Wednesday, February 25, 2004

வந்ததிலும் சென்றதிலும்

========================

அலமாரியில்
உனக்குப் பிடித்த
நீள்கோட்டு சட்டைகள்
கள்ளப் புன்னகை பூக்கும்
மலையுச்சிப் பிள்ளையார்
பைத்தியம் போல் குடித்துவிட்டு
புலம்ப ஒரு காரணம்
ஆளில்லா தியேட்டர்களைப்
பார்த்தால் வரும் சிரிப்பு
வீடு புகுந்து பெண் தூக்கி
ஸ்நேகிதனுக்கு மணம் செய்ய
தேவைப்பட்ட வெறி
காசுக்கு வந்தவளிடம் கண்ணீரோடு
புணர்ந்துவிட்டு சொல்ல ஒரு கதை
சுமாராய் நாலைந்து
தன்னிரக்கக் கவிதைகள்
மண்டையில் குறைந்த மயிர்
கட்டுக் கட்டாய்
கடுதாசிப் பொட்டல்கள்
நிசப்தம் பயமுறுத்தும்
தூக்கம் கெட்ட இருட்டுக் குழி
அடர்தகட்டு ஒலிவரிக்குள்
அழுது தீர்க்கும் சினிமாக்காரன்
பெற்றவளிடம் கூட வந்துவிட்ட
அவநம்பிக்கை
பிரேதக் களையுடன் ஒரு
கல்யாண போட்டோ
பெருமுச்சோடு தாம்பத்யம்
உன் மேல் வைத்த பிரியத்தின்
மறுஜனன பயனாளியாய் ஒரு
பிள்ளை


பி.கு:

ஒரு தடவை ப்ரிய வலைக்குள் விழுந்ததற்கே இத்த்னை கவிதைகளா..?? எனக்கே ஆச்சரியம்தான்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...