Tuesday, September 01, 2015

வானப்ரஸ்தம்

அதிகாலை ஆலயத்து வெளிபி்ரகாரம் போல
கைக்குழந்தை இல்லாத வீடு போல
வார்டன் இல்லா விடுதி போல
பாடகன் இல்லாத கச்சேரி மேடை போல
எங்கள் ”ஸ்ரீ துளசி இல்லம்” ...
நிச்சலனமாய் இருக்கிறது.
வருத்தம் உண்டு ; துக்கம் இல்லை
ஆதங்கம் உண்டு ; ஆயாசம் இல்லை
அடடா என்று தோன்றுகிறது; அய்யோ என்றில்லை.
தெரிந்தவைகளை
சொல்லிக் கொடுத்துவிட்டு
வகுப்பறை நீங்கிய ஆசிரியனை
நினைத்துக் கொள்வதுபோல்
தலைக்கு மேல் உயர்த்தி
கை கூப்பத் தோன்றுகிறது.
விடைபெற்றுக் கொண்டது அந்த
சிநேகமுள்ள சிங்கம்.

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...