அழகிப்போட்டி
==========
நிறம் ஏற்றி
நகச் சாயம் பூசி
சிகை செதுக்கி
சருமம் மினுக்கி
அரிதாரம் அணிந்து
நெஞ்சு நிமிர்த்தி
இதழ் வண்ணத்துடன்
வளைவுகள் வெளித்தெரிய
உடை குறைத்து
ஆயிரம் பேர் பார்க்க
அங்கம் குலுக்கி
பட்டம் வென்ற
உலக அழகி
ஜெயிப்பதற்காய்
சொன்ன பதில்
" புற அழகு
பொருட்டல்ல...!!"
பி.கு:திண்ணையில் வெளிவந்த கவிதை. ஆனந்த விகடனில் Miss.World போட்டியை
பற்றி வந்த ஒரு கட்டுரையில் ஜெயித்த நங்கை எப்படி ஜெயித்தார் என்று எழுதி
இருந்தார்கள்.
உதட்டோரம் சிரிப்பும், உள்ளுக்குள் வெறுப்புமாய் எழுதியது...
Wednesday, February 25, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
யாருக்கும் தேவைப்படாத விளக்கம் - பிரசன்னரையும் அருணையும் தவிர ================================== கல்லூரி நாட்களில் இன்பச்சுற்றுலா சென்...
-
" புத்தகம் எதுக்குப் படிக்கணும் சுந்தர்ராஜன். நம்மளோட யோசனைக்கு மிஞ்சின எதை புஸ்தகத்துல புதுசா எழுதிடப் போறாங்க " என்று கேட்ட கல்ல...
No comments:
Post a Comment