Wednesday, February 25, 2004

ராயர் காப்பி க்ளப்பில் இருந்தபோது , மெதப்பாக ' "வலைப்பூவா..?? தனிப்புலம்பல்யா அது ' என்று ஏஞ்சல் ராமச்சந்திரனுடன் ( நன்றி: ரமணீதரன்) சேர்ந்து கொண்டு வெங்கட்டை விவாதத்திற்கு இழுத்தது நினைவுக்கு வருகிறது.

இப்போது நானும் வலைப்பூக்களில் தொடர்ந்து எழுத உத்தேசித்து இருக்கிறேன்.மதியக்காவிடம் மடல் பொட்டு தமிழ் வலைப்பூ இணைப்புகளில் சேர்த்து விட வேண்டியதுதான்.

தனிப்புலம்பலோ..., என்னவோ, இந்த மாதிரி கட்டற்று இருப்பது பிடித்திருக்கிறது. குழுக்களில் இம்மாதிரி , விஸ்ராந்தியாய் நமக்குப் பிடித்ததை எழுத முடியாது. தனி மடல் போட்டாலும் பொதுவில் போட்டு விடுவார்கள். வம்பு...

திருவிளையாடல் ஞானப்பழத்தை கோட்டை விட்ட 'ஸ்ரீதேவி' பேசுவது போல், ' எங்கோ போகிறேன்..எனக்கென்று ஓர் உலகம் ..எந் நாடு..என் மக்கள்..."

என்று...

இதுதான் என் "பழனி"

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...