Wednesday, February 25, 2004

ஆதங்கம்

=======

விடிகாலை விழிப்பு
நாளெல்லாம் உழைப்பு
வாரமிருமுறை எண்ணை முழுக்கு
செலவச் செழிப்பிலும்
புளி காரம் குறைந்த
அரைவயிற்றுச்சோறு
அச்சோறிலும் கட்டுகள் நூறு
மாதமொருமுறை வேப்பிலைச்சாறு
மதுதொடா பிடிவாதம்
பிறமாது தொடா பதிவிரதம்
அத்தனையும்.....
' உடம்பழிந்து சாவு வரலையே '
என எண்ணுகையில்
பயனற்றுப் போனது
பிளளைகள் எட்டி உதைத்த
பெருங்கிழட்டுப் பருவத்தில்


பி.கு:

அரிசிச் சோறு குறைத்து, சப்பாத்தி சாப்பிடும் டயட் கண்ட்ரோல் கொடுமை , இதை எழுத வைத்தது.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...