Thursday, February 26, 2004

Boys பொன்மொழிகள்
-------------------

நாம்எடுத்துக் கொள்வதுதான் வாழ்க்கை .எப்போதும் அபபடித்தான் இருந்தது ,
இருக்கும். வாழக்கை மட்டும் மகிழ்ச்சி தராது அதை விரும்ப வேண்டும்.
வாழ்க்கை உனக்கு நேரமும் இடமும் மட்டும தரும் நிரப்ப வேண்டியது உன்
சாமர்த்தியம்


எந்தச் சமயத்திலும் கைவிடாமல் குறிக்கோள் வைத்து வெல். முயற்சியை
நிறுத்தும்போதுதான் தோற்கிறாய்


தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான் சாம்பியன்கள் மற்றவர்கள்
நம்பவில்லையென்றாலும் 'நம்மால் முடியும்' என்பதை நம்பியவர்கள் , முடியும்
என்றால் முடியும்


தோல்வியிலிருந்து எதும் கற்றுக் கொள்ளாவிட்டால்தான் அது உண்மையான
தோல்வி.. தோல்வி உங்களைஅடையாளம் காட்டும் நான் மற்றபடி வாழ்ந்தால்
இன்னும் தப்புகள் செய்வேன்


களத்தில் குதியுஙகள். கைகள் அழுக்காகட்டும், தடுக்கி விழுங்கள். எழுந்து
நட்சத்திரங்களைச் சாடுங்கள்


மேதை என்பது ஒரு சதவிகிதம்தான் உள்ளுணர்வு மற்றதெல்லாம் வியர்வை
ஆபத்தில்லாத, ரிஸ்க் எடுக்காத பாதைதான் அதிக ஆபத்தானது


வெற்றிக்கு அதிக நாளாகும். நாள் மட்டும்தான்


சின்னக் காரியங்களை நன்றாக இப்போது செய்யங்கள் நாளடைவில் பெரிய
காரியங்கள் உங்களைத் தேடிவரும் எல்லா ஆரம்பங்களும் சிறியவையே
ஆரம்பிப்பதுதான் கடினம்


வாய்ப்புகளைப் பெரும்பாலோர் தவறவிடுவதற்கு காரணம் அவை உழைப்பு
வடிவத்தில் வருவதால் இதுதான் சந்தர்ப்பம் என்று எதிலும் எழுதி ஒட்டியிருக்காது


கிடைப்பது உயிர் வாழப்போதும். கொடுப்பதில்தான் நிஜ வாழ்க்கை
இருக்கிறது மற்றறவரை உற்சாகப் படுத்தும்போது நமக்கு எத்தனை உற்சாகம் ஏற்படுகிறது!


யாரும் தான்தோன்றியல்ல. நம்மை ஆக்கியவர்கள்ஆயிரம்பேர்,ஒவ்வொருவரும்
நமக்கு ஒருநல்ல காரியம் செய்திருக்கிறார்கள் உற்சாக வார்த்தை சொல்லியிருக்கிறார்கள்
குணத்திலும் எண்ணத்திலும் வெற்றியிலும் உதவியிருக்கிறார்கள்


நட்சத்திரமாக சொந்த வெளிச்சம் தேவை, சொந்தப்பாதை தேவை. இருட்டைக்
கண்டு பயப்படக்கூடாது இருட்டில்தான் நடசத்திரங்கள் நன்றாக ஜொலிக்கும்

(சுஜாதாவின் பொன்மொழிகள் - நன்றி:மரத்தடி)

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...