Wednesday, February 25, 2004

எங்கே நீ
=========

உனை தவறவிட்ட தருணங்களை
நினைக்கையில் மட்டும்
இவனுக்கு புனர்ஜென்ம
நம்பிக்கை பூத்துக்குலுங்குகிறது...

நேசித்த தேவதை நீ உன்வழியே போனதும்
கிடைதததை ஏற்காமல் மனம் ஒவ்வாமல்
வாழ்வினின்றும் விடுபட்ட உன் முகத்தை
உலகெங்கும் தேடுகின்றேன்...

அலுவலில்..
பயணத்தில்....
தினவாழ்வு அவசரத்தில்..
எழுதும் கவிதைகளில்...

டாஹோ மலைத்தொடரில்...
க்ராண்ட் கான்யான் பள்ளத்தாக்கில்...
கோல்டன் கேட் பாலத்தில்
நயாகரா நீர்வீழ்ச்சியில்...
எங்கோ கூடப்படித்த கருணாநிதியும்,
அகஸ்மாத்தாய் சந்தித்த ஆராவமுதனும்,
அப்பாவின் பால்ய நண்பரும்,
சிங்கப்பூர் செல்வசேகரனும்
என் கண்ணில் தட்டுப்பட

எங்கே நீ....???


பி.கு: "அழகி" யின் பாதிப்பில்..............

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...