Wednesday, February 25, 2004

இந்த வார ஜூனியர் விகடனில் ராமதாஸ் அட்டைப்படம்.

பெரிய கட்சிகளும், பத்திரிக்கைகளும் இவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்
தருகிறார்கள் என்று புரியவில்லை. ஜாதியை அடிப்படையாக வைத்து அவர் துவங்கிய
வன்னியர் சங்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி என்று புனைப் பெயர் சூடிக் கொண்டு
ஒவ்வொரு தேர்தலுக்கும் தி.மு.க/ அதிமுக என்று மாறி மாறி சவாரி செய்து
வேகமாக வளர்ந்து வருகிறது.

இது மிக கவலை தரும் விஷயம். பெரிய கட்சிகளின் ஊழலும், குடும்ப அரசியலும்
காலில் விழும் கலாசாரமும் ஒழிய வேண்டும் என்ற விஷயத்தில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் , எல்லா சமூக மக்களையும் ஒருங்கிணைத்து , ஒரு போதுவான நோக்கத்துக்காக
போராடுவதாக சொல்லிக் கொள்ளும் அவர்களுடைய கட்சிகளுக்கினையாக, பா.ம.க வும்
வளருவது, ஜாதிய ரீதியாக தமிழகத்தை பிளவு படுத்தும். அதிக குழப்பங்களுக்கு
வழி வகுக்கும்.

இந்த டாகடரைப் பின்பற்றி தேவர்களும், தேவேந்திரகுல வேளாளர்களும்,
முதலியார்களும், சிறுத்தைகளும் இப்போது வளரமுடியாவிட்டாலும், வளர்ந்து வரும்
பா.ம.கா வால் வன்னியர் அடையும் நன்மைகளைப் பார்த்து விட்டு மற்ற இன மக்களும்
ஜாதிய ரீதியாக தன் வேட்பாளர்களுக்கே நாளடைவில் ஓட்டளிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
அது நடந்தால், தமிழ்நாட்டை ஆண்டவன் என்ன..?? யாராலும் காப்பாற்ற முடியாது

ஒரு தேர்தலிலாவது திமுகவும் , அதிமுகவும் தீவிரமாக முடிவெடுத்து பா.ம.க வை
தனியே விடவேண்டும். வன்னியர் பகுதிகளில் அவர் செயித்தாலும் பரவாயில்லை,
அப்போதுதான் அவர் வளச்சி அந்தப் பகுதிகளோடு நிற்கும்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...