Sunday, August 03, 2014

ஜிகிர்தண்டா

நேற்றிலிருந்து மண்டைக்குள் சுற்றிக் கொண்டே இருக்கிறது இந்த படம். எழுதிவச்சா கொஞ்சம் “விட்டாப்புல” இருக்கும் போல ஒரு தோணல்.

படம் ஆரமிச்சதே “நாளைய இயக்குநர்”  நிகழ்ச்சி மாதிரி ஒரு நிகழ்ச்சில. படத்தோட கதை ஓரளவுக்கு தெரிஞ்சதால,  ஹீரோ மதுரைக்கு போவார்னு தெரியும். ஆனா மதுரைக்கு போன பின்னாடி கருணா/சிம்ஹா அறிமுகம், ரவுடிகள் அறிமுகம், அப்புறம் அவங்க வீக்னெஸ், நடு நடுவுல ரத்தம் தெறிக்க தெறிக்க சிலபல கொலைகள், புடவை திருடற ஹீரோயின் அப்படின்னு ஒரு மார்க்கமாவே படம் போயிகிட்டு இருந்துது. கேங்ஸ்டர் படம்னு சொன்னாலும், படம் முதல்லேர்ந்தே காமெடி அங்கங்கே தூவிகிட்டே இருந்தாய்ங்க - அக்மார்க் மதுரை குசும்பு.



படத்துல பாபி சிம்ஹா அதகளம். ஹாலிவுட் படங்கள்ள வர்ற Rob Schneider மாதிரி ஒரு அப்பாவி மூஞ்சிய வெச்சிகிட்டு ....என்ன்..ன்னா ஒரு வில்லத்தனம்...முதல் சீன்லயே அவரு வேண்டாம் வேண்டம்னு சொல்ல சொல்ல, மீறிக்கிட்டு இட்லி வெக்கிற அம்மாவை திட்டும் போது மனசுல பச்சக்குனு வந்து உக்காந்துட்டாரு.

படம் இடைவேளைக்கு அப்புறம் வேற லெவலுக்கு போறதே தமிழ்நாட்டின் சினிமாவை ஆராதிக்கிற மனோபாவத்துனால. செய்யுளிலும் , காவியங்களிலேயும், கதைகளிலும் நாடகங்களிலும் ஊடாடிக்கிட்டு இருந்த நம்ம மக்கள் இன்னைக்கு ரசிக்கிற ஒரே இலக்கியம் சினிமா தானே. சும்மாவா...கால காலமா தமிழ்நாட்டுல கஜானாவையே திறந்து அவங்க கிட்டதானே குடுத்துகிட்டு இருக்கோம்.  இதுக்கு தாதா மட்டும் விதிவிலக்கா..?  ஓவர் நைட்ல “நாயகன்” “தளபதி” பேரைக் கேட்டுட்டு படத்துல கேரக்டர் எல்லாம் தலைகீழாயிடுது. கொஞ்சம் கோமாளித்தனமா ஆகற நேரத்துல கூத்துப்பட்டறை சோமசுந்தரம் வந்து சும்மா “கும்” முனு படத்தை தூக்கி நிறுத்துராரு. சினிமா கிறுக்கோட உச்சகட்டம் அந்த எழவு வீடு. நல்ல பகடி.. :-)

என்னதான் ”டாரண்டினோத்தனமா”  படத்தை கொண்டுபோனாலும், உள்கருத்து என்னன்னா, எல்லா ரவுடியும் அடிப்படைல சாதாரண மனுசந்தான். ஒரு “சம்பவத்தை” பண்ணிட்டதால அவன் அப்படியே மிருகமா மாறிடலை. கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் பண்றது ஒரு தொழில் மாதிரி போட்டுத் தள்றது அவனுக்கு ஒரு தொழில்.எனக்குத் தெரிஞ்சு  சமீப கால படங்கள்ள ”நான் மகான் அல்ல” ரவுடிகிட்டேயே டைரக்டர் சுசீந்திரன் லைட்டா இந்த விஷயத்தை காட்டி இருப்பாரு.  இந்தப் படத்துல,  ஒரு கொலை சீன்ல சக- ரவுடி ஒருத்தர் சொல்வாரு - சீக்கிரம் “போடுங்கண்ணே”. காலையில அப்பாவை சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவணும்னு.  :-)

”தளபதி” மம்முட்டிகிட்ட சாதாரண ஜனங்கள் நெருங்கி வந்து பேசும்போது ஒரு நெகிழ்ச்சி வரும் அவருக்கு. அதே விஷயத்தை அவ்ளோ சாஃப்டா சொல்லாம காரசாசரமா உலகத் திரைப்படங்கள் பாக்கற நம்ம இளைய தலைமுறைக்கு புடிக்கர மாதிரி கொடைக்கானல் மலை கொண்டை ஊசி திருப்பங்களோடு நல்ல கிராண்டா குடுத்துருக்கார் டைரக்டர். படத்துக்கு சிம்ஹா, சந்தோஷ், கேவ்மிக், விவேக், சித்தார்த், விஷ்ணு என்று ஆயிரம் பங்களிப்பாளர்கள் இருக்கலாம்.

ரியல் ஹீரோ டைரக்டர் கார்த்திக் சுப்பாராஜ் தான். அவர் போக வேண்டிய உயரங்கள் காத்திருக்கிறது. வாழ்க வளமுடன். அந்தக் கால நியூட்ரமுல் விளம்பரத்துல வர்ற மாதிரி இருக்கற ஒரு குண்டுப் பையணுக்குள்ள கடவுள் இவ்ளோ பெரிய படைப்பாற்றல் ”திரி”ய பத்த வச்சு விட்டிருக்காரு. சரியான அணுகுண்டு :-)

 

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...