Sunday, May 04, 2008

தமிழ்மன்ற விழா - சாக்ரமெண்டோ








(சூர்யா மற்றும் சூர்யா அப்பாவின் புகைப்படங்கள் - மேலே)

சாகரமெண்டோ தமிழ் மன்றத்துடன் கடந்த மூன்று வருடங்களாக பணிசெய்து வருகிறேன். இந்த வருடம் தலைவராக.

நேற்று தமிழ்புத்தாண்டு விழா நடைபெற்றது. மக்கள் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். ஏறக்குறைய ஐநூறு பேர் இருக்கும். அதில் 150 பேர் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் :-). குழந்தைகள் குட்டிகள் பட்டுபுடவை யுவதிகள், நடுவயது மங்கையர் திலகங்கள், ( வழக்கம்போல்) அசடு வழியும் ஆண்கள் என்று நிஜமாகவே கல்யாணக் களைதான்.

எத்தனைதான் முயன்றாலும் சில குறைகளை களையவே முடியவில்லை - உதாரணம் “நேரா நேரத்தில் உணவு” . காரணமாக கடும் வருத்தம் மற்றும் மன உளைச்சல். நிஜமாகவே எப்போது தப்பிக்கலாம் என்று தோன்றுகிறது :-(

நிகழ்ச்சியை ஒரு பார்வைளாளனாக கமெண்டு அடித்துக் கொண்டு டான்ஸ் ஆடிக் கொண்டு பார்ப்பதுதான் உலகிலேயே மிக உவப்பான விஷயமாக தோன்றுகிறது. ம்.. Life would have have been much more better, if second thoughts came first.

நிகழ்ச்சி அறிவிப்பு இங்கே மற்றும் இங்கே

நிக்ழ்ச்சியை ஒட்டி வெளியான விழா மலர் / குறிப்பு இங்கே

நிகழ்ச்சியின் போது நான் எழுதி வைத்துப் படித்த உரை இங்கே.

மற்ற புகைப்படங்கள் இங்கே

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...