Wednesday, January 10, 2007

நிஜ ரோஜா ரதிதேவி

கலைஞர் டீ.ஆர்.பாலு மூலமாக பேசுகிறாராம்...

வை.கோ சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் மூலமாக பேசுகிறாராம்.

சிவராஜ் பாட்டீல் அஸ்ஸாம் காவல்துறையுடன் பேசுகிறாராம்.



ஆச்சு. பதினெட்டு நாள். சிவகாசி கரிசல்குளம் கணேசன் குடும்பம் அல்லாடிக் கொண்டு இருக்கிறது. குடியரசுத் தலைவர் அண்ணனுக்கு மனு கொடுக்க (?!!!)ராமேஸ்வரம் போகிறார்கள். குழந்தைகளுக்கு பதில் சொல்லி மாளவில்லை. செல்போனில் பேசும் தீவிரவாதிகளுக்கு பேசவும், அந்த தகவலை கணேசனின் உயரதிகாரிகளுக்கு தரவும் நேரம் சரியாக இருக்கிறது. பிணைத்தொகை மூணு கோடி. என் சகோதரியின் கணவர் சந்திரஹாசன் கணேசனின் உயரதிகாரிகளுல் ஒருவர். கடந்த பதினைந்து நாட்களாக அவர்கள் யூனிட்டே அல்லோலகலோலப் பட்டுக் கொண்டிருக்கிறதாம்.



எல்லா எழவும் போகட்டும். என்ன சித்தாந்தத்துக்காவது அந்த தீவிரவாதிகள் போராடிக் கொள்ளட்டும். அதுக்கு ஒரு அப்பாவி சிவில் இஞ்சினியர்தான் தான் கிடைத்தானா..?? பணம் வேணுன்னா பாங்க்கை கொள்ளையடி. ஏதாவது பெரிய அரசாங்க பதவியில் இருக்கிற அரசியல்வாதியைக் கடத்து. அவனுக்கு இருக்கிற பவர் கொஞ்சம் மீடியா வெளிச்சமாவது கொண்டுதரும். ஒரு கருமமும் இல்லாம ஒரு செமி ராணுவ ஆசாமியை பிடிச்சு வச்சுகிட்டு, கோடி கோடியா கேட்டா எங்க போறது. அரச இயந்திரத்தோட ஒரு கடைகோடி பல்சக்கரம் மாட்டிக்கிச்சுன்னு எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணப் போறாங்க. ரோஜா மாதிரி ஒரு படம் நல்லா ஓடிச்சுன்னா நாமல்லாம் நல்லா கை தட்டிப் பாக்கலாம். வேற ஏதாச்சும் முடியுமோ..??

விடை தெரியாத கேள்விகள்...

Tuesday, January 09, 2007

டிசம்பர் தர்பார்

வலைப்பதிவுகளில் சிறுகதைகள் படிக்கிறீர்களா? என்று தசாவதாரம் ஷூட்டிங் நடுவே கமல் கேட்டதும் எனக்கு வியப்புத்தான் வந்தது. "கதை இருக்கவேண்டும், சின்னதா இருக்கவேண்டும்" என்று ழான் நாய்கோவ் (இத்தாலி - 1936-75) சொன்னதைப்பற்றி ஒரு வாரம் முன்னேதான் வசந்தபாலனிடம் பேசிக்கொண்டிருந்ததைச் சொன்னேன்.

வலைப்பதிவைப்பற்றிக்கேட்டதும் "எண்ட்லெஸ் ஈகோ ட்ரிப்" என்ற என் செல்லச் சித்தாந்தத்தை அவரிடம் சொன்னேன். மையமாகச் சிரித்தார்.
எந்த ஒரு கதைக்கும் ஆரம்பம், நடு, முடிவு என்று மூன்று பகுதிகள் வேண்டும். இதை ட்ரிமெண்டாரின் என்று சீன மொழியில் சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில் கதை ஆரம்பிக்கவேண்டும் என்று அவசியமில்லை, நடுப்பகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாதகமில்லை. முடிவை நாம் சொல்வதை விட வாசகனே புரிந்துகொள்ளவேண்டும். அறிவுரைகள் கூடாது.
இந்த சித்தாந்தம் பெரும்பாலான மேற்கத்திய ஆசிரியர்களின் கதைகளில் இருப்பதை "The Best Stories of 1921" என்ற பழைய புத்தகம் ஜப்பானிலிருந்து என் மகன் அனுப்பிவைத்திருந்ததில் கவனித்தேன்.

வலைப்பதிவில் வரும் எந்தச் சிறுகதையுமே இந்த அளவுகோலில் தப்பாது.
இரண்டாவது பைப்பாஸுக்குப் பிறகு வலைப்பதிவுகளைப் படிப்பதை நிறுத்தியதில் கொஞ்சம் ரத்த அழுத்தம் சீராக ஆகியிருக்கிறது.


சுஜாதாவின் நேம் ட்ராப்பிங்ஸை கிண்டலடித்து அவரது ஸ்டைலில் "பெனாத்திருயிப்பது" மேலுள்ளது. இதே போல இங்கே அமெரிக்காவில் ஒரு நண்பர் இருக்கிறார். அவருடன் பேசும்போதும், இப்படி ஏகப்பட்ட பெயர்கள் வந்து விழும். மீனா, சுஹாஸினி, கமல், ரஜினி, மணி(ரத்னம்) எல்லாம் மானாவரியாக வந்து விழும்போது எதை நம்புவது அல்லது கூடாது என்று ஒரே குழப்பமாக இருக்கும். ராயர் காலங்களில் அடிக்கடி தொடர்பு கொண்டிருந்தவர் வலைப்பதியத் துவங்கியதும் அவ்வளவு பேசுவது இல்லை. ஆயினும் போன முறை பேசியபோது "டிசம்பர் தர்பார் " என்று ஒரு விகடன் பிரசுரத்திற்காக புத்தகம் எழுதுவதாக சொன்னார். சரி...என்று நினைத்துக் கொண்டேன். அந்தப் புத்தகத்தை பற்றி சயின்ஸ் தாத்தா இந்த வார விகடன் க.பெ வில் எழுதியிருக்கிறார். கர்நாடக சங்கீத சீசன் பின்னணியில் விகடன் பிரசுரமாக வந்திருக்கிறதாம். அதே புத்தகத்தைப் பற்றி காமேஸ்வரி அய்யர் எனப்படும் அனுராதா ரமணனும் "சீசன் சிப்ஸ்" பகுதியில் அம்சமாக எழுதி இருக்கிறார்.



வாலிப சுந்தரத்துக்கும், மாமா சிவசுவுக்கும் வாழ்த்துக்கள்.

*******

அதே கற்றதும் பெற்றதுமில் கணவன் மனைவி பிரச்சினையைப் பற்றி குறும்பாக எழுதி இருந்தார். படிக்க சுவாரசியமாய் இருந்தது. கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு முன் விளக்குத் தூண் விளக்குத்தூணாக கால் தூக்கிக் கொண்டிருந்த ஆசாமிகள் எல்லாம் ஓவர் நைட்டில் சாமியார்களாகி வெறுத்து விடுகிறார்கள். " We are friends since we are able to tolerate each other " என்பதை "we remain married since we are able to tolerate " என்று மாற்றி வாசிக்கும் அளவுக்குத்தான் ஏகப்பட்ட திருமணங்கள். மேற்கின் தாக்கத்தில், அந்த சகிப்புத்தன்மை கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு விவாகரத்துகள் பெருகுவதை பார்க்கும் போது கொஞ்சம் கவலையாக இருக்கிறது.

என்றாலும், இன்னோரு புறம் ஸோ வாட்..?? என்றும் தோன்றுகிறது. திருமணம் என்ற அமைப்பு மற்ற எல்லா ஏற்பாடுகளை விட ஓட்டைகள் குறைவாக உள்ளதால் அதை ஏற்றுக்கொண்டு, அதே சமயம் பொருத்தமில்லா மனநிலைகளால் அதை abuse பண்ணி கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது. Forkம் பாயாசமும் என்று உருப்படியாக வந்த கட்டுரையை சமீபத்தில் வாசித்தபோது எழுந்த எண்ணங்களின் தொடர்ச்சி, தாத்தாவின் கட்டுரையைப் படித்ததும் சர சர வென பற்றிக் கொண்டு விட்டது. கல்யாணம் என்ற அமைப்பு உடைந்தால்தான் அதில் உள்ள செளகரியங்கள் தெரியும் என்றால், அதை உடைத்துப் பார்ப்பதும் கூட தவறில்லை.

ஆண் ஒரு காலத்தில் நிழல் தருகிறவனாக இருந்தான். இப்போது சகபயணியோடு இளைப்பாறுகிறவனாகவும் இருக்கிறான். மரங்களுக்கா பஞ்சம்..??

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...