசனையாக இருந்தது, யாரைப் பிடிக்க என்று குழப்பமோ என்று நினைக்க, இந்த ஆத்தல் தொடர்ந்து 7 நிமிடங்களுக்கு நடந்தது. எல்லோரும் ஜானவாஸ கார் ரேஞ்சுக்கு ஸ்பீட் குறைந்ததும் சட்டென்று கிளைச்சாலை பிடித்து வெளியே போனான்.


பொறந்தாலும் அடுத்த சென்மத்துல அமெரிக்கா மாமாவா பொறக்கணும்யா...!!!


Sunday, April 20, 2008

ரியாலிடி ஷோ..??

மஸ்தானா மஸ்தானா -1 ல் போட்டியாளர்கள் வெளியேறியதை கண்ணீரும் கம்பலையுமாக காட்டினார்கள். சக போட்டிக்காரருக்கு சான்ஸ் கொடுக்கலாமா என்ற காராசாரம் நடந்தது. நீபா தருணை விமரிசித்தார். ஒரே மசாலா மட்டுமில்லாமல் நிகழ்ச்சியும் தரமாக இருந்ததால் ஹிட்.

பிடித்தது சனி.

சிம்புவின் விஜய் டீவி பிரச்சினையில் கண்ணீர் - கோபாவேசம்.

சூப்பர் டான்ஸரில் தொடர்ந்தது.

மஸ்தானா மஸ்தானா -2 வில் அவ்வப்போது பட்டாசு வெடித்தது.

இன்று சூப்பர் ஸ்டார்ஸில் விஜய் ஆதிராஜுக்கும், சிமரனுக்கும் லடாய்.

செட்டப் செய்யப்படுகின்ற கசாமுசாக்களில் படிப்படியாக ரியாலிட்டி குறந்து கொண்டு வருகின்றது.

பாக்கிறவனை கேனையனா நினைச்சுகிட்டு உடான்ஸ் உடுகிற சின்னத்திரை சின்னத்தனம் - அட அல்பமே....!!

உய்விக்க வா....

தமிழ்நாடு முழுக்க வெளக்கேத்துங்கறாளாம்.

இருண்ட ஆட்சி போய், அம்மா ஆட்சிவந்து தமிழ்நாடு ஒளி வீச...

இதை யாரு சொல்றா..அந்த அம்மாவே சொல்றாங்க..

இவங்களுக்கெல்லாம் மனசுல என்ன நெனைப்பு..?? ஞானப்பால் குடிச்சிட்டு
கர்ப்பகிரகத்துல் இருந்து டைரக்டா இறங்கி வந்தவுங்கன்னா..??

தானெல்லாம் மனுச ஜென்மம் தான் அப்டிங்கிற ஞாபகம் இருக்கா..??

மஞ்சத்துண்டு காலியாக, துண்டு போட்டு வைக்கிறாங்களா..??

ஏதோ ஒரு ஜோசியன் புண்ணியத்துல எண்ணைக்கு கேடு.

நம்ம வீட்டு பூஜை ரூம்ல் ஏத்துனாலாவது பரவால்லை.

அடுத்தது காந்தம் என்ன ஏத்த சொல்லப் போறாருன்னு தெரியலை.

Friday, April 18, 2008

விபரீத ஆசை- Version 1.5

அக்கப்போர் அரசியல் பிடிக்காமல் எழுத விட்டுப்போனது, இப்போது மறுபடியும் ஆர்வம் முண்டுகிறது. புதிய பணியிடத்திலும் கொஞ்சம் கால் ஊன்றியாகி விட்டது என்பது கூட காரணமாக இருக்கலாம். எழுதுவது இல்லையெ ஒழிய படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அவ்வப்போது சும்மா இருக்க மாட்டாமல் அங்கங்கே கொஞ்சம் முத்துதிர்த்தும் வருகிறேன்.

எகலப்பை இல்லாமல் என்.எச்.எம் ரைட்டர் பாவிக்கிறேன் என்பதும், மழுங்க சிரைக்காமல் ரிம்லெஸுடன், குறுந்தாடி வளர்க்கிறேன் என்பதும் அரசாங்க ஊழியம் செய்யாமல் அரக்கப்பறக்க ஓடுகிறேன் என்பதும், பூட்டிய மறுமொழிப் பெட்டியுடன் இந்த மறுஅவதாரம் என்பதும் தான் நூஸ்.


மே மூன்றாம் தேதி தமிழ் மன்ற விழா
மே மாதம் 25ல் இருந்து ஜூன் 15 வரை தமிழ்நாடு வாசம்

என்பது போனஸ் நூஸ்.

Tuesday, April 15, 2008

வழியும் முடிவும்

ஜெயமோகனார் எழுதி இருக்கும் காலச்சுவட்டின் நூறாவது இதழ் விமரிசனம் சரியான உள்குத்து. கண்ணனின் தலையங்கம் வெளிப்படுத்தும் காழ்ப்பினைப் பற்றி சொல்லிக் கொண்டே காலச்சுவடின் இடம் முக்கியம் என்கிறார். சுபமங்களா அடையாளப்படுத்திய எழுத்தாளர்களில் முக்கியமாக தன்னையும் எஸ்.ராவையும் சொல்லிக்கொண்டே காலச்சுவட்டின் (சு.ராமசாமி விலக்கம்) கறார் பார்வை பற்றி குறிப்பிடுகிறார். இப்படியெல்லாம் மையமாக எழுதவதெல்லாம் வரிகளுக்கிடையில் படிக்கத் தேடும் சீவிகளுக்கு.

ஒரு எழுத்தாளரின் வலைப்பதிவு இப்படி ஆழ அகலங்களுக்குள் போய் மீண்டு வந்தாலும், அவ்வபோது எளிய வாசகர்களின் தீனிக்கும் இலக்காகி, சராசரியான விஷயங்களையும் கவனமெடுத்துக் கொள்கிறது. தீவிர வாசகர்களின், ரெகுலர் வாசகர்களின் புததிக்கு சொறிந்து கொடுத்து உக்கிராண அறையில் அவர்களுக்கு அவியல் கொடுக்குமபோது, புதுசாக வீட்டுக்கு வரலாமா என்று எட்டிப் பார்க்கும் அறிமுகமில்லாதவர்களையும் கவர்ந்து இழுக்கும்படி வாசல் கொஞ்சம் ஜிலு ஜிலு என்று இருக்க வேண்டும்.

வெகுஜனப்பத்திரிக்கைகளில் சினிமா விமரிசகர்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதற்கும் இதுதான் காரணம். மாறிக் கொண்டிருக்கும் புதிய தலைமுறையின் பிரதிநிதி கட்டாயம் அதில் இருப்பார்.

ஜெ.மோ/குமுதம்/விகடன் வகையறாக்களுக்கு மட்டுமில்லை. எளிதாக அணுகப்படக்கூடிய தளத்தில் இருக்க விரும்பும் எல்லாருக்கும் இது பொருந்தும்.

எப்படிப்பட்ட விஷயங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டாலும், வழிமுறைகள் எத்த்னை விலாவரியாக சொல்லப்பட்டாலும் அதன் இடைமுகம் வாசகர்களுக்கு முக்கியம்.

வெறும் குறை அல்ல. அக்கறையில் சொல்வது.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...