Wednesday, February 25, 2004

ஆளாளுக்கு மடலாடும் குழுக்களில் "முகமூடித் தொல்லை தாங்கலை..தாங்கலை" என்று புலம்புகிறார்களே ஒழிய, எல்லோரும் அதை உள்ளுக்குள் ரசிப்பதாகவே தோன்றுகிறது.

பின் என்ன..?? 'பெயரிலி' யின் வலைப் பக்கத்தில், எத்த்னை ஆட்கள் பின்னூட்டம் தருகிறார்கள் தெரியுமா..?? பின்னூட்டம் தருபவர்களைத் தவிர ஏராளமான பேர் படிக்கிறார்க என்றும் தெரிகிறது.மடலாடற் குழுக்களில் அந்தப் பக்கத்தைப் பற்றி கிட்டத்தட்ட நிறைய்ய பேர் எழுதி விட்டார்கள்.

என்னைப் பொறுத்த்வரை, அப்படி எழுதுவது இன்னமும் ஒரு படி அதிகம் சுதந்திரம் அளிக்கிறது என்று நினைக்கிறேன். காட்டாறு மாதிரி. இன்னோரு பலனும் இருக்கிறது. எத்த்னை பேர் மாற்றி நவராத்திரி ஜிவாஜி ஸ்டைலில் எழுதினாலும் , "அட..என் எழுத்து நடை இத்த்னை பேருக்கு , 'இது நாந்தான் ' என்று கண்டுபிடிக்க வைக்கிறதே " என்ற் சந்தோஷம். identity crisis..??

எனக்குத் தெரிந்த பெரு மதிப்பிற்குரிய ஸ்ஸ்ஸீரியஸ் கவிஞர் ஒருவர் இது வரை பதினைந்துக்கும் மேற்பட்ட முகமூடிகளில் உலா வருகிறார்.ஆனால் , தமிழ் இணையத்தில் தவிர்க்க முடியாத ஆசாமி அவர். தனிப்பட்ட முறையில் பலருடன் அன்பு பாராட்டி ஊடாடி வருகிறார்.

அவருடைய பெயர்கள் அத்த்னையையும் ஊகித்து, அவருடைய உண்மையான பெயரையும் எழுதுபவர்க்கு, கந்தனின் பெயரில் ஒரு விசேஷ அர்ச்சனை செய்து, பஞ்சாமிர்த பார்சல் அனுப்பி வைக்கப்படும்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...