Friday, July 29, 2005

எதிரொலி

Image hosted by TinyPic.com

இவர் இப்படிப் பாட

இவர் இப்படி தொடர்ந்திருக்கிறார்.

ம்..ஹும்..என்னத்த சொல்ல..??

காது அரிக்குதுன்னு ஊரான் காலைப் புடிச்சு வெட்டி எறிஞ்சா மாதிரி இனிமே என்னத்த வேணா சொல்லித் தொலையலாம்.

Tuesday, July 26, 2005

ரவிக்கை

அப்பா அம்மா ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள். வந்து கிட்டத்தட்ட மூன்று வாரமாகி விட்டது. வார நாள்களில் பகல் நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாது போவதால், சாயந்திர நேரங்களில் குற்ற உணர்ச்சி மேலிட அவர்களை அழைத்துப் போவதும், வார இறுதிகளில் அவசர அவசரமாக தொலைவிடங்களில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துப் போவதும், உடுத்தும் துனிகளை கையால் தோய்க்க வேண்டாம். வாஷிங் மெஷினில் தோய்த்து விடுங்கள் என்று சொன்னதற்கு அவர்கள சொல்கிற பதிலுக்காக சண்டை போடுவதும், இன்ஸ்டண்ட் பொடி பிடிக்காமல் ஊரிலிருந்து காப்பிப்பொடி எடுத்து வந்து காஃபி சாப்பிடுவதற்கு கிண்டல் அடித்துக் கொண்டும், குறைந்து போன என் சாப்பாட்டைப் பார்த்து அவர்கள் படும் கவலைக்கு சிரிப்பதும், படுக்கை ரொம்ப மெத்தென்று இருப்பதால் தூக்கமில்லை. கார்ப்பெட் தரையில் போர்வை போட்டு படுத்துக் கொள்கிறோம் என்று அவர்கள் சொலவதற்கு தலையில் அடித்துக் கொண்டுமாக....

நாட்கள் சர சர வென்று ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் 12 முதல் 18 வரை சான் தியாகொ, லாஸ் ஏஞ்சலீஸ், லாஸ் வேகாஸ் என்று வேன் ட்ரிப்பும், ஆகஸ்ட் 26 முதல் 31 வரை நியூயார்க், நயாகரா ட்ரிப்பும்
திட்டமிட்டாகி விட்டது. போன வாரம் மாண்டெரியும், முந்தின வாரம் சான்ஃப்ரான்சிஸ்கோவும் போய் வந்தாகி விட்டது.முடிந்தால் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

எழுதுகிறேனோ இல்லையோ, வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நல்ல நண்பர்கள வெறுத்துப் போய் விலகுவதும், பாக்கி எழுதும் மனிதாபிமானம் உள்ள ஸ்நேகங்களின் நோக்கங்கள் சந்தேகப்படுத்தப்படுவதையும் பார்த்து கஷ்டமாக இருக்கிறது. என்றாலும், உரத்து விவாதிக்கப்படுவதில், சில விஷயங்கள் புரிவதுமாக பொழுது போய்க் கொண்டிருக்கிறது.

பெட்டியில் இடம் இல்லாததால், குறைவான புத்த்கங்களே இந்தியாவில் இருந்து வந்தது. குறத்தி முடுக்கும், என் பெயர் ராமசேஷனும் படித்து விட்டு, கோபல்ல கிராமம், சீரோ டிகிரியும் ஓடிக் கொண்டிருக்கிறது. சாருவைத் திட்டிக்கொண்டே சீரோ டிகிரியை படித்தாலும், அவரது இந்தக் கட்டுரை சமீபத்தில் புருவமுயர்த்த வைத்தது.

நண்பர்களே!!! நிறைய எழுதுங்கள் - எனக்கு எழுதுவதை விட படிப்பதுதான் பிடிக்கிறது இப்போதெல்லாம்

சரக்கு தீந்து போனதை இப்படித்தான் பவிஷா சொல்லிக்கணும்...:-)

இந்தப் பதிவுக்கு தலைப்பு இல்லாததால் உங்களுக்கு இப்போது இருக்கும் தலைப்பு "தெரிகிறது" ஹி..ஹி..

Tuesday, July 12, 2005

என் ரண்டு சல்லி....

போலி பெயர்களில் பின்னூட்டங்கள், ஆபாச பின்னூட்டங்கள், பல முக சேஷ்டைகள் என்று தமிழ்மணம் அதகளப்பட்டுக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்/ வேண்டாம் - இதை கண்டுகொள்ளவேண்டாம் என்று இன்னொரு பக்கம் வாதப்பிரதிவாதங்கள்,
கண்டுகொள்ளவேண்டும் என்றால் யார்..?? தமிழ்மணமா, ப்ளாக்கரா யாருக்கு பொறுப்பு என்று அதிலும் பேதங்கள்.

பத்து ஆசாமிகள். பதினோரு மூக்குகள் என்று சொலவடை உண்டு. அதுதான் நடந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது. அதற்கு காரணம் சிந்திக்கதெரிந்த நம் எல்லாருக்குமே நம் சிந்தனைதான் கரெக்ட் என்கிற நினைப்பு இருப்பதுதான். அதிலும் தவறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

என்னுடைய யோசனை என்னவென்றால் நடவடிக்கை எடுப்பது, சந்தேக வளையத்துள் இருப்பவரை பகிஷ்கரிப்பது, இந்த வலி எல்லோருக்கும் வர வைக்க மனிதனாகவும், வாலியாகவும், கஜேந்திரபாலனாகவும் அவதாரம் எடுத்து குடைச்சல் கொடுப்பதை தவிர இன்னொரு வழி, சண்டைக்காரனை அழைத்துப் பேசுவதுதான்.

பின்லேடனுக்கே ஒரு நியாயம் இருக்கும் இக்காலத்தில், ஒரு சாதாரண, முன்கோபியான, சந்தர்ப்பவசத்தினால் தீவிரவாதியாகிப்போன நம்மாளை, " அட ..வா ..தம்பி..நடவடிக்கை ஒன்றும் இல்லை. என்னாச்சு உனக்கு. எது உன்னை இதை செய்யத்தூண்டியது. உனக்கு இப்போ என்ன வேண்டும். எது நடந்தால் அமைதி அடைவாய்" என்று கேட்கலாம். காரணங்கள் தெரிந்து பேச்சு வார்த்தை நடந்தால் ஒரு வேளை மனமாற்றம் நிகழலாம். பேச்சு வார்த்தை நடந்தால்தான் எதாவது தவறாக புரிந்து கொண்டு, யாராவது போட்டுக் கொடுத்து இதெல்லாம் நடந்ததா என்பதும் தெரிய வரும். சுனாமிக்கு உருவாக்கபட்ட வலைமேடை செயலியை இதற்கு உபயோகப்படுத்தலாம். சந்தேக வளயத்துள் உள்ளவரும் சாட்சி இருக்கிறதா..?? நிரூபிக்க முடியுமா என்றெல்லாம் கேட்காமல் ஒத்துழைத்து பேச்சு வார்த்தைக்கு சம்மதித்தால் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

இதற்கு ஆக்ஷன் எடுத்தால் அது வேறு பெயரில் வேறு இடங்களில் தொடரும். ஒரு ஆசாமிக்கு பதிலாக ஒரு கூட்டம் சேரும். எனவே கேட்பதற்கு கோழைத்த்னமான அணுகுமுறை போல தோன்றினாலும், எனக்குத் தெரிந்து பிரச்சினை குறைவான அணுகுமுறை இது.

இது நடக்கவில்லை என்றால் மாலன் சொல்கிறபடி யாஹூ சேவையை உபயோகித்து, தான் விரும்பிய( மாற்றுக் கருத்து கொண்டவர்கள் ஆனாலும் சரி) நண்பர்கள் மட்டும் வலைப்பதிவில் பின்னூடம் இடுமாறு ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம். தமிழ்மணம் யாஹூ பதிவுகளையும் கண்டு கொள்வதால் இதில் சிக்கல் இருப்பதாக தோன்றவில்லை. யாஹூவுக்கு வர விருப்பம் இல்லாதவர்கள் விரும்பினால் தொடர்ந்து ப்ளாக்கரிலேயே உழைத்து பிரச்சினையை சரி செய்து கொள்ளலாம்.

ஏதாவது நடக்கக்கூடியதா சொல்லி இருக்கெனா..??

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...