எங்கே நீ
=========
உனை தவறவிட்ட தருணங்களை
நினைக்கையில் மட்டும்
இவனுக்கு புனர்ஜென்ம
நம்பிக்கை பூத்துக்குலுங்குகிறது...
நேசித்த தேவதை நீ உன்வழியே போனதும்
கிடைதததை ஏற்காமல் மனம் ஒவ்வாமல்
வாழ்வினின்றும் விடுபட்ட உன் முகத்தை
உலகெங்கும் தேடுகின்றேன்...
அலுவலில்..
பயணத்தில்....
தினவாழ்வு அவசரத்தில்..
எழுதும் கவிதைகளில்...
டாஹோ மலைத்தொடரில்...
க்ராண்ட் கான்யான் பள்ளத்தாக்கில்...
கோல்டன் கேட் பாலத்தில்
நயாகரா நீர்வீழ்ச்சியில்...
எங்கோ கூடப்படித்த கருணாநிதியும்,
அகஸ்மாத்தாய் சந்தித்த ஆராவமுதனும்,
அப்பாவின் பால்ய நண்பரும்,
சிங்கப்பூர் செல்வசேகரனும்
என் கண்ணில் தட்டுப்பட
எங்கே நீ....???
பி.கு: "அழகி" யின் பாதிப்பில்..............
Wednesday, February 25, 2004
Subscribe to:
Post Comments (Atom)
ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ?? - கூத்தோ கூத்து ----------------------------------------------------------------------------------- ஃ...
-
இந்த வார அவள் விகடன் இதழில் என் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. விகடனில் இருக்கும் நண்பர் நம் வலைப்பதிவுகள் அனைத்தையும் தொடர்ச்சியாக படித...
-
யாருக்கும் தேவைப்படாத விளக்கம் - பிரசன்னரையும் அருணையும் தவிர ================================== கல்லூரி நாட்களில் இன்பச்சுற்றுலா சென்...
-
" புத்தகம் எதுக்குப் படிக்கணும் சுந்தர்ராஜன். நம்மளோட யோசனைக்கு மிஞ்சின எதை புஸ்தகத்துல புதுசா எழுதிடப் போறாங்க " என்று கேட்ட கல்ல...
No comments:
Post a Comment