Wednesday, February 25, 2004

பாலம்
=======

ஜீஸஸ் க்ரைஸ்ட் யாரப்பா
கேட்டான் பிள்ளை..
முருகன் தம்பியோ..??
சந்தேகம் அவனுக்கு....
பள்ளியில் நண்பரெல்லாம்
க்ரிஸ்மஸ் கொண்டாடயில்
சர்ச்சில் ஜபிக்கையில்
க்ரிஸ்மஸ் மரம் வைக்கையில்
சான்டா க்ளாஸ¤டன் பேசுகையில்
வீட்டில் 'தனந்தரும் கல்வி தரும்'
சொல்லும் குழப்பம் அவனுக்கு...
அலைந்து தேடி க்ரிஸ்மஸ் மரம்
வாங்கி, அலங்கரித்து
லைட் பொருத்தி ஓய்ந்து போய்
போர்ச்சுகல் ஒயினும்
கோழி வறுவலுமாய்
உட்காருகையில்
போன் வந்தது..
'அண்ணாமலை தீபம்டா இன்னைக்கு..
பெரிய கார்த்திகை..
வாசல்ல ரெண்டு வெளக்கேத்தி வை..
இன்னைக்காவது 'சுத்தமா' இரு..
என்றார் அப்பா..


பி.கு:

திசம்பர் 2003 ல் எழுதிய கவிதை. எதிலும் பிரசுரம் ஆகவில்லை. கிறிஸ்துமஸ் மரத்தைப் பார்த்து என் பிள்ளை குதூகலிக்கையில் எழுதியது

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...