Wednesday, February 25, 2004

இணையவெளியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்களின் எண்ணிக்கை ஜாஸ்தியாக இருக்கிறது. இந்தத் தலைமுறை மெட்ராஸ்காரர்களாக இருந்தாலும் , முன் காலத்தில் காவேரிக்கரையிலிருந்து புறப்பட்டு வந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

கூடவே தாமிரபரணிக்காரர்களும், யாழ்ப்பாணத்துக்காரர்களும்

நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை என்று சொன்னதெல்லாம் அந்தக் காலம். இப்போதெல்லாம் தெருவுக்கு தெரு கம்ப்யூட்டர் சென்டர் தான். கல்லூரிக்கு கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட் தான். போறியியல் படித்தால்தான் நல்ல வேலைக்குப் போக முடியும் என்ற மாயையை உடைத்து , எல்லோரையும் டாலர்களிலும், பவுண்டுகளிலும் , லட்சங்களிலும் புழங்க விட்டது நிஜமாகவே புரட்சி தான்.

அப்படி வந்த மக்கள் தான் , ஏதாவது ஒரு செயலியை இறக்கிக் கொண்டு, தமிழ் எழுத ஆரம்பித்து விட்டார்கள்.தமிழ்நாட்டில் கூட தமிழ் எழுத/படிக்க யோசிக்காதவர்கள், அயல்தேசம் வந்ததும் தமிழ்நேசர்களாகி விடுவது ஒருவகையில் அதிர்ஷ்டம்தான்.

எனக்குத் தெரிந்த இணையவெளி தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர்கள்:

எல்லே ராம் - மாயவரம்
பத்ரி - நாகை
வெங்கட்டு - ஒரத்தநாடு / கும்பகோணம்
ஹரிகிருஷ்ணன் - மன்னார்குடி (??)
நம்பி
பா.ராகவன் ( திருக்கண்ணமங்கை)
புகாரி
பரிமேலழகர்
உஷா ராமச்சந்திரன்
கே.வி.ராஜா
ரமேஷ்குமார் அலையஸ் ரஜினி ராம்கி
அருண் வைத்யநாதன்


ஹி..ஹி..நானும் தஞ்சாவூர் மாவட்டம் தான்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...