Wednesday, February 25, 2004

அழகிப்போட்டி
==========

நிறம் ஏற்றி
நகச் சாயம் பூசி
சிகை செதுக்கி
சருமம் மினுக்கி
அரிதாரம் அணிந்து
நெஞ்சு நிமிர்த்தி
இதழ் வண்ணத்துடன்
வளைவுகள் வெளித்தெரிய
உடை குறைத்து
ஆயிரம் பேர் பார்க்க
அங்கம் குலுக்கி
பட்டம் வென்ற
உலக அழகி
ஜெயிப்பதற்காய்
சொன்ன பதில்

" புற அழகு
பொருட்டல்ல...!!"


பி.கு:திண்ணையில் வெளிவந்த கவிதை. ஆனந்த விகடனில் Miss.World போட்டியை
பற்றி வந்த ஒரு கட்டுரையில் ஜெயித்த நங்கை எப்படி ஜெயித்தார் என்று எழுதி
இருந்தார்கள்.

உதட்டோரம் சிரிப்பும், உள்ளுக்குள் வெறுப்புமாய் எழுதியது...

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...