Wednesday, February 25, 2004

நண்பர்கள் முதலில் மன்னிக்க வேண்டும்.

வெகு நாட்களாக என் வலைப்பூவில் தொடர்ந்து எழுத முடியவில்லை.

பார்த்துக் கொண்டிருக்கும் கணிணிக் கூலி உத்தியோகத்தில் எதிர்பாராமல் ஏகப்பட்ட வேலைப்பளு.

பின்னூட்டம் கொடுத்த நண்பர்கள் அத்த்னை பேரும் மறக்காமல் இயங்கு எழுத்துருவில் மாற்றியமைக்க பரிந்துரைத்திருக்கிறார்கள்.

மரத்தடி தளபதியின் வலைப்பூவை படித்து , இதை செய்ய உத்தேசம்.

எல்லாம் வல்ல இரைவன் எனக்கு நேரமும் , பொறுமையும் அளிக்க வேண்டிக் கொள்ளுங்கள்.

இந்த வார கற்றதும் பெற்றதும் பக்கத்தில் கனிமொழியின் கவிதையை
சுஜாதா சாம்பிள் காட்டியிருக்கிறார்.

கனிமொழியின் மொழியில் நாசுக்கு அதிகம். அவர் தகப்பனார் மாதிரி நேரடி தாக்குதல் இல்லை.

அவருடைய பெண்மை மிளிரும் அழகைப் போலவே கவிதையும் கச்சிதம்.

No comments:

Post a Comment

 ஃபெட்னா-2023 --பாட்டுக்கு பாட்டு ??  - கூத்தோ கூத்து  ----------------------------------------------------------------------------------- ஃ...