Wednesday, June 28, 2006

நான்கு இரண்டான கதை

வேண்டி விரும்பி பெற்றதில்லை
பிறப்பிலேயே வரமாகி வந்த வேதனை
இது பிறக்கவே வேண்டாம் என்று
நினைத்ததனால் வந்த வேதனை

கர்ணனுக்கு கவச குண்டலம் போல
காதுக்கும் மூக்குக்கும் கண்ணுக்கும்
பாலமாய் என் பாவமாய் இருபதாண்டாய்
முளைத்திருந்த கண்கள்

அம்மாவுக்கு வேண்டுதலாய் போன
எனக்கு வேண்டாத சுமையான
என் வேகத்தை மட்டாக்கிய
என் இனியர்கள் எனக்கு கூப்பிடுபெயராய்
சூட்டி அழகு பார்த்த

என் கண்ணாடிக் கண்களை....

நெய் மணக்கும் பண்டங்களுக்கே
நானறிந்த அகர்வால் என்ற பெயர்
ஆயுசுக்கும் மெய் சிலிர்க்க என்
கண் திறந்தது இந்தப் பயணத்தில்.

இந்தியாவிலிருந்து திரும்பி இருக்கிறேன்
இரண்டு கண்ணனாக.

தைரியம் தந்த செல்வாவுக்கு நன்றி.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...