Monday, March 20, 2006

திங்கள் சூசகம்

ஹி..ஹி..




111 இடங்களில் தனித்துப் போட்டி




இவருக்கு அதுக்குள்ள ரிசல்ட் எப்படித் தெரிஞ்சது..??




டேய் ..மூக்கு..!! ஜாக்கிரதை. என் நெலமை உனக்கும் வந்துரப் போவுது...!!

சாகஸ ஞாயிறு

ஒரே திருவிழாக் கூட்டம்தான். அந்த இடத்துக்குச் செல்லும் எல்லா நெடுஞ்சாலைகளும் ட்ராஃபிக் ஜாமில் மாட்டி, திக்கித் திணறின. ஏழெட்டு மைல் முன்பிருந்தே மினுக்கும் பலகைகள் வேறு வழிகளை நாடச்சொல்லி கெஞ்சின.
மக்கள் கேட்கவில்லை.குளிர்காலம் முடிந்து வெய்யில் கிட்டத்தட்ட "சுள்"ளென்று உறைக்குமாறு அடிக்கும் நேரம். எல்லோரும் ஓவர்கோட் போட்டுக் கொண்டு, முன்னெச்சரிக்கையாக சன்ஸ்கிரீன் பூசிக் கொண்டு(ம்), மடக்கு நாற்காலிகள், பெட்ஷீட்டுகள், குளிர் கன்ணாடிகள், சிப்ஸ்/பிஸ்கட், குழந்தை குட்டிகளுடன் பெரிய்ய்ய பேரணியாகவே கிளம்பி விட்டார்கள்.

மாயூரத்தில் அஞ்சாம் திருவிழாவுக்கு தேர் பார்க்கப் போவது போல இருந்தது.

இது அமெரிக்க விமானப் படையின் முக்கியமான நிகழ்ச்சி. மக்கள் தொடர்புக்கு அருமையான வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றே சொல்லுவேன். சாக்ரமண்டோவில், மேத்தர் ஃபீல்ட் என்ற இடத்தில் உல்ள ஏர்ஃபோர்ஸ் பேஸில், எல்லா வகையான பறக்கும் ஊர்திகளையும் கொண்டு வந்து வானில் சாகஸம் நிகழ்த்திக் காட்டும் ஏர் ஷோ. தலைக்கு 15$.
இத்துடன் கார் பார்க்கிங், மற்றும் உள்ளே சுற்றுலா பொருட்காட்சி திடலில் சாப்பாடு விற்பது போல அநியாய விலையில் சாப்பாட்டு/பீர் கடைகள்.
அடேங்கப்பா...இவங்க எது செஞ்சாலும் பெரிசா தான் இருக்குது. அபான வாயு விட்டாக் கூட மைக் வெச்சுத்தான் விடுவாங்க போல ;-)

ஆனா, இந்த நிகழ்ச்சி, உண்மையிலேயே பிரம்ம்ம்ம்....மாண்டம்தான்.

முதலில் கிளைடர் வகை குட்டி விமானங்கள். வானில் எல்லாப் பக்கமும் உரண்டு, புரண்டு, திரும்பி, கவிழ்ந்து, ஏறி, இறங்கி, வானத்திலேயே ஜாங்கிரி பிழிவது போலவும், ரங்கோலி போடுவது போலவும் ஆட்டம் காட்டி கிலி கிளப்பின. இவர்கள் இட்லியும் தேங்காய் சட்னியும் சாப்பிட வேண்டுமென்றால், அரிசி, உளுந்து, தேங்காய், பொட்டுக்கடலை, கொஞ்சம் ப.மிளகாய் , உப்பு, தண்ணீர் குடித்து விட்டு ஏறினால் போதும் என்று நான் அடித்த கமெண்ட் புரிந்து கொண்டு சிரிக்க யாரும் இல்லாமல் காற்றில் கரைந்தது. காரணம் வீட்டம்மாவும் பசியில் இருந்தார்.

அவ்வப்போது ஹெலிகாப்டர்கள் வந்து ஆட்களை மீட்பது, பாராசூட்டில் இறக்கி விடுவது, கீழே காயம்பட்டவனை காப்பற்றி தூக்கி செல்வது என்று செய்து காட்டின. கூட்டம் சற்றே அசந்து கால் பரப்பி உட்கார்ந்தபோது கிளைடர் விமானங்களில் இருந்து பலத்த சத்தத்துடன் குண்டு வீசி நெருப்பை கிளப்பி சூடேற்றின.



பிறகு வந்தன ப்ளூ ஏஞ்சல் வகை விமானங்கள். அத்தனை வேகத்தில், அத்தனை துல்லியமான இடைவெளியில் அத்தனை அழகாக ஆறு விமானங்கள் பறந்து நான்கண்டெதேஇல்லை. வேறு யாராவது படம் பிடித்துக் கொண்டு வந்து காட்டியிருந்தால் கண்டிப்பாக
க்ராஃபிக்ஸ் என்று லொள்ளி இருப்பேன். அத்தனை ஆச்சரிய சாகசம்.
நம்மூரில் இப்படிப்பட்ட ஏர்ஷோக்கள் குடியரசு தின, சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் பகுதியாக இருக்குமோ என்னவோ, இது போல எங்கும் மக்கள் தொடர்புக்காக நடத்துவது மாதிரி தெரியவில்லை. இப்படி எல்லாம் நிகழ்ச்சிகள் நடத்தினால், நம் பாதுகாப்புப் படை மீது நிஜமாகவே மரியாதை பிறக்கும். "மிலிட்டரிக்காரனா,,?? வம்பு பிடிச்ச பயலுங்கப்பா..?? ரம்மையும், கோழியயும் தின்னு கொழுத்துபுட்டு, ஊருக்கு லீவுல வந்தா கண்ட இடத்தில் வம்பு வளத்துகிட்டு திரியறானுங்க" போன்ற புகார்கள் குறையும்.

நேற்று காலை பத்து மணிக்கு உள்ளே போன நாங்கள் வீட்டுக்கு வரும்போது மணி ஆறரை. வீட்டுக்கு வந்து சாப்பிட்டு விட்டு அடித்துப் போட்டாற்போல தூங்கிவிட்டு, காலையில் ஆபீஸ் விரையும்போது, மேலே ஒரு அலுமினியப் பறவை ஆடாமல், அசையாமல் நேராகச் சென்றது.

ஆச்சரியமாக இருந்தது. பைலட்டுக்கு போர் அடிக்காது..?? ;-)

Wednesday, March 01, 2006

லல்லல்லா...லாலு

இந்திய அரசியலில் உச்சபட்ச கேலிக்கு உள்ளாகும் ஆட்களில் லாலுவும் ஒருவர் என்பது புதிய செய்தி இல்லை. அவருக்காகவே ஸ்பெஷலான ஜோக்குகள், அவருடைய பேட்டி க்ளிப்பிங்குகள், அவருடைய குழந்தைகளின் எண்ணிக்கை என்று எல்லாமெ நமக்கு ஜோக்குதான்.



என்னுடைய காலேஜ் சீனியர் - ஐ.ஆர்.எஸ் நண்பர் பாலா, தன்னுடைய பேட்ச்சில் இருந்த பீஹார் நண்பர்கள் லாலுவின் மேல் வைத்திருந்த அபார மதிப்பை, எனக்கு ஒரு காலத்தில் சொன்னார். மீடிவாவின் சித்தரிப்புக்கு மாறாக லல்லு எவ்வளவு நல்ல மனிதர் என்றும் அவர் சொன்னபோது நம்பவில்லை.

இந்த வார விகடனில் வந்திருக்கும் கலக்குறாரு லாலு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் பார்வைக்கு :


ஒரு நல்ல ஜோக் சொல்லுங்களேன்’ என்று யாராவது கேட்டால் தடுமாற வேண்டிய தேவையே இல்லை. சும்மா ‘லாலு’ என்று சொன்னாலே போதும்! சிரிப்பு தானாகவே வரும்! அப்படி ஒரு காமெடியனாக பலராலும் சித்திரிக்கப்பட்டு வருகிறவர்தான் முன்னாள் பீகார் முதல்வரும் இந்நாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ்! அப்படிப்பட்டவர் கடந்த இரண்டு வருட காலமாகப் பலரும் பாராட்டும் அளவுக்கு ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பித்துக் கொண்டிருப்பது, ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான விஷயம்! ரூபாய் 14,293 கோடி உபரி பட்ஜெட்டாக இந்த முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்து அசத்தியிருக்கிறார் லாலு.

‘Right person at right place and at right time’ என்பார்கள் ஆங்கிலத்தில். சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருக்கும் மிகச் சரியான ஆளுக்கு எல்லாமே நன்றாக நடக்கும்’ என்பதுதான் இதன் பொருள். கடந்த சில ஆண்டுகளாகவே நம் நாட்டின் தொழில்துறை நல்ல முன்னேற்றத்தைச் சந்தித்து வருகிறது. முன்னேறி வரும் எந்த ஒரு நாட்டிலும் போக்குவரத்துத் துறை முக்கியத் துவம் பெறும். அதிலும் சரக்குப் போக்குவரத்துத் துறை அதிவேகத்தில் முன்னேறும். இப்படி ஒரு தருணத்தில்தான் லாலு பொறுப்பேற்றார். Ôகாக்கை உட்காரப் பனம்பழம் விழுந்ததுபோல தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளுக்கு லாலு பெயர் தட்டிச் செல்கிறார் எனச் சொல்பவர்களும் உண்டு.

முதலில் லாலு என்ன செய்திருக்கிறார் எனப் பார்ப்போம். மக்களை நேரடியாகப் பாதிக்கும் விஷயம் என்பதால், இரண்டாம் வகுப்புக் கட்டணத்தில் பொதுவாகவே யாரும் கைவைப்பதில்லை. லாலுவும் இரண்டாம் வகுப்புக் கட்டணத்தை உயர்த்த வில்லை. அதேசமயம், முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. கட்டணங்களை பத்து சதவிகிதத்தில் இருந்து பதினைந்து சதவிகிதம் வரை குறைத்துள்ளார். ஐந்நூறு ரூபாய்க்கும் ஆயிரம் ரூபாய்க்கும் விமானப் பயணம் சாத்திய மாகியுள்ளதைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள சமயோசிதமான முடிவு இது. நடுத்தட்டு மக்களும் பயணம் செய்யும் விதமாகத் தற்போதைய ஏ.சி. 3 டயர் கட்டணத்தைவிட 25 சதவிகிதம் குறைவான கட்டணத்தில் ஏ.சி. பயணத்துக்கும் வழிவகுத்திருக்கிறார். ‘ஏழைகள் ரதம்’ (கரீப் ரத்) என்ற பெயரில் இதற்கென தனி ரயிலே அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ரயில்வேக்கு முக்கிய வருவாயே சரக்குப் போக்குவரத்தில் இருந்துதான். பல எண்ணெய் நிறுவனங்கள் குழாய் மூலமாக பெட்ரோலியப் பொருட்களைக் கொண்டுசெல்ல ஆரம்பித்திருப்பதால், அது ரயில்வேயைப் பாதிக்கலாம் என்பதை உணர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சரக்குப் போக்குவரத்துக் கட்டணத்தை 8 சதவிகிதம் குறைத்துள்ளார். மற்ற சரக்குப் போக்குவரத்துக் கட்டணமும் பெரிய அளவில் உயர்த்தப்படவில்லை. இரும்பு, எண்ணெய், சிமென்ட் போன்ற விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு சீஸனைப் பொறுத்துக் கட்டணத்தில் இருபது முதல் முப்பது சதவிகிதம் வரை சிறப்புக் கழிவு அறிவிக்கப்பட்டுள்ளது. சிமென்ட் மட்டுமல்லாது, அதன் தயாரிப்புக்குத் தேவை யான மூலப் பொருட்களையும் இனி ரயில் மூலமாகவே கொண்டுவருவார்கள் என்பதால், இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு தேர்ந்தெடுத்த பிசினஸ்மேன் போல லாலு பரிணாமம் எடுத்திருப்பதையே இது காட்டுகிறது! அதிலும், சாலைப் போக்குவரத்தையே நம்பி இருந்த நிறுவனங்கள், சரக்கு லாரிகளில் ஓவர்லோடுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புக்குப் பின் கொஞ்சம் உடைந்து போயிருந்தன. இந்நிலையில் அவர்களுக்கு லாலுவின் பட்ஜெட் ஒரு வரப்பிரசாதம்தான். கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள ரயில்வே முன்வந்திருப்பது, அதன் சிந்தனை ஓட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைக் காண்பிப்பதாக அமைந்துள்ளது. அதேபோல பாராட்டப்பட வேண்டிய துணிச்சலான முயற்சி, கன்டெய்னர் ரயில்களில் தனியாருக்கு அனுமதி. அதேபோல, பயன்படுத்தப்படாமல் நாடெங்கும் கிடக்கும் ரயில்வேக்கு சொந்தமான ஏகப்பட்ட இடங்களைப் பல வகைகளில் தனியார் பயன்பாட்டுக்கு வாடகைக்குக் கொடுத்து காசு பார்த்திருப்பதும் சரியான முயற்சியே!

குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சமும் லாலுவின் பட்ஜெட்டில் உண்டு. இதுவரை சுமார் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் 80 வகை சரக்கு களாகப் பிரிக்கப்பட்டு, அதற்குத்தக்க போக்குவரத்துக் கட்டண விகிதம் அமைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது இந்த எண்ணிக்கை 28 வகைகளாகப் பிரிக்கப்பட்டு, கட்டண விகிதம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது. லாலுவுக்குப் பாராட்டுக் கிடைப்பதற்கு ரயிவே நிர்வாகத்தின் திறமையான நடவடிக்கைகளும் ஒரு காரணம். ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குப் பொருட் களை எடுத்துச் செல்வதற்கு ஆகும் செலவான ‘காஸ்ட் ஆஃப் காரேஜ்’ டன் ஒன்றுக்கு 61 பைசாவில் இருந்து 51 பைசாவாகக் குறைந்திருப்பது, ரயில்வேயின் செயல்பாட்டில் ஏற்பட் டுள்ள முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. ரயில்வே ஊழியர்களுக்கான டி.ஏ. காரணமான செலவு அதிகரித்திருக்கும் அதே தருணத்தில், அதையும் மீறி ரயில்வே லாபத்தில் இயங்குவது, அதன் நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் சிறப்பான செயல்பாட்டைக் குறிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. தேர்தலை மனதில் வைத்து பால்காரர்கள், விவசாயிகளுக்குச் சலுகை என்பது போக, வழக்கம்போல புதிய ரயில்களுக்கான அறிக்கைகள் என்று இருந்தாலும், தமிழகத்துக்குத் தேவையான பல முக்கிய வழித்தடங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு திருப்திகரமாக அமைந்துள்ளது. புதுக்கோட்டை காரைக்குடிக்கு இடையிலான அகல ரயில்பாதை போன்ற மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் சில இந்த பட்ஜெட்டில் இடம்பிடித்திருப்பதற்கு கூட்டணிக் கட்சிகளில் யார் காரணம் என்ற போட்டாபோட்டி வராமல் இருந்தால் சரி!
2001ம் ஆண்டில் 350 கோடி ரூபாயாக இருந்த ரயில்வேயின் கையிருப்பு இன்று லாலுவின் கீழ் 11,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது! எந்த ஒரு தனியார் நிறுவனம்கூட நினைத்துப் பார்க்க முடியாத தொகை இது! இன்றைய நிலையில் லாலு மட்டும், ஏதாவது ஒரு மல்டி நேஷனல் கம்பெனிக்கு வேலை கேட்டு மனு செய்தாரென்றால், அவரைக் கொத்திக்கொண்டு போய்விடுவார்கள்! நிர்வாகம் தெரியாதவர் என எள்ளி நகையாடப்பட்ட சில தலைவர்கள், பின்னர் நிர்வாகத்தில் பின்னி எடுத்தது நாம் கண்ட ஒன்றுதான். அவர்கள் செய்ததெல்லாம் ஒன்றுதான்... ‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்’எனும்குறள் போல தனக்குத் தெரியாத விஷயத்தில் தேவையில்லாத தலையீடுகள் செய்யாமல், மக்களுக்கு என்ன தேவை என்பதை மட்டும் சொல்லி விட்டு, அவற்றை நிறைவேற்றும் பொறுப்பை உரிய அதிகாரிகளிடம் விட்டுவிடுவார்கள். அதைதான் லாலு செய்திருக்கிறார்... நிர்வாக சீர்திருத்தம் செய்தேன்... சலுகைகளை வாரிக்கொடுக்க முடிந்தது என்று ஒரே வரியில் இந்த பட்ஜெட்டை தானே விமர்சித்திருக்கிறார் லாலு!

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...