Thursday, August 13, 2015

கையளித்தல்


திருமணங்கள் உவகைதான்.
தோழியொருத்தி உருகிவடிய
மற்றொருத்தி 
உயிரில் கலக்கிறாள்
வட்டிலிலும் தொட்டிலிலும்
இட்டுத் தாலாட்டி
முட்டிமோதி அவனை எட்டி
நடக்க வைத்தவளும்
கொட்டி முழக்கும் சபைதனில்
சுற்றம் வாழ்த்த
கட்டிலுக்கு காவலாய்
ஆவலாய் வந்தவளும்
ஒவ்வொரு புறம்..........
அன்னை கண்ணீரில் நனைய
அப்பனுக்கு மட்டும் புரிகிறது
புரையேறுகிறது அவன்
மணநாள் நினைவில்...
வழிவழியாய் வந்த
உறவுக்குழப்பங்கள்
வாழ்வை புதிராக்கும்
என்றென்றும்........
அதீதமாய் நேசிக்கப்படுவதும்
சுகமான சுமைதான்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...